சம்பந்தனால் முடியாதா?

‘வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், வடக்குக்கு பொருத்தமில்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்து அதனை நிறுத்த முடியும் தானே, பின்னர் ஏன் வீணாக வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றுகின்றீர்கள்?’ என வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து கேள்வியெழுப்பினார்.

(“சம்பந்தனால் முடியாதா?” தொடர்ந்து வாசிக்க…)

ஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்

இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள், முன்னைய ஆட்சியாளர்கள் மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, முன்னைய ஆட்சியில் ஊடக சுதந்திரம் முழுமையாக இருக்கவில்லை என்பதே. ஆனால்  தற்போதைய ஆட்சியாளர்கள் அண்மைக்காலங்களில் ஊடகங்கள் மீது கடுஞ்சினங்கொண்டு அதனை வெளிப்படுத்தும் விதத்தினைப் பார்த்தால், முன்னைய ஆட்சியின் ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பதற்கு இவர்கள் அருகதையே இல்லாதவர்களாக தெரிகிறார்கள். அத்துடன் இவர்கள் குற்றஞ்சாட்டும் ஊடகங்கள், முன்னைய சர்வாதிகார  ஆட்சிக்கு துணைபோனவை எனவும் இனவாதத்தினை தூண்டுகின்றன  எனவும்  கூறி  இவர்கள் தங்கள் ஆவேசமான பகிரங்கப் பேச்சுகளுக்கு நியாயம் கற்பிக்கவும் முயல்கிறார்கள்.

(“ஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்” தொடர்ந்து வாசிக்க…)

பிரஸெல்ஸ் தாக்குதல்தாரிகளின் விபரம் தெரிந்தது: மூன்றாம் நபரை தேடி வேட்டை

பிரஸெல்ஸ் விமான நிலையத்தில் இரு ஐ.எஸ். தற்கொலைதாரிகளுடன் இருந்த மூன்றாம் நபரை தேடும் பொலிஸ் வேட்டை நேற்றைய தினமும் தொடர்ந்தது. 31 பேரை பலிகொண்ட தாக்குதலின் இரு சகோதரர்கள் உட்பட மூன்று நபர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதில் கடந்த செவ்வாய்க்கிழமை விமானநிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்த பிராஹிம் அல் பக்ராய் தொடர்பில் பெல்ஜியம் நிர்வாகம் கண்காணிக்க தவறியதாக துருக்கி ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். ஆயுதக் கடத்தல் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இவர் கடந்த ஆண்டு துருக்கியில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.

(“பிரஸெல்ஸ் தாக்குதல்தாரிகளின் விபரம் தெரிந்தது: மூன்றாம் நபரை தேடி வேட்டை” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பதிவு 8)

1961 இல் எங்கள் பெரிய அண்ணன் திருமணம் நடந்தது. அம்மா காட்டிய ஆர்வமும் பெரிய அண்ணன் திருமணம் உடனே நடக்க காரணமானது.இதனால் கொஞ்சம் கடன் வந்தது.அதே வருடம் சிறுபான்மைத் தமிழர் மகாசபை மூலமான ஆசிரியர் நியமனம் சரசாலைப் பாடசாலையில் கிடைத்தது.இது எங்கள் அய்யாவின் முயற்சிக்குக்கு கிடைத்த முதல் வெற்றியாக அமைந்தது.மேலும் அவருக்கு விரைவிலேயே நிரந்தர நியமனமும் கிடைத்துவிட்டது.நடராசாவின் பின்னால் சென்றோர் நியமனம் கிடைத்தாலும் நிரந்தரமாக பல வருடங்கள் காத்திருந்தனர்.எமது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் படித்த முதல் தலைமுறை ஆசிரியர்களை உருவாக்கிய பெருமை சிறுபான்மை தமிழர் மகா சபைக்கும் எம்.சி. சுப்பிரமணித்தையும் சாரும்.இதற்கு பாதை வகுத்துக் கொடுத்த பெருமை முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா அவர்களுக்கு இந்த சமூகம் கடமைப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து முன்னெடுத்த சிறிமா அம்மையாரும் போற்றப்பட வேண்டியவர்.

(“பற்குணம் (பதிவு 8)” தொடர்ந்து வாசிக்க…)

ஒவ்வொரு இலங்கையனும் ரூ 5.25 இலட்சம் கடனாளி

நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா கடன் சுமை இருப்பதாக ஜே.வி.பியின் தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கெரடாவுமான அநுரகுமார திசாநாயக்க நேற்று(23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிறந்த குழந்தை முதல் சுகவீனமுற்றிருக்கும் முதியோருக்கும் இந்தக் கடன்சுமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டுக்கு 9500 பில்லியன் ரூபா கடன்சுமை இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 10500 பில்லியன் ரூபாக்களாக அதிகரிக்கலாம் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.

(“ஒவ்வொரு இலங்கையனும் ரூ 5.25 இலட்சம் கடனாளி” தொடர்ந்து வாசிக்க…)

19 எம்.பிக்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்

கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையில் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர், நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது. மாகாண சபை உறுப்பினர்கள் ஐவர், பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் மூவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாஹல ரத்னாயக்க தெரிவித்தார்.

தற்கொலைக்குண்டுதாரி என் காதலியாம் – சரத் பொன்சேகா

என் வீட்டுப் பாதுகாப்பைக் கூட கவனத்திற்கொள்ளாது, முழு நாட்டின் பாதுகாப்பையும் கவனத்திற்கொண்டிருந்த போதே, என் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், தற்கொலைக் குண்டுதாரி என காதலி என்று, எதிரணியினர் தற்போது கூறிவருகின்றனர்’ என்று, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“தற்கொலைக்குண்டுதாரி என் காதலியாம் – சரத் பொன்சேகா” தொடர்ந்து வாசிக்க…)

‘விஜயகாந்தை வளைத்தது இப்படித்தான்…!’ கடைசி நிமிட காட்சிகள்

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை பாடாய்ப்படுத்தும் சென்டிமெண்ட்டுக்கு மக்கள் நலக் கூட்டணியும் தப்பவில்லை. பங்குனி உத்திரத்தின் நல்லநேரத்தில் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார் விஜயகாந்த். இதனால், தி.மு.கவின் கடைசி நிமிட நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது.

(“‘விஜயகாந்தை வளைத்தது இப்படித்தான்…!’ கடைசி நிமிட காட்சிகள்” தொடர்ந்து வாசிக்க…)

ரோஹித் பெயரில் சட்டம் வரும் வரை போராட்டம்… எச்சரிக்கும் கன்ஹையா!

ஹைதராபாத்: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமூலாவின் பெயரில் சட்டம் இயற்றப்படும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா, ரோகித்தின் சகோதரர் ராஜா ஆகியோரை சில மாதங்களுக்கு முன் நேரில் சந்தித்து தேச துரோக வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்ஹையா குமார் ஆறுதல் கூறினார்.

(“ரோஹித் பெயரில் சட்டம் வரும் வரை போராட்டம்… எச்சரிக்கும் கன்ஹையா!” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பதிவு 7)

இடைச் செருகலாக

பண்டாரநாயக்க இறந்தாலும் அவரின் திட்டங்களை அரசு தொடர்ந்து முன்னெடுத்தது. இதன் பிரகாரம் வடபகுதியில் பல பாடசாலைகளை சிறுபான்மை தமிழர்களுக்காக மகாசபை மூலமாக நிறுவியது. இதன் மூலம் படித்த சிறுபான்மை தமிழ் இளைஞர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்குவதாக அறிவித்தது. இதனால் எம்.சி. சுப்பிரமணியம் தலைமையிலான மகாசபை தீவிரமாக இயங்கியது. 1960 இல் தனியார் பாடசாலைகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்டன. எமது கிராமப் பாடசாலையும் அரசு மயமானது. நடராசா அங்கு கற்பித்த போதும் நிரந்தர நியமனம் கிடைக்கவில்லை.

(“பற்குணம் (பதிவு 7)” தொடர்ந்து வாசிக்க…)