இது திருமண வீடல்ல, சாவு வீடு

சாவு வீட்டில் யாரையாவது சிரித்த முகத்தில் பார்க்க முடியுமா? ஆனால் கேரளாவில் ஒரு குடும்பமே, இறந்துபோன மூதாட்டியின் உடல் வைக்கப்பட்ட பெட்டியுடன் சிரித்த முகமாய் புகைப்படம் எடுத்தது, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தடைகளைத் தாண்டிய பயணத்தை ஆரம்பிக்கலாமா?

தெரிவு செய்யப்பட்ட 305 பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதித் தடை இந்த வாரம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்திருந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டிருந்ததை காண முடிந்தது.

ஜூலை 9 உம் கற்கவேண்டிய வலிநிறைந்த பாடங்களும்

இலங்கையை பொறுத்தவரையில் கறைபடிந்த நாட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. 2022 ஆம் ஆண்டில், இலங்கை வரலாற்றில் பேசப்பட்ட பல சம்பவங்கள் பசுமரத்தில் ஆணி அடித்தாற் போல் பதிவாகியுள்ளன.  

சிந்தனையில் மாற்றம் வேண்டும்

நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக்கொடுப்பதில், மாடாய் உழைத்து, ஓடாய்த் தேயும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையின் இன்னல்களைப் பார்க்குமிடத்து, இந்த நவீன காலத்தில் இப்படியொரு சமூகம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றதா என, பலரும் கேள்வி கேட்கத்தான் செய்கின்றனர்.

பல இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றுள்ளனர். சுமார் ஏழுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் தஞ்சமடைந்திள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இலங்கை தமிழர்களை மீட்க மரைன்  பொலிஸார் விரைந்துள்ளனர்.

விரைவில் ஆட்குறைப்பு?: அமைச்சர் அதிரடி

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார். அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு அரசியல் தீர்மானங்கள், அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் திறமையின்மை ஆகியனவே வழிவகுத்தாகவும் சற்று முன்னர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

செவ்வாயன்று மீண்டும் கொழும்பில் போராட்டம்

இடைக்கால வரவு – செலவுத் திட்ட உரை எதிர்வரும் 30ஆம் திகதி ஜனாதிபதியினால் ஆற்றப்பட்டவுள்ள நிலையில், அன்றையதினம் கொழும்பில் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் கொழும்புக்கு வந்து போராட்டம் நடத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் ஏற்கெனவே தீர்மானித்துள்ளதாக புலனாய்வு பிரிவு, அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் மாவடியம்மன் மக்களின் நிலை

கிளிநொச்சி  – இராமநாதபுரம் பிரதேசத்துக்குட்பட்ட மாவடியம்மன் புதிய குடியிருப்பில் வாழ்ந்து வரும் 38 வரையான  குடும்பங்கள், தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், அன்றாட அன்றாட உணவுக்கே கஷ்டப்படுகின்றனர்.

எரிபொருள் குறித்து அறிவிப்பு

இலங்கை பெட்ரோலிய  கூட்டுத்தாபத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு வகையான எரிபொருள்கள் மொத்தமாக கிடைப்பதில்லை என்றும் இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின், தனியார் தாங்கிகள் உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் டீ.வீ சாந்த ​சில்வா தெரிவித்தார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளன. அதனால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

வியட்நாமின், சம்பா இந்து அரசு

(நடேசன்.)

பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள  அங்கோவாட் போயிருந்தபோது,  கமர் (Khmer) இராஜதானிக்கும்  வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற  இந்து அரசுக்கும்  தொடர்ச்சியான போர் நடந்தது என அங்கு குறிப்பு  எழுதியிருந்ததைப் பார்த்தேன். அக்கால  சம்பா அரசு தற்போது வியட்னாமின் மத்திய பகுதியே  என்று சொல்லப்பட்டது.  அக்காலத்தில் இந்துக்களாக இருந்த அந்த சம்பா மக்கள் இஸ்லாமியராக இப்பொழுது மாறிவிட்டார்கள் என்றார் எனது வழிகாட்டி .