தோழர் தா. பாண்டியன் தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார்…

(சாகரன்)

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் தாவீது(டேவிட்) – நவமணி தம்பதிக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் தா.பாண்டியன் (18.5.1932). அந்தக் காலத்தில் கல்விச் சேவை செய்வதற்காக கிறிஸ்தவ மிஷனரி தொடங்கிய பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தனர் பாண்டியனின் பெற்றோர்.

தா. பாண்டியன் தோழருக்கு எமது அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்களின் முதுபெரும் தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கனத்த இதயத்துடன் தன் செங்கொடி தாழ்த்தி, வீர வணக்கம் செலுத்தி விடைகொடுக்கிறது.

தோழர் தா பாண்டியன் எம்மை விட்டுப் பிரிந்தார்

ஐயா தா.பாண்டியன் அவர்களின் இழப்பானது பேரிழப்பாகும் . எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்….!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது. ஆனால், தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.

ஈக்குவடோரில் சிறைக்கலகங்களில் 62 பேர் உயிரிழப்பு

ஈக்குவடோரில், மூன்று வெவ்வேறான சிறைக் கலகங்களில் குறைந்தது 62 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

ஜெனீவாவில் என்ன கிடைக்கப் போகிறது?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

திங்கட்கிழமை (22) ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பில் பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்க, சில நாடுகள் தயாராகி வருகின்றன. இந்த நாடுகளுடன், இணக்கப் பிரேரணை ஒன்றை (consensual resolution) முன்வைக்க முயற்சிப்பதாக, வெளியுறவுச் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயந்த கொலம்பகே, ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு அண்மையில் தெரிவித்து இருந்தார்.

யாழ். சந்திப்புகளும் புதிய தமிழ்ப் பேரவையும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

பதவி, பகட்டை அடைவதற்கான வழியாக, அரசியலைத் தெரிவு செய்தவர்கள், அவற்றை அடையும் வரையில், சும்மா இருப்பதில்லை. அதுவும் ஏற்கெனவே பதவி, பகட்டோடு இருந்தவர்களால், அவையின்றி சிறிது காலம் கூட இருக்க முடியாது.எப்படியாவது, குட்டையைக் குழப்பி, மீன் பிடித்துவிட வேண்டும் என்கிற நினைப்பிலேயே அலைந்து கொண்டிருப்பார்கள். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அரங்கேறும் காட்சிகளைக் காணும் போது, அதுதான் ஞாபகத்துக்கு வருகின்றது.

இலங்கை: கொரனா நிலவரம்

கொவிட் 19 தொற்றாளர்களாக நாட்டில் நேற்று(24) 458 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்படி தொற்றாளர்களில் 94 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொழும்பு மாவட்டத்தில் 100 க்கும் குறைவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த தினங்களில் 100 க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

’வடக்கின் சுற்றுலாத்துறை முன்னேற்றப்படும்’

எதிர்வரும் காலத்தில், வடக்கு மாகாணத்தில், சுற்றுலாத்துறை சார்ந்த வேலைத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு, வடக்கு மாகாண சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்தியாவிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகேவை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.