நவம்பர் 1 முதல் முன்னுரிமை வீதி விதி அமுல்

இந்த பேருந்து முன்னுரிமைப் பாதை காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலக நெரிசல் நேரங்களில் அமலுக்கு வரும்.

அதன்படி, காலி வீதியில் செல்லும் வாகனங்கள் வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் இருந்து காலை 6 மணிக்கும் காலை 9 மணிக்கும் இடையில் முன்னுரிமைப் பாதைக்குள் நுழைந்து காலி வீதி ஊடாக கொழும்பு கோட்டை நோக்கிச் செல்ல வேண்டும்.

மருதானை, பொரளை சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை ஓல்கொட் மாவத்தை வரையிலான மற்றுமொரு முன்னுரிமைப் பாதை விதியானது காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை அமுலுக்கு வரும். அதே பாதை மாலை 4 மணி வரை  இரவு 7 மணி வரை செயல்படும்.

முன்னுரிமைப் பாதையில்  இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துகள், தனியார் பேருந்துகள், பாடசாலை பேருந்துகள், பாடசாலை வாகனங்கள், அலுவலக போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் போன்ற வாகனங்களை இயக்க அனுமதிக்கும்.

இந்த நேரத்தில் மேலே குறிப்பிடப்பட்டவை தவிர வாகனங்கள் முன்னுரிமைப் பாதையில் நுழைய அனுமதிக்கப்படாது.

இதேவேளை, இச்சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு இதன் போது எச்சரிக்கை விடுக்குமாறு போக்குவரத்து பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.