‘சமூக நீதி’ கோரிக்கையாக மாற வேண்டிய நீதிக்கான கோஷங்கள்

(மயில்வாகனம் திலகராஜா – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

கடந்த இரண்டு வாரங்களும் மலையகத்தில் மட்டுமல்லாது மலையகத்துக்கு வெளியேயும் இலங்கையில் ‘நீதி’ கோரிய கோஷங்கள் எழுந்திருந்தன. அந்த கோஷத்தை முன்னிறுத்தச் செய்தது ஒரு சிறுமியின் உயிர். அந்த சிறுமியின் துர்பாக்கிய நிலை மரணத்துக்கு நீதி வேண்டிய கோஷங்களுக்கு மத்தியில் ‘அரசியல்’ நிகழ்ச்சி நிரல்களும் தம்மைப் பிணைத்துக்கொண்டன என்பது வெளிப்படை. ஆனால், அதனையும் தாண்டிய சமூக ‘உணர்ச்சி’ நிலை மலையகத்தில் ஆத்மார்த்தமாக மேம்பட்டு நின்றது.