அண்ணாமலையால் பாதுகாப்பு இல்லை -காயத்ரி விலகல்

இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில்” பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழக  பா.ஜ.கவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கின்றேன்.

அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பா.ஜ.கவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களைக்  கட்சியில் இருந்து விரட்டுவது மாத்திரமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம்”  இவ்வாறு பதிவிட்டுள்ளார்.