புதிய பனிப்போரை உருவாக்க முயலவில்லை

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, 

நமது பாதுகாப்பு, வளர்ச்சி, சுதந்திரம் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாம் இணைந்து செயல்பட வேண்டும். நாம் இன்று பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால பிரச்சினையை நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ள நாம் அங்கு வெளியுறவுக் கொள்கை என்ற கதவுகளைத் திறந்துள்ளோம்.

ஆயுதங்கள் கொரோனா வைரஸை வீழ்த்தாது. ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் அரசியல் சக்திகளால் கொரோனாவை வீழ்த்தலாம்.  சிகிச்சைக்கான வசதிகளை விரிவுபடுத்தி உலகில் உள்ள உயிர்களை காக்க வேண்டும். எதிர் காலத்தில் உலக சுகாதார பாதுகாப்புக்கான நிதிக்காக புதிய நடைமுறைகளை நாம் உருவாக்க வேண்டும்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் 9/11 தாக்குதல் நடந்தபோது இருந்த அதே அமெரிக்கா தற்போது இல்லை. இன்று நாம் சிறந்த ஆயுதங்கள் மற்றும் அதிக திறனுடன் உள்ளோம் என்று குறிப்பிட்டார்.