இலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்

கடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங்கையின் அரசியல் நிலவரம் மீண்டும் ஒரு பேசுபொருளாகிவிட்டது. இதன் அர்த்தம் இலங்கை ஏதோ அமைதியான சுபீட்சம் நிறைந்த நாடாக இருந்தது. ஆனால் சடுதியாக நிகழ்ந்த அரசியல் சூறாவளியால் எல்லாம் தலைகீழாகி விட்டது என்றாகிவிடாது. இலங்கையைக் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற சூழ்ச்சித்திட்டங்கள் தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றன என்பதையே இன்றைய நிலைமைகள் தெளிவாகக் காட்டுகின்றன. (“இலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.தே.கவின் அரசியலில் ’சுமந்திரனின் ஆதிக்கம் இல்லை’

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பணிகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் ஆதிக்கம் காணப்படுகிறது என்ற கருத்தில், எதுவித உண்மையுமில்லையெனத் தெரிவித்த ஐ.தே.கவின் சிரேஷ்ட எம்.பியான லக்‌ஷ்மன் கிரியெல்ல, அவ்வாறான கருத்துகள், முழுப்பொய்கள் எனவும் தெரிவித்தார்.

(“ஐ.தே.கவின் அரசியலில் ’சுமந்திரனின் ஆதிக்கம் இல்லை’” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த – ரணிலுக்கு பிரதமருக்கான வரப்பிரசாதங்கள் கிடையாது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவால் கொண்டுவரப்பட்டுள்ள இடைக்காலக் கணக்கறிக்கைக்கு எதிராக, ஐக்கிய தேசிய முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள யோசனை குறித்து சபையில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவல் அநுரகுமார திசாநாயக்க, இந்த யோசனையை நிறைவேற்றிக்கொண்ட பின்னர், அலரி மாளிகையிலிருந்து, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வெளியேற வேண்டுமென்றார். காரணம், அங்கு அவர்கள் செய்யும் செலவுகளையும், பொதுமக்களின் வரிப் பணத்தைக் கொண்டே செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறிய அவர், மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, பிரதமருக்கான வரப்பிரசாதங்கள் கிடையாதெனவும் கூறினார்.

அகதிகள் மெக்ஸிக்கோவில் காத்திருப்பர் என்கிறார் ட்ரம்ப்

ஐக்கிய அமெரிக்க, மெக்ஸிக்கோ எல்லையிலுள்ள அகதிகள், அவர்களின் அகதிக் கோரிக்கைகள் தனித்தனியாக ஐக்கிய அமெரிக்க நீதிமன்றங்களில் அனுமதிக்கப்படும் வரை அவர்கள் மெக்ஸிக்கோவிலேயே இருப்பர் என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று டுவீட் செய்துள்ள நிலையில், தாங்கள் எந்தவொரு இணக்கத்துக்கும் வரவில்லையென மெக்ஸிக்கோவில் புதிதாகப் பதவியேற்கவுள்ள அரசாங்கம் தெரிவித்துள்ளது.

(“அகதிகள் மெக்ஸிக்கோவில் காத்திருப்பர் என்கிறார் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

’ஐ. அமெரிக்க ஆதரவு படைவீரர்கள் 47 பேர் கொல்லப்பட்டனர்’

கிழக்கு சிரியாவிலுள்ள தமது இறுதி இடமான டெய்ர் எஸோரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு இரண்டு நாட்களாக நடத்திய தாக்குதல்களில் ஐக்கிய அமெரிக்க ஆதரவு குர்திஷ் தலைமையிலான கூட்டணியான சிரிய ஜனநாயகப் படைகளின் படைவீரர்கள் 47 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் நேற்றுத் தெரிவித்துள்ளது. ஈராக்கிய எல்லையிலுள்ள கிழக்கு மாகாணமான டெய் எஸ்ஸோரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை வெளியேற்றுவதற்காக சிரிய ஜனநாயகப் படைகள் போரிடுகின்றன.

(“’ஐ. அமெரிக்க ஆதரவு படைவீரர்கள் 47 பேர் கொல்லப்பட்டனர்’” தொடர்ந்து வாசிக்க…)

கஜா புயல் பாதிப்பு: கேரள அரசு ரூ.10 கோடி நிதி, 14 லாரிகளில் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதி மக்களுக்கு உதவும் வகையில் 14 நிவாரணப் பொருட்களும், ரூ.10 கோடி நிதியும் கேரள அரசு சார்பில் வழங்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

(“கஜா புயல் பாதிப்பு: கேரள அரசு ரூ.10 கோடி நிதி, 14 லாரிகளில் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பேரவையை அலைக்கழிக்கும் முன்னணி

(புருஜோத்தமன் தங்கமயில்)

தேர்தலைப் பிரதானப்படுத்திய அரசியல் கூட்டணிகள், இலாப நட்டக் கணக்கின் அடிப்படையில் தோற்றம் பெறுபவை. அங்கு கொள்கை, கோட்பாடுகளுக்கான இடம் என்பது, இரண்டாம் பட்சமானதே. அதனால்தான், முன்னாள் வைரிகளான சந்திரிகாவும் ரணிலும், தமது பொது வைரியான மஹிந்தவை எதிர்கொள்வதற்கான கூட்டணியை, 2014இல் அமைக்க முடிந்தது. இப்போது, மைத்திரியும் மஹிந்தவும், ரணிலை எதிர்கொள்வதற்காகப் புதிய உடன்பாட்டுக்கு வந்திருப்பதும் அதன்போக்கிலானதுதான்.

(“பேரவையை அலைக்கழிக்கும் முன்னணி” தொடர்ந்து வாசிக்க…)

அந்தமான் தீவில் உயிரிழந்த அமெரிக்க இளைஞரின் டைரிக் குறிப்புகள்

அந்தமான் தீவில் பழங்குடியினரால் கொல்லப்பட்ட அமெரிக்க இளைஞரைப் பற்றி அவரது நண்பர் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபர் தீவுகள் பகுதியில் வடக்கு சென்டினல் தீவு உள்ளது. அங்கு பழங்குடியின மக்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளாக வெளியுலகத் தொடர்பு இல்லாமல் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தங்கள் பகுதிக்குள் வெளியாட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என நம்பப்படுகிறது. இதையும் மீறி அங்கு சென்ற சிலரை அவர்கள் கொன்றுவிட்டதுடன் அவர்களுடைய உடலை மீட்கவும் அனுமதித்ததில்லை. (“அந்தமான் தீவில் உயிரிழந்த அமெரிக்க இளைஞரின் டைரிக் குறிப்புகள்” தொடர்ந்து வாசிக்க…)

சட்டப்பேரவைத் தேர்தல்: ம.பி.யில் 65.5% – மிசோரமில் 73% வாக்குப்பதிவு

இன்று நடந்த தேர்தலில் மத்தியப்பிரதேத்தில் 65.5 சதவீதமும், மிசோரமில் 73 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சத்தீஸ்கரில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் இன்று தேர்தல் நடைபெற்றது.

(“சட்டப்பேரவைத் தேர்தல்: ம.பி.யில் 65.5% – மிசோரமில் 73% வாக்குப்பதிவு” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் றேகனின் 33 வது நினைவுதினம்.

வவுனியா மாவட்டத்தில் பிறந்த இன்பராசா என்னும் இயற்பெயருடைய தோழர் றேகன் 23.11.1985ம் ஆண்டு புலிகளினால் படுகொலை செய்யப்பட்டார். 1980 களின் ஆரம்பத்தில் ஈழ மாணவர்
பொதுமன்றம்(Gues) என்னும் மாணவர் அமைப்பினூடாக தனது அரசியல் பணியை ஆரம்பத்தவர் . மக்களின் மீதும் மண்ணின் மீதும் அளவுகடந்த நேசத்துக்குரியவராகவிருந்தார். அதற்காக தன்னுடைய பல்கலைக்களக பட்டப்படிப்பையும் தூக்கியெறிந்து விட்டு பெற்றோர்கள் உயர்கல்வியை கற்பதிற்கு தேவையென கொடுத்த பணத்துடன் தன்னை போராட்டத்துடன் முழுமையாக இனைத்துக்கொண்டவர். EPRLF இராணுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படையில் இனைந்து இராணுவப்பயிற்சியைப் பெற்று மேலதிக சிறப்புப் பயிற்சிக்காக பாலஸ்தீன விடுதலை இயக்கமொன்றின் பயிற்சிமுகாமில் பயிற்சியை முடித்திருந்தார்.அதன்பின்பாக கட்சியினால் வன்னி பிராந்திய இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டார் .மக்கள் விடுதலைப் படையை பலப்படுத்தி வெற்றிகரமான தாக்குதல்களுக்கு தலைமைதாங்கினார். (“தோழர் றேகனின் 33 வது நினைவுதினம்.” தொடர்ந்து வாசிக்க…)