வியட்நாமில் 99 நாட்களுக்குப் பிறகு திரும்பிய கரோனா

99 நாட்களுக்குப் பிறகு வியட்நாமில் மீண்டும் கரோனா பரவ தொடங்கியுள்ளது அந்நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. 9 கோடிக்கு அதிகமான மக்கள் தொகைக் கொண்ட வியட்நாம், உலக நாடுகள் கரோனா பரவலின் தீவிர தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் கரோனாவை கட்டுப்படுத்தி முன் உதாரணமாக இருந்தது .

யாருக்கு அருகதை உண்டு தமிழர் தரப்பில்…?

(சாகரன்)
2009 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவைத் தொடர்ந்த யுத்தமற்ற சூழலுக்கு பின்ரான அரசியலைப் பேசவிளையும் பதிவு இது. தாம் சொல்லும் அரசியலை பாராளுமன்றத்தில் கிளிப்பிள்ளைப் போல் சொல்லவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு(TNA) உண்மையான பன்முகத் தன்மை கொண்ட பல கட்சிகளின் ஐக்கியப்பட்ட அமைப்பா…? என்றால் இல்லை என்ற பதிலை நாம் யாரும் மறுக்க மாட்டோம்.

’இலங்கை அரசாங்கத்தை டக்ளஸே காப்பாற்றினார்’

“ஜெனிவா சென்று, இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று பேசியவர் தான் டக்ளஸ் தேவானந்தா. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஜெனிவாக்கு சென்று இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றியவர்” என, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

விக்கியின் வியாக்கியானங்கள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், திருகோணமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், “…சம்பந்தன் எந்தவொரு பிரச்சினையையும் உடனடியாகத் தீர்ப்பதில்லை. ‘பேசுவோம், பார்ப்போம்’ என்று கூறி, விடயத்தைத் தட்டிக்கழிப்பார். அதனாலேயே, பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன…” என்று, தெரிவித்திருக்கிறார்.

‘சமூக சேவகியான எனக்கு மக்களின் மனங்களில் தனி இடம் உண்டு’

எனக்குப் போட்டியாக, எனது தம்பி வாக்குக் கேட்டாலோ அல்லது வேறு ஒருவர் வாக்குக் கேட்டாலோ, எனது இடம் மக்கள் மத்தியில் நிச்சயம் இருக்குமென, ஐக்கிய தேசிய கட்சியின் ‘யானை’ சின்னத்தில், திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக, 7ஆம் இலக்கத்தில் போட்டியிடும் ரோஹினா மகரூப் தெரிவித்தார்.

ஜோர்தான் தாக்குதலுக்கு ஜே.வி.பி கண்டனம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜோர்தானில் தொழில்களை இழந்த இலங்கை பணியாளர்கள் மீது, அந்நாட்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், முறையாக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அபிவிருத்தியை அரசியலும் அரசியலை உரிமையும் நகர்த்த வேண்டும்’

(அதிரதன்)

தமிழர் விடுதலைக் கூட்டணி, மாற்று அரசியலை முன்வைக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி தகுந்தவர்களை, தகுதியுள்ளவர்களை இந்தத் தேர்தலில் போட்டியிட வைத்திருக்கிறது. எந்த அணியுடனும் போட்டியிடும் வல்லமை, எமது அணிக்கு இருக்கின்றது. நிச்சயமாக, ஓர் ஆசனத்தை மட்டக்களப்பில் கைப்பற்றும் என, மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.