நான் சொல்லவில்லை – இரா. சம்பந்தன்

பத்திரிகையொன்றில் முன்பக்க தலைப்பு செய்தியாக சனிக்கிழமை (23) “சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டும் _ இரா சம்பந்தன் ” என்ற செய்தி குறித்து வினவியபோது, “அப்படி ஒன்றும் நான் சொல்லவில்லை” என மறுப்புத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: இந்நிலையில் தான் இது தொடர்பில் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை எனவும், குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார் இரா சம்பந்தன். இச்செய்தி தொடர்பில் உரிய நேரத்தில் பதிலளிக்க உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மேலும்தெரிவித்தார்.