சித்திரவதையின் உச்சம்

விடுதலை செய்யப்பட்ட அவர், தனது தாய் மற்றும் சொந்த குடும்ப அங்கத்தவர்களை கூட அடையாளம் காணமுடியாத நிலையில் மனநிலை பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.தினமும் பலஸ்தீன முஸ்லீம்கள் இஸ்ரேலிய இனவாத சக்தியால் திட்டமிட்ட ரீதியில் இனஅழிப்பு, சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் – பல முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை உருவாக்கி வருகின்றமை – இஸ்ரேலின் இனஅழிப்பு கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

பல முஸ்லிம் நாடுகளின் தலைவர் களின் கையாலாகா தனத்தாலும் ‘உம்மா’வின் ஒற்றுமையின்மை யாலும் தினமும் அழுது புலம்புவது பலஸ்தீனம் மட்டுமல்ல…!2020 ஆம் ஆண்டில் மாத்திரம் 41 பெண்கள் 160 சிறுவர்கள் உட்பட – 4,400 பலஸ்தீன் மக்களை இஸ்ரேல் சிறைப்படுத்தியது.1993 ‘ஒஸ்லோ ஒப்பந்தம்’ முதல் ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் 2,000 பெண்களும் 17,500 சிறுவர்களும் அடங்குவர்.நமது புனித மஸ்ஜித்தை மீட்பதற் காக போராடும் முஸ்லீம்களையும் அதற்காக சிறையில் வாடும் நமது சகோதர சதோதரிகளையும் புனித ரமலான் மாதத்தில் நமது துஆக் களில் உள்ளடக்கு வோமாக!இதில், காஸாவில் வாழும் எனது நண்பர் மூலம் இன்னொரு விஷயமும் பின்னர் கேள்விப்பட்டது:அனைத்தையும் மறந்துள்ள இவர் சிறையில் இருந்த போது மனனம் செய்த அல்-குர்ஆன்வசனங்களை இன்னமும் ஞாபகம் வைத்துள் ளார் என்பதுதான். சுப்ஹானல்லாஹ்!-அய்யாஷ்(வட்ஸ்அப் பெட்டகத்திலிருந்து..)