கொழும்பு – யாழ். விமான சேவை மீண்டும் ஆரம்பம்

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்குமாறு, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், நாடு மூடப்படுவதற்கு முன்பு, இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்துக்கு வாரத்துக்கு இரண்டு முறை விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.