புதிய அரசமைப்பும் சிறுபான்மையினரின் எதிர்காலமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

புதிய அரசமைப்பாக்க முயற்சிகள் இலங்கைக்குப் புதியனவல்ல. 1994ஆம் ஆண்டு தொட்டு, இதற்கான பலமுயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், இன்றுவரை முழுமையாகச் சாத்தியமாகவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளைச் சாத்தியமாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளன. அரசாங்கம், நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதும் வலுவற்ற எதிர்க்கட்சி ஆகிய இரண்டு காரணிகளும் இங்கு பிரதானமானவை.

தமிழரசுக் கட்சியின் சீரழிவும் தோல்வியும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

​தேர்தல் அரசியல் என்பது ‘பரமபத’ (ஏணியும் பாம்பும்) விளையாட்டுப் போன்றது. வெற்றிகளை நினைத்த மாத்திரத்தில் அடைந்துவிட முடியாது. எதிர்க்கட்சிகளும் எதிர்த்தரப்புகளும் தோல்விகளைப் பரிசளிப்பதற்காகப் ‘பாம்பு’களாகக் காத்துக் கொண்டிருக்கும்.

அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள் நிகழ்வு

இலங்கையின் முதல் தமிழ் எதிர்க்கட்சித்தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த நாள் நிகழ்வு, வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில், இன்று நடைபெற்றது. இதன்போது, அவரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பொன்.சிவகுமரனின் ஜனன தினம்

ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரனின் 70ஆவது பிறந்த தினம், இன்று நினைவுகூரப்பட்டது. சிவகுமரன் நினைவுதின ஏற்பாட்டுக் குமுவினரின் ஏற்பாட்டில், இன்று காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. ஏற்பாட்டு குழுவில் உறுப்பினர் செந்தூரன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் சிவகுமாரனின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

முஸ்லிம் உலகின் மாற்றங்களும் மையம் கொள்ளும் சவால்களும்!

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பல தேசங்கள், ‘உம்மா’ (முஸ்லிம் உலகம்) அரசியலின் இன்னொரு கட்டத்தைக் கடக்கின்றன. உள்நாட்டுச் சவால்களைக் கருத்தில் கொண்டு தங்கள் பொருளாதார, அரசியல் நிதர்சனங்களின் அடிப்படையில், புவிசார் அரசியல் முன்னுரிமைகளை மாற்றியமைத்துக் கொள்ளவும் அந்நாடுகள் முயல்கின்றன. ‘உம்மா’ எனும் கருத்தாக்கம் முஸ்லிம் உலகத்தின் மையமாக, குறிப்பாக ஒற்றுமையின் மத நெறிமுறையாக எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அதேசமயம், அரசுகளும், அரசு அல்லாத அமைப்புகளும் அதன் புதிய வரையறைகளை உருவாக்கிவரும் சூழலில், அந்தக் கருத்தாக்கம் தற்போது கட்டுடைப்பு செய்யப்படுகிறது.

மக்களுக்குச் சேவை செய்ய இத்தனை சண்டைகளா…?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இம்மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சில சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகள், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிட்டன. ஐக்கிய மக்கள் சக்திக்கு தேசியபட்டியல் மூலம் 7 ஆசனங்கள் கிடைத்த போதிலும், அச்சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு, அவற்றில் ஓர் ஆசனமேனும் கொடுக்கப்படவில்லை.

அரசமைப்பில் மக்கள் மய்யத் ‘திருத்தம்’ அவசியம்

(மொஹமட் பாதுஷா)

அரசமைப்பில் இன்னுமொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில், அரசாங்கம் துரிதகதியில் களமிறங்கி இருக்கின்றது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி நிறுவப்பட்டு, நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறுவதற்கு முன்னரே, 19ஆவது திருத்தத்தை நீக்கும் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.

இரணைமடு விவசாய சம்மேளனத்தினர் போராட்டம்

இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, இரணைமடு விவசாய சம்மேளனம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இன்றைய தினம் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு தெரிவித்த இரணைமடு விவசாய சம்மேளனத்தால் கவனயீர்ப்புப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைந்தாரா…? சரண் விளக்கம்

கொரோனா பாதிப்பில் இருந்து எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பாக அவரது மகன் சரண் விளக்கமளித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக தான் ஒருபோதும் கூறவில்லை

மூத்த தலைவர் சிலர் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக தான் ஒருபோதும் கூறவில்லை என ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து டுவிட்டரில் தான் தெரிவித்த கருத்துகளைத் திரும்பப் பெறுவ தாக மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு நிலையான, முழுநேரத் தலைமைதேவை எனக்கோரி கட்சியில் உள்ள 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். அந்த கடிதம் எழுதிய வர்களில் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்டோரும் அடங்கும்.