ஞானாசாரவுக்கு பிடிவிறாந்து

வழக்கில் ஆஜராமையை அடுத்து, பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசாரா தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் சந்திரகாந்தனை இலகுவாக கைது செய்ய முடிகின்றது குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு. ஆனால் மஞ்சள் காவி அணிந்து பல காலமாக இனவாதம் பேசிவரும் ஞானசார தேரரை மட்டும் கண்டு பிடித்து கைது செய்ய முடியவில்லை என்பதிலேயே தெரிகின்றது இலங்கை அரசினதும் அதன் படைகளினதும் பாகுபடுத்தி பார்க்கும் கண்ணோட்டம்.