கிளியில் 77 பேர் உயிர்களை மாய்த்துள்ளனர்

 குறிப்பாக தொழில் வாய்ப்பின்மை, போதை பொருள் பாவனை, மன அழுத்தம் மற்றும் குடும்ப வன்முறை என பல்வேறு காரணங்களால் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ்  பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டில் 45 ஆண்களும் 32 பெண்களும் தவறான முடிவெடுத்து தங்கள் உயிர்களை மாய்த்து கொண்டுள்ளனர்.

இதேவேளை,  வவுனியா  மாவட்டத்தில் 41 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 28 பேரும் இவ்வாறு கடந்த ஆண்டில் தவறான முடிவு எடுத்து தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் தகவல் மூலம் அறிய முடிகின்றது.