இன்று சேவின் இறந்த நாள்.

1967 அக்டோபர் 8…. தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.

சேவின் இறுதி நாள் இப்படியாக இருந்தது, காலை 10.30… யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார். (“இன்று சேவின் இறந்த நாள்.” தொடர்ந்து வாசிக்க…)

உண்ணாவிரதமிருந்த கைதிகளில் ஐவர் வைத்தியசாலையில்

தங்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, அநுராதபுரம் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும், அரசியல் கைதிகள் 55 பேரில், ஐவர் சுகயீனமுற்றநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சிறைக் கைதிகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. சுகயீனமுற்ற கைதிகள், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும், குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நடைபவனிக்கு ஆதரவு…

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வருகின்ற நடைபவனிக்கு அதரவு தெரிவித்து, கைதடி சித்த மருத்துவ மாணவர்களும், இன்று (09) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இலங்கையின் உதவியைக் கோருகிறது சீஷெல்ஸ்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, சீஷெல்ஸ் நாட்டைச் சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந்நாட்டு ஜனாதிபதி டெனி ஃபோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (08) மாலை இடம்பெற்றது. நேற்று மாலை, சீஷெல்ஸ் அரச மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதிக்கு, பாரிய வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டு, அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.

(“இலங்கையின் உதவியைக் கோருகிறது சீஷெல்ஸ்” தொடர்ந்து வாசிக்க…)

சொர்க்கத்தின் சாத்தான் யாழ்ப்பாணத்தில்!

– ஜீவா.
இலங்கை தமிழ் சமூகம் குறிப்பாக யாழ்பாண சமூகத்தின் விழுமியங்கள் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி’ அதுவும் தேய்ந்து சூனியமாகியிருக்கிறது.
ஒருவருடைய கருத்தை என்ன? அபிப்பிராயத்தைக் கூட செவிமடுக்கமுடியாத முண்டங்களாகிவிட்டது. அப்படியிருந்தும் மாற்று வழிகளில் ஏதாவது ஒரு விடயம் முகிழ்புப் பெறுமாயின் அதனை கருக்கிவிடுவதில் தமிழ் சமூகத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை.

(“சொர்க்கத்தின் சாத்தான் யாழ்ப்பாணத்தில்!” தொடர்ந்து வாசிக்க…)

தயவுசெய்து தங்களின் ஊடகத்தில் வெளியிடவும்

“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்” – வெளிநாடு வாழ் தமிழர்கள் புகார்; மத்திய – தமிழக அரசுகள் முரண்பாடு

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களும் தமிழகத்தின் மக்கள் பிரச்சினைகளில் பங்கெடுத்து வருகின்றனர். தமிழக மண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்று கடமை உணர்வு இங்கு இருப்போருக்கு மட்டுமல்ல, கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் இருக்கிறது. இதன் நிரூபணச் செயல்பாடுகள் தற்போது காணக் கிடைக்கின்றன.

(“தயவுசெய்து தங்களின் ஊடகத்தில் வெளியிடவும்” தொடர்ந்து வாசிக்க…)

புது வரலாறு படைக்கவுள்ள மலையக மக்கள் மாநாடு

பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்

වැවිලි ශ්‍රම  යිති  මුහය

Plantation Labour Rights Confederation

152 1/3 Hulftsdorp Street, Colombo 12

plantationlabour@gmail.com 071-8971406

 புது வரலாறு படைக்கவுள்ள மலையக மக்கள் மாநாடு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உடனடியாக ரூபா 1300 ஆக உயர்த்தும் படியும் நீண்ட காலத்தில் உழைப்புக்கேற்ற நியாயமான சம்பள திட்டத்தை ஏற்படுத்தும் படியும் வற்புறுத்தி தொழிற்சங்க அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பல அமைப்புகளும் தனி நபர்களும் நடத்தும் மக்கள் மாநாடு எதிர்வரும் 13/10/2018 அன்று மு.ப 10 மணி முதல் 2 மணி வரை அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு மண்டபத்தில் நடைபெறும்.

(“புது வரலாறு படைக்கவுள்ள மலையக மக்கள் மாநாடு” தொடர்ந்து வாசிக்க…)

ராகுல் காந்தி கற்க வேண்டிய பாடம்

(எம். காசிநாதன்)

“காங்கிரஸ் கட்சியுடன், மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லை” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்திருப்பது, மத்திய அரசாங்கத்தில் ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிரான, அகில இந்தியக் கூட்டணி அமைவதற்கு, நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. இந்திய அரசியலில் மாயாவதி, மம்தா பானர்ஜி, ஜெயலலிதா போன்றோர் எடுக்கும் முடிவுகள், அகில இந்திய அரசியலில் ‘வானவெடிகளை’ கடந்த காலத்தில் ஏற்படுத்தியிருந்தது.

(“ராகுல் காந்தி கற்க வேண்டிய பாடம்” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கின் அடுத்த முதலமைச்சர் யாரோ?

(அதிரன்)

கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார், போட்டியிடும் கட்சிகள் யாரை முதலமைச்சராக நியமிக்கும் அல்லது அறிவிக்கும் என்ற கேள்விகளுக்குப் பதில் காண்பதற்குரிய காலமாக, இதனைக் கொள்ள வேண்டும்; அதற்குத் துணிந்துமாக வேண்டும். 1987ஆம் ஆண்டு ஜூலை 29அம் திகதி கையெழுத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் படி, அதே ஆண்டின் நவம்பர் 14இல் இலங்கை நாடாளுமன்றம், அரசமைப்பில் 13ஆவது திருத்தம், மாகாண சபைச் சட்டம் ஆகியவற்றை அறிவித்திருந்தது. அதன்படி 1988ஆம் ஆண்டு பெப்ரவரியில், 9 மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த மாகாண சபைகளில், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் படி, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தன.

(“கிழக்கின் அடுத்த முதலமைச்சர் யாரோ?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 11)

(Thiruchchelvam Kathiravelippillai)
கிண்ணியாவில் தற்போது பிரதேச செயலகம் அமைந்திருக்கும் இடத்தில் 1973 ஆம் ஆண்டிற்கு முன்னர் 45 தமிழ்க் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர்.
1973 ஆம் ஆண்டு DRO (Divisional Revenue Office) அலுவலகம் அமைப்பதற்கான இடம் கிண்ணியாவில் தேவையான போது கிண்ணியாவின் ஒரு மையப்பகுதியில் அலுவலகம் அமைக்கப்படுதலே சிறந்தது என்ற நோக்கில் 45 தமிழ்க்குடும்பங்கள் வசித்த பகுதி தெரிவுசெய்யப்பட்டது. அவ்வூரின் தலைவராக இருந்த அருள்ராஜா என்பவருடன் அப்போது மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் அப்துள் நஜீப் அவர்களின் தந்தை மர்ஹும் அப்துள் மஜீத் அவர்கள் இடம் தேவையின் அவசியம் பற்றி கலந்துரையாடினார்.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 11)” தொடர்ந்து வாசிக்க…)