குமார் குணரத்னத்தின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியற் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, நாட்டில் தங்கியிருந்ததாக குற்றச்சாட்டப்பட்டிருந்த இவர் கேகாலை, அருகுருவெல பகுதியில் வைத்து நவம்பர் மாதம் 04ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.