கொழும்பு, கம்பஹாவில் பரவும் கொரோனா

கொவிட் 19 தொற்றாளர்களாக நாட்டில் நேற்று(30) அடையாளம் காணப்பட்ட 639 தொற்றாளர்களில், அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம், 190 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.