கனடா வருபவர்கள் கரோனா இல்லை என்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்

கனடா வருபவர்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனடா அரசு வெளியிட்ட அறிக்கையில், “கனடா வரும் வெளிநாட்டினர் 72 மணி நேரத்துக்கு முன்னர் பெறப்பட்ட கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளது