கொடநாடு வழக்கு: தொடர்கிறது தனிப்படை விசாரணை

உதகை மண்டலத்தில் (ஊட்டி) உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரிடமும் நேற்று 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளான இன்றும் சந்தோஷ் சாமி, மனோஜ் சாமியிடம் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பிக்கள் சந்திர சேகர், சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சதீஷன், பிஜின் குட்டி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர். ஏற்கெனவே, 29 பேர் விசாரிக்கப்பட்ட நிலையில், குற்றச்சாட்டப்பட்டோரிடம் தனிப்படை பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.