வலதுசாரிகளுக்கு எதிராக அணி திரண்ட மக்கள்!

அவர் வலதுசாரி சக்திகளுக்கு எதிராகவும், அவர்களை ஆதரிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், அவர்களது ஆதரவு பெற்ற போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

அதனால் ஆத்திரமடைந்த வலதுசாரி பாசிச சக்திகள் அவரது ஆட்சியைக் கவிழ்க்கும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது முயற்சிகளுக்கு எதிராக தலைநகர் டெகுசிகல்பாவில் (Tegucigalpa) பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தினர்.