நீர்கொழும்பை விஞ்சியது பீகார் “தகனமேடை”

பீகாரின் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 48 வயதான சுன்னு குமார், ஏப்ரல் 3ஆம் திகதியன்று அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்புகளால் அவர் உயிரிழந்து விட்டாரென அவரது உறவினர்களிடம் நேற்று முன்தினம் (11) தெரிவிக்கப்பட்டது.

இலங்கை: கொரனா செய்திகள்

யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத்தொகுதி வர்த்தகர்கள், பணியாளர்களில் மேலும் 22 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இறுதி யுத்தமும் இரைக்காக காத்திருந்த தேசிய உணர்வு சார்ந்த கழுகுகளும்.

2009 ஆம் ஆண்டு இரண்டாம் மாத காலப்பகுதியில் நான் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் இடத்தை துப்பரவு செய்யும் தொழிலாளியாக வேலை செய்தேன்.
நோர்வேயில் துப்பரவு தொழில் நிறுவனங்களை வழிநடத்திய கோபால், மோகன், செல்வா, சிவா, அண்ணா இவர்களிடம்தான் நான் நோர்வேயில் வசித்த காலத்தில் வேலை செய்தேன்.கோபால் அண்ணா புற்று நோய் வந்து மரணித்து விட்டார்.இறுதியாக சிவா அண்ணாவிடம் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றினேன்.
பெயர் விபரங்களை தெரியப்படுத்துவதற்கு காரணம் என்னை அடையாளப்படுத்துவதற்கு எண்ணில் ஒரு பழக்கம் எந்த பதிவாக இருந்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது.

மணிகளான யோசனைகளுக்குள் பேயைத் தேடிய அரண்டவன் கண்

சிறுபான்மை இனங்களின் மீதான சந்தேகப் பார்வை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றதே தவிர, கொஞ்சமேனும் குறையவில்லையென்பது இடம்பெறுகின்ற ஒவ்வொரு சம்பவங்களும் அச்சொட்டாகப் புடம்போட்டுக் காட்டிவிடுகின்றன.

வெலிக்கடையை வென்ற வெருகல்.

(Sutharsan Saravanamuthu)

கறுப்பு ஜூலையை விஞ்சிய சிகப்புச் சித்திரை .கிழக்கு மண்ணில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட போராளிகளுக்கு எனது வீரவணக்கங்கள்.10 04 2004 வெருகல் படுகொலை நினைவுநாள்,புலிகளின் வரலாற்றை புரட்டிபோட்ட நாள், கருணா அம்மானும் கிழக்கு போராளிகளும் இல்லாத ஆண்டுகள் புலிகளின் வீழ்ச்சிகாலங்களாகவே இருந்தன, எதிரி என்று சொல்லப்பட்ட இலங்கை அரசுடன் தேனிலவு கொண்டாடத் தெரிந்த புலிகளுக்கு தமது சொந்த போராளிகளுடன், ஒன்றாகவிருந்து உணவுண்டவர்களுடன் பேசத்தெரிந்திருக்கவில்லை.

சித்திரவதையின் உச்சம்

இந்த புகைப்படத்தைப் பார்த்தவு டன் இதயத்தில் இனம் தெரியாத வலி. அதன் பின்னணியை வாசித்த போது இதயம் கண்ணீர் விட்டு அழுதது….படத்தில் உள்ள இவரின் பெயர் மன்சூர் ஷஹாதீத், பலஸ்தீன முஸ்லீம். 17 வருடங்கள் இஸ்ரேலிய சிறைச் சாலையில் கடும் சித்திரவதைக் கும், பலவந்த தனிமைபடுத்தலுக் கும் ஆளாகியதால் மனநிலை பாதிக்கவைக்கப்பட்டவர். இஸ்ரேலிய இனவாத சக்தியின் கொடூர கொடுமைப்படுத்தல் காரணமாக மனநிலை பாதிக்கப் பட்ட நிலையில் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

‘எல்லைச் சண்டைகளில் 100 பேர் கொல்லப்பட்டனர்’

எதியோப்பியாவின் அஃபார், சோமாலிப் பிராந்தியங்களுக்கிடையிலான எல்லை மோதல்களில், குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, அஃபார் பிராந்திய பிரதிப் பொலிஸ் ஆணையாளர் அஹ்மட் ஹுமெட், நேற்று தெரிவித்துள்ளார்.

இளைஞர்களைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தாயக அரசியலில் ஆர்வம் காட்டிவரும் புலம்பெயர் தேசங்களிலுள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள், புலமையாளர்கள் சிலருக்கு இடையிலான இணையவழி உரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது. அதன்போது, ‘தமிழ்த் தேசிய கட்சிகள், இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவரத் தயங்குவது ஏன்? குறைந்த பட்சம், அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளைக்கூட இளைஞர்களை இணைத்துக் கொண்டு கட்சிகள் நடத்துவதற்குப் பின்நிற்பது ஏன்?’ என்ற தொனியிலான கேள்விகள் முன்வைக்கப்பட்டு, உரையாடப்பட்டன. குறித்த உரையாடலில், தாயகத்திலிருந்து பங்குகொண்ட ஒருவராக, இதற்கான பதில்களை நான் வழங்க வேண்டியிருந்தது.

நடுத்தெருவில் பாய்ந்த சட்டமும் கொடுமையான மகிழ்வும்

தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக, கடலுக்குள் பாய்ந்த இளைஞன், கைக்கூப்பிக் கும்பிட்டு மன்றாடியும், பொல்லுகளினால் அடித்தே கொன்ற சம்பவமொன்று பம்பலப்பிட்டிய ரயில் நிலையத்துக்கு அருகாமையிலுள்ள கடலில் 2009இல் இடம்பெற்றமை யாவருக்கும் ஞாபகத்தில் இருக்கும். அக்காட்சிகளை இப்போது பார்த்தாலும் இரத்தத்தை உறையவைக்கும்.

தமிழகத் தேர்தல்: பொத்தானுக்குள் சிக்கும் ஐந்து ஆண்டுகள்

நொடிப்பொழுதில் அழுத்தும் பொத்தானுக்குள் சிக்கும் 5 ஆண்டுகள்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும். அங்கு மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கங்களாக இருந்தாலும் சரி, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் திருவிழா நடந்தே தீரும். அதில், ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் மிகக்கூர்மையான ஆயுதமே வாக்குரிமையாகும்.