தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 05)

கிண்ணியா நகர் மீதான தாக்குதலை வாய்ப்பாக பயன்படுத்த வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அந்தப்பொறுப்பு சிறப்பு அதிரடிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. 1985 மே 17 ஆம் நாள் ஊர்காவல்படைக்கென சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் முன்செல்ல அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பிலுவில் கிராமம் சுற்றிவளைக்கப்பட்டு சிறுவர்கள் பெண்கள் உட்பட 40 அப்பாவித்தமிழர்கள் கோரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 05)” தொடர்ந்து வாசிக்க…)

கைதிகள் விடுதலைக்கு தமிழர் சமூக ஜனநாயக் கட்சி கோரிக்கை

பத்திரிகைகளுக்கான அறிக்கை

யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துவிட்டன. யுத்தத்தை தலைமை தாங்கி நடாத்திய தளபதிகள், யுத்தத்தை நடாத்துவதற்கு தேவையான நிதி மற்றும் ஆயுத தளபாடங்கள் கிடைக்க மூல காரணமாயிருந்தவர்கள், யுத்தத்தை நியாயப்படுத்தும் பிரசாரங்களை முன்நின்று மேற்கொண்டவர்கள் என யுத்தத்தில் முழுமையாக ஈடுபட்ட சுமார் 12000 பேரை கடந்த அரசாங்கம் மன்னிப்பளித்து விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீளவும் தமது சமூக பொருளாதார வாழ்வில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களையும், கணிசமானோருக்கு நேரடி உதவிகளையும் அரசாங்கம் வழங்கியிருக்கிறது. இருந்தும் சுமார் 100 பேரளவான முன்னாள் போராளிகளை தொடர்ந்து சிறைகளில் வைத்திருப்பது துயரமானதாகும்.

(“கைதிகள் விடுதலைக்கு தமிழர் சமூக ஜனநாயக் கட்சி கோரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 7)

யாழ்ப்பாணத்திற்கான பயணத்தின் முதல் நாள் வவுனியாவில் இருந்து ஆரம்பித்து வழமையான ஏ9 பாதையினூடு நடைபெற்றது. வவுனியா நகரை சுற்றி வளைத்து சிங்கள மயமாக்கும் நிகழ்வுகள் ஏற்கனவே வவுனியாவின் தெற்குப்பகுதியில் மிகத் தீவிரமாக 50 ஆண்டுகளாக நடைபெற்றாலும் தற்போது இது பெரியமடு போன்ற வடக்கு பிரதேசங்களில் மாகாணத்தின் நில அளவைத் திணைக்களத்தின் பெரும்பான்மை இன பொறுப்பாளரின கனகச்சிதமான செயற்பாடுகள் மூலம் நடைமுறைப்படுதப்படுவதாக தமிழ் நில அளவையாளர்கள் மூலும் அறியக் கிடந்தது.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 7)” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 10)

(Thiruchchelvam Kathiravelippillai)
தமிழ்பேசும் மக்களது உறவுகள் திட்டமிட்டவகையில் பிரிக்கப்படுவதற்கு வேறான ஒரு நடைமுறையும் கையாளப்பட்டது.
ஜிகாத் இஸ்லாமியர்களின் மத ரீதியான நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகும். ஜிகாத் என்பது இஸ்லாமியர்களின் தனித்துவத்தினைப் பேணுவதாக இஸ்லாமிய மதத்தினைப் பின்பற்றுபவர்களால் நோக்கப்படுகின்றது.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 10)” தொடர்ந்து வாசிக்க…)

திரும்பிப் பார்க்க வைக்கும் இராதாவின் உரை

சட்ட ரீதியாக அணுக வேண்டிய விடயமொன்றை உணர்வுபூர்வமான ஆர்ப்பாட்டத்தின் மூலம் நிறைவெற்றிக் ெகாள்ள முடிந்திருக்கிறதா? உதாரணத்திற்குத் தனி யார் மருத்துவ கல்லூரி சைற்றத்திற்கு எதிராக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால், எதுவும் நடந்திருக்கிறதா? இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் சைற்றம் கல்லூரி மாணவர்களுக்ேக வெற்றி கிடைத்திருக்கிறது.

(“திரும்பிப் பார்க்க வைக்கும் இராதாவின் உரை” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part7)

இதேவேளை புலிகளின் பரப்புரைப் பகுதிகள் வன்னி நிலைபற்றி ஏற்கனவே மேற்கொண்டு வந்த புனைவை மேலும் விரிவுபடுத்தி திரிவுபடுத்தி மேலும் பொய்ப்பரப்புரைகளில் ஈடுபட்டன. படையினரின் தாக்குதல்களில் கொல்லப்படும் மக்கள் பற்றிய உண்மைச் செய்திகளுடன் மேலும் பல பொய்களையும் இணைத்துத் தமது பரப்புரையை இவை மேற்கொண்டன. கொல்லப் படும் மக்களின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல புலிகள் கூட்டிச் சொல்லவும் தொடங்கினர். அதேவேளை அரசுக்கெதிரான கண்டனப் பரப்புரையை யும் அவை தீவிரப்படுத்தின. ஏற்கனவே சமூக அமைப்புகள், சக்திகளைக் குலைத்து தமக்கிசைவான சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்த புலிகள் அந்த அமைப்புகளைக்கூட இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலிகளின் ஆட்சி, நிர்வாகக் கட்ட மைப்புகள் சகலதும் தகர்ந்து ஆட்டம் கண்டது. போர் தொடங்கிய போதே தமது நிர்வாகக் கட்டமைப்புகள் சகலதையும் போருக்கும் ஆட்சேர்ப்புக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தி வந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். புலிகள் அடிப்படையில் ஒரு இராணுவ அமைப்பு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்வது அவசியம்.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part7)” தொடர்ந்து வாசிக்க…)

வேலைவாய்ப்பின்மைக்குக் காரணம் எமது தமிழ் அரசியல் தலைமைகளே

– தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கோபிநாத்

கிழக்கில் தமிழ் மக்களின் பிறப்பு வீதம் குறைவடைந்து செல்கின்றது. அதற்கான காரணம் வறுமை. அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டாலே வறுமையை ஒழிக்கலாம் என்கிறார், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், கிழக்கின் இளைஞர் முன்னணி தலைவருமான க. கோபிநாத். முன்னாள் பிரதியமைச்சர் கோ.கணேசமூர்த்தியின் மகனான கோபிநாத், தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி.

(“வேலைவாய்ப்பின்மைக்குக் காரணம் எமது தமிழ் அரசியல் தலைமைகளே” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாணசபையின் அஸ்தமனம்

இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களிலும் மிகப் பின்தங்கியிருப்பது வடமாகாணமே. அதிலும் வன்னி மாவட்டங்களின் நிலை இன்னும் மோசமான நிலையிலே உள்ளது. இதையிட்ட அக்கறையை வடமாகாணசபை கொள்ளவில்லை என்பது கண்டனத்துக்குரியது.

(“வட மாகாணசபையின் அஸ்தமனம்” தொடர்ந்து வாசிக்க…)

Maldives will prioritize own interest, not India’s

(Global Times)

Maldives’ opposition leader Ibrahim Mohamed Solih won the nation’s presidential election on Monday. By a margin of 16.7 percent, incumbent Abdulla Yameen conceded defeat. “Pro-China Maldives president Yameen loses election, India welcomes result,” claimed the Press Trust of India and the New York Times called Solih’s winning a “surprise victory.”

(“Maldives will prioritize own interest, not India’s” தொடர்ந்து வாசிக்க…)