இந்திய இலங்கை ஒப்பந்தம்….ஆய்வுக்கணோட்டம் (Part 3)

இந்தியா விடுதலைப் புலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மற்றைய விடுதலை இயக்கங்களைச் விடுதலைப்புலிகளுடன் சரிசமமாக நடாத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள் சிலரது கருத்து முக்கியமானதாகும். அதில், இந்திய தனது பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த முயல்வது என்ற விடயத்தில் இராணுவ அடிப்படையில் இந்தியா அறிவுறித்தியபடியெல்லாம் புலிகள் நடந்து கொண்டனர் என்பது தான். இராணுவரீதியில் இலங்கை மீது அழுத்தத்தை கொடுப்பதற்காக இராணுவ இலக்குகள் மீது மட்டுமல்லாது சிங்கள மக்கள் இலக்குகள் மீதான தாக்குதல்களை நடாத்தும் படியும் இந்தியா வலியுறுத்தியது. இதன் அடிப்படையிலேயே அனுராதபுரத்தில் சிங்கள கிராம மக்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடாத்தி பல சிங்கள மக்களை படுகொலை செய்தனர். இந்தியா அறிவுறுத்தியபடி எல்லாம் விடுதலைபுலிகள் தாக்குதல்களை மேற்கொண்டு இலங்கை அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தனர்.

(“இந்திய இலங்கை ஒப்பந்தம்….ஆய்வுக்கணோட்டம் (Part 3)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 2)

இம்முகாமிலிருந்த பெண் கைதிகள் எதிர்பாராத சமயங்களில் நித்திரையிலிருந்து அடித்து எழுப்பப்பட்டு சுரங்க அறைகளுள் இழுத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வெளியே துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்கும். அடுத்தது நீ தானென கைதிக்கு சொல்லப்படும். கடுமையான சித்திரவதைக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள், சிறிய முகாம்களுக்கு – பெரும்பாலும் தென்மராட்சிக்கு மாற்றப்படுவர். தென்னந்தோப்புக்குள் அமைந்த இம்முகாமில் ஒரே சமயத்தில் 50 பேர் வரை சிறை வைக்கப்படுவர். இங்கு சித்திரவதை செய்வதில் இன்பம் காண்பதன் உச்சக்கட்டம் ஆரம்பத்தில் இருந்தே தொடங்கும்.
வேறு முகாம்களிலும் பெண் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

(“புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 2)” தொடர்ந்து வாசிக்க…)

திருமலையில் மக்களோடு மக்களாய்

28/07/2017இன்று  தமிழர் சமூக ஜனநாயக கட்சியினரால் திருகோணமலையில் மக்கள் சந்திப்பில் கட்சியின் தலைவர் ஸ்ரீதரன்(சுகு) ,ஆலோசகர் முன்னாள் வடகிழக்கு முதல்வர் வரதராஜ பெருமாள் மற்றும் திருமலை அமைப்பாளர் சத்தியன்

வடமராட்சியின் ஒளி குன்றாத விளக்கு தங்கவடிவேல் மாஸ்டர்.

தான் எங்கு சென்றாலும் அந்த இடத்தில் அறிவு விளக்கை ஏற்றிவைத்த ஆசிரியப் பெருந்தகை என்று அக்காலத்தே எல்லோராலும் போற்றப்பட்டவரே வல்வை கம்பர்மலையை சேர்ந்த தங்கவடிவேல் மாஸ்டர். இவரோடு தொடர்புபட்ட ஒவ்வொருவரும் தத்தம் அறிவுக்கும் தாம் எடுத்து காரியங்களுக்கும் ஏற்ப இவருடைய ஆற்றலை விளக்கி தமது பக்கமாக சேர்த்துக் கொள்வார்கள். காரணம் இருள் உள்ள இடங்கள் எல்லாம் இந்த விளக்கை தம்மோடு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டன. பொதுவாக விளக்கை வைத்திருப்பவர் அதை இரவல் விளக்கென்று சொல்வதில்லை ஏனென்றால் ஒளி உலகத்திற்கு பொதுவானது, அதுபோல இவரும் எல்லோரும் நேசிக்கும் பொது உடமைவாதியே.

(“வடமராட்சியின் ஒளி குன்றாத விளக்கு தங்கவடிவேல் மாஸ்டர்.” தொடர்ந்து வாசிக்க…)

மாணவி வித்தியா படுகொலை காரணமான சுவிஸ் குமாரை காப்பாற்ற பின்னனியில்….?

மாணவி வித்தியா படுகொலை காரணமான சுவிஸ் குமாரை காப்பாற்ற பின்னனியில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சரமான விஜயகலா மகேஸ்வரனுக்குள்ள தொடர்பு
மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் கொழும்புக்கு தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ள மத்திய, ஊவா மாகாணங்களுக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் வங்கிக்கணக்குகள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. இதற்கான அனுமதியை குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசா ரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசந்த சில்வா ஊர்காவற்றுறை பிரதான நீதிவான் மொஹம்மட் ரியாழிடம் நேற்று பெற்றுக்கொண்டுள்ளார்.

(“மாணவி வித்தியா படுகொலை காரணமான சுவிஸ் குமாரை காப்பாற்ற பின்னனியில்….?” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய இலங்கை ஒப்பந்தம்…..ஆய்வுக்கணோட்டம்! (Part 1)

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருட நிறைவுதினம் ஜூலை மாதம் 29ம் திகதியாகும். இவ் ஒப்பந்தத்தின் நோக்கம், இதன் பங்குதாரர்கள், வெற்றி-தோல்விகள், காலத்தில் அதன் முக்கியத்துவம் பற்றி 2007 ம் வருடம் கனடிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வானலையிலவ் நான் படைத்த ஆய்வுக்கணோட்டத்தின் பகுதி 1/10

இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் திகதி கைச்சாத்திடப்பட்டது. ஏறத்தாள 20 ஆண்டுகளின் பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஒப்பந்தத்தின் நோக்கம், இதன் பங்குதாரர்கள், வெற்றி, தோல்விகள், 20 வருட காலத்தில் அது தொடர்பான நிகழ்சிப் போக்குகள் என்பன பற்றிய ஆய்வுக்கண்ணோட்டமாக இத் தொடர் கட்டுரை அமைகின்றது.

(“இந்திய இலங்கை ஒப்பந்தம்…..ஆய்வுக்கணோட்டம்! (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 1)

புலிகளின் வதைமுகாம்.
( பெண்களுக்கான பிரத்தியே முகாம்கள்)

அறிமுகம்:
புலிகளிடமுள்ள கைதிகள் பற்றிய விவரங்களின் தொகுப்பு 5-10 வரையான எமது அறிக்கைகளில் வெளிவந்தது. கொடூரமாகவும் தரக்குறைவாகவும் கைதிகள் நடத்தப்படுவதன் கருத்தியல் பின்னணி பற்றியும் இவ்வறிக்கைகளில் அலசப்பட்டது. புலிகள் மக்கள்பாலும் தமது இயக்க உறுப்பினர்கள் தொடர்பாகவும் கொண்டுள்ள மனோபாவம் புலிகளது சமூகப்பார்வை பற்றிய வினாக்களை எழுப்புகிறது.

(“புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமே: ஐரோப்பிய ஒன்றியம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமேயாகும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கிய போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தொடர்ந்தும் புலிகள் பயங்கரவாத இயக்கமாகவே பட்டியலிடப்பட்டிருப்பர் என தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

(“விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமே: ஐரோப்பிய ஒன்றியம்” தொடர்ந்து வாசிக்க…)

இளம்செழியன் மீதான துப்பாக்கி பிரயோகவும் இதன் அதிர்வலைகளும்.

(சாகரன்)
முதலில் இத் துப்பாக்கிப் பரியோகம் இளம்செழியன் மீது நடாத்தப்பட்டதா? என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இதனை வைத்து அரசியல் நடாத்த முற்படும் தரப்பினர் கண்டனத்திற்கு உரியவர்கள் ஆவார. இலங்கைத்; தமிழர்களில் ஒரு பழக்கம் உண்டு உண்மையான பிரச்சனைகளை விட்டுவிட்டு இல்லாத பிரச்சனைகளை முன்னிறுத்தி உண்மையான பிரச்சனைகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள். இது அளம்செழியன் விடயத்திலும் பொய்துப் போய்விடவில்லை. விக்னேஸ்வரனுக்கு மாற்றீடாக இளம்செழியன் என்ற கோஷத்தை வலுப்படுத்த இந்த கொலை முயற்சி நடவடிக்கையை பாவிப்பதை காணமுடிகின்றது. தமிழ் மக்களுக்க ஒரு மாற்றுத் தலமை தேவையே ஒழிய மாற்றுத் தலைவர் தேவை என்பது அல்ல பிரச்சனை. யாரும் இல்லை? என்று அன்று ஒரு விக்னேஸ்வரனை கொண்டு வந்து இன்றுவரை எதனையும் செயற்படுத்தாத நிலமையே சிவி இற்கு பதிலாக இளம்செழியன் என்ன அல்லது இன்னொரு நபர் மாற்றம் ஏற்படுத்தும்.

(“இளம்செழியன் மீதான துப்பாக்கி பிரயோகவும் இதன் அதிர்வலைகளும்.” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது

திருமதி வாசுகி சிவகுமார் அவர்கள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது எழுப்பிய கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள்;. 23 ஜுலை 2017 தினகரன் வாரமஞ்சரியில் வெளியிடப்பட்டது.
கேள்வி 1:-
பல்வேறு அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு மத்தியில், குறுகிய காலம் மட்டுமே நீடித்திருந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த நீங்கள் அந்த மாகாண சபைக்கும், தற்போதைய மாகாண சபைக்கும் இடையே அரசியல் மற்றும் நிர்வாகரீதியாக காணுகின்ற வேறுபாடுகள் எவை?

(“வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது” தொடர்ந்து வாசிக்க…)