முஸ்லிம் தனிக் கட்சிகள் தேவையா?

(மொஹமட் பாதுஷா)

இந்தத் தலைப்பு எழுப்புகின்ற கேள்வி, முஸ்லிம்களுக்கு அடிக்கடி எழுவதுண்டு. முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் எதற்காக என்று கேட்கத் தோன்றுமளவுக்கு, அவர்கள் செயற்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம் உள்ளன.

‘உலக முடிவு’ மலையின் அடிவாரத்தில் துரத்தும் பூதம்

(க. மஹிந்த குமார்)

பலாங்கொடை, நன்பெரியல் பிரம்டண் தோட்ட பிரிவானது பலாங்கொடை நகரில் இருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. அங்கு சுமார் 45 தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த சுமார் 500 பேர் வாழ்ந்து வருகின்றனர். ‘உலக முடிவு’ என்று அழைக்கப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தத் தோட்டத்துக்கு, தேர்தல் காலங்களில் மாத்திரமே அரசியல்வாதிகள் செல்வார்கள். மற்றைய நாள்களில் அங்கு ஒரு தோட்டம் இருக்கின்றது என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதில்லை; அந்தத் தோட்டம் தொடர்பாக எவரும் தேடியும் பார்ப்பதில்லை.

இறுதியில் சொதப்புவது எப்படி?

(டி.கார்த்திக்)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடரை இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக வென்று எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. 2013ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றதோடு சரி. அதன்பிறகு நடத்தப்பட்ட ஐசிசி தொடர்களில் இந்திய அணி அரையிறுதி, இறுதிப் போட்டி வரை முன்னேறியும் கோப்பையை வெல்லாமல் திரும்பும் சோகம் தொடர்கிறது. நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியா சொதப்ப என்ன காரணம்?

சிறுமி விற்பனை; மேலும் 17 பேர் கைது

15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளம் ஊடாக கல்கிசையில் பாலியல் செயற்பாடுகளுக்காக கொள்வனவு செய்த மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (30) தெரிவித்தார்.

‘பேர்ள் தீயால் 200 உயிரினங்கள் மரணம்’

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியெறிந்தமை மற்றும் அதிலிருந்து வெளியேறி எண்ணெய் இரசாயன திரவங்களால், கடல்வாழ் உயிரினங்கள் 200 மரணமடைந்துள்ளன என சட்டமா அதிபர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். கப்பலில் ஏற்பட்ட தீயை அடுத்து ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாட்டால் 176 ஆமைகள், 4 திமிங்கலங்கள் மற்றும் 20 டொல்பின்கள் இதுவரையிலும் மரணமடைந்துள்ளன.

இலங்கை: கொரனா செய்திகள்

ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோ கொரோனா தடுப்பூசியை இன்று (30) பெற்றுக்கொண்டார். தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையின் முதலாவது பழங்குடியினர் அவராவார்.

மத்தியக் கிழக்கு பயணிகளுக்கான தடை நீக்கம்

மத்திய கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து வருகை தரும் விமானப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை, நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது. “கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமன், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கே நிபந்தனைகளுடனான அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார். இந்த அனுமதி இன்று (30) முதல் வழங்கப்பட்டுள்ளது என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் கூறினார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மீண்டும் மலரும் ஜனநாயகம்: நிரந்தர அமைதிக்கு வித்திடட்டும்

ஜம்மு மற்றும் காஷ்மீரில், நடைமுறையில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும், ஒன்றியப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலை விரைவில் நடத்தவும், அந்தப் பிராந்தியத்தில் உள்ள முன்னணி அரசியல் தலைவர்களுடனும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தவும் ஒன்றிய அரசு கொண்டிருக்கும் அக்கறையை காஷ்மீர் தலைவர்களுடனான பிரதமரின் சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளது.

மெகெல்லேயில் திக்ரேயின் முன்னாள் ஆட்சியாளர்கள்

எதியோப்பியாவின் திக்ரே பிராந்தியத் தலைநகரான மெகெல்லேயை மீண்டும் கட்டுப்படுத்துவதாக அப்பிராந்தியத்தின் முன்னாள் ஆட்சியாளர்கள் நேற்று தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ எட்டு மாத மோதல்களின் பின்னரே குறித்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தமொன்றை குறித்த ஆட்சியாளர்களை வெளியேற்றிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்க ஆரம்பித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக மொடேர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சின் ஆலோசனைக்குழு அனுமதியளித்துள்ளது.