தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 10)

(Thiruchchelvam Kathiravelippillai)
தமிழ்பேசும் மக்களது உறவுகள் திட்டமிட்டவகையில் பிரிக்கப்படுவதற்கு வேறான ஒரு நடைமுறையும் கையாளப்பட்டது.
ஜிகாத் இஸ்லாமியர்களின் மத ரீதியான நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகும். ஜிகாத் என்பது இஸ்லாமியர்களின் தனித்துவத்தினைப் பேணுவதாக இஸ்லாமிய மதத்தினைப் பின்பற்றுபவர்களால் நோக்கப்படுகின்றது.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 10)” தொடர்ந்து வாசிக்க…)

திரும்பிப் பார்க்க வைக்கும் இராதாவின் உரை

சட்ட ரீதியாக அணுக வேண்டிய விடயமொன்றை உணர்வுபூர்வமான ஆர்ப்பாட்டத்தின் மூலம் நிறைவெற்றிக் ெகாள்ள முடிந்திருக்கிறதா? உதாரணத்திற்குத் தனி யார் மருத்துவ கல்லூரி சைற்றத்திற்கு எதிராக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால், எதுவும் நடந்திருக்கிறதா? இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் சைற்றம் கல்லூரி மாணவர்களுக்ேக வெற்றி கிடைத்திருக்கிறது.

(“திரும்பிப் பார்க்க வைக்கும் இராதாவின் உரை” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part7)

இதேவேளை புலிகளின் பரப்புரைப் பகுதிகள் வன்னி நிலைபற்றி ஏற்கனவே மேற்கொண்டு வந்த புனைவை மேலும் விரிவுபடுத்தி திரிவுபடுத்தி மேலும் பொய்ப்பரப்புரைகளில் ஈடுபட்டன. படையினரின் தாக்குதல்களில் கொல்லப்படும் மக்கள் பற்றிய உண்மைச் செய்திகளுடன் மேலும் பல பொய்களையும் இணைத்துத் தமது பரப்புரையை இவை மேற்கொண்டன. கொல்லப் படும் மக்களின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல புலிகள் கூட்டிச் சொல்லவும் தொடங்கினர். அதேவேளை அரசுக்கெதிரான கண்டனப் பரப்புரையை யும் அவை தீவிரப்படுத்தின. ஏற்கனவே சமூக அமைப்புகள், சக்திகளைக் குலைத்து தமக்கிசைவான சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்த புலிகள் அந்த அமைப்புகளைக்கூட இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலிகளின் ஆட்சி, நிர்வாகக் கட்ட மைப்புகள் சகலதும் தகர்ந்து ஆட்டம் கண்டது. போர் தொடங்கிய போதே தமது நிர்வாகக் கட்டமைப்புகள் சகலதையும் போருக்கும் ஆட்சேர்ப்புக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தி வந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். புலிகள் அடிப்படையில் ஒரு இராணுவ அமைப்பு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்வது அவசியம்.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part7)” தொடர்ந்து வாசிக்க…)

வேலைவாய்ப்பின்மைக்குக் காரணம் எமது தமிழ் அரசியல் தலைமைகளே

– தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கோபிநாத்

கிழக்கில் தமிழ் மக்களின் பிறப்பு வீதம் குறைவடைந்து செல்கின்றது. அதற்கான காரணம் வறுமை. அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டாலே வறுமையை ஒழிக்கலாம் என்கிறார், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், கிழக்கின் இளைஞர் முன்னணி தலைவருமான க. கோபிநாத். முன்னாள் பிரதியமைச்சர் கோ.கணேசமூர்த்தியின் மகனான கோபிநாத், தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி.

(“வேலைவாய்ப்பின்மைக்குக் காரணம் எமது தமிழ் அரசியல் தலைமைகளே” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் கைதிகளின் விடுதலையே தீர்வுக்கான வாசலைத் திறக்கும்

அரசியல் கைதிகளை சிறையில் வைத்துக் கொண்டு அரசியல் தீர்வை எட்டவே முடியாது, மண்டேலாவின் விடுதலையே ஆபிரிக்காவில் நல்லிணக்கம் ஏற்பட வழிவகுத்தது. எனவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையே அரசியல் தீர்வுக்கான வாசலை திறக்கும் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

(“அரசியல் கைதிகளின் விடுதலையே தீர்வுக்கான வாசலைத் திறக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

இந்தோனேசிய நிலநடுக்கம், சுனாமி; சுமார் 380 பேர் பலி

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர்அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமியில் சிக்கி சுமார் 384இற்கும் அதிகமானோர்உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக இந்தோனேசியா உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இந்தோனேசியாவின் சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள் அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளன.

(“இந்தோனேசிய நிலநடுக்கம், சுனாமி; சுமார் 380 பேர் பலி” தொடர்ந்து வாசிக்க…)

புதிய பஸ் நிலையம் தொடர்பாக மீண்டும் முரண்பாடு

வவுனியா புதிய பஸ் நிலையத்தில், இன்று மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட காலத்தில் இருந்து தொடர்ச்சியாக தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையில், இன்று பஸ் நிலையத்துக்கு முன்பாக பஸ்களை நிறுத்த முடியாது என வவுனியா நகரசபையால் சமிக்ஞை பதாதை அமைக்கப்பட்டபோது, ஓட்டோ உரிமையாளர்களுக்கும் நகரபிதாவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

(“புதிய பஸ் நிலையம் தொடர்பாக மீண்டும் முரண்பாடு” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாணசபையின் அஸ்தமனம்

இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களிலும் மிகப் பின்தங்கியிருப்பது வடமாகாணமே. அதிலும் வன்னி மாவட்டங்களின் நிலை இன்னும் மோசமான நிலையிலே உள்ளது. இதையிட்ட அக்கறையை வடமாகாணசபை கொள்ளவில்லை என்பது கண்டனத்துக்குரியது.

(“வட மாகாணசபையின் அஸ்தமனம்” தொடர்ந்து வாசிக்க…)

திருகோணமலையில் மக்களோடு மக்களாய்

திருகோணமலை வாசகசாலையினால் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலைகள் மட்டத்தில் நடத்தபட்ட போட்டிகளின் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வின் போது