ஒரு நாடு, ஒரே சட்டம்; கிழக்கில் அமோக வரவேற்பு

ஒரே நாடு, ஒரே சட்டத்துக்காக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் செயற்பாடுகள் மட்டக்களப்பு பிரதேச செயலகம், வாழைச்சேனை பிரதேச செயலக அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டது. 

இதன்போது ஆலோசனைகள் வாய்மொழி, எழுத்துமூலமாக குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதன்போது கருத்து தெரிவித்த செயலணியின் தலைவர் ஞானசார தேரர், நாட்டில் நீண்டகாலமாக நிலவி வருகிற பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்கு  ஜனாதிபதி நேர்மையாக முயற்சிக்கிறார். இன்று நாம் அனுபவிக்கின்ற வேதனைகளை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.