சென்னையில் பத்மநாபா மக்கள் முன்னணியினரின் தியாகிகள் தினம்

பத்மநாபா மக்கள் முன்னணியும் ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து நடாத்திருந்த தியாகிகள் தினம் சென்னையில் நடைபெற்றது. தோழர் சங்கரின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  UCPI, CPI தோழர்களும் பத்மநாபா மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பத்மநாபா மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் சுகு சிறப்பு செயற்பாட்டளராக கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏராளமான தோழர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர் சென்னையை மையயப்படுத்தி தனது அரசியல் வேலைகளை முன்னெடுத்து வரும் பத்மநாபா மக்களின் முன்னணியின் தோழர் ஸ்ரனிஸ்  இன் ஒருங்கிணைப்புடன் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தோழர் பாஸ்கர் தோழர் சுந்தரமூர்த்தி போன்ற ஆரம்ப ஈபிஆர்எல்எவ் இன் செயற்பாடாளர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில்தமிழ் நாட்டில் அகதிகளாக இருக்கும் பொது மக்களும் கலந்து கொண்டனர். தோழர் சுகுவுடன் இணைந்து பலரும் சிறப்பு பேருரை ஆற்றினர்.