இருபதாம் நூற்றாண்டின் பெரிய தமிழ் ஆளுமைகளில் ஒருவரான தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா அவர்கள். இன்று காலை 6.02.2017 ஆறுமணியளவில் காலமானார். தமிழுக்கு அணி செய்த அறிஞர் அவர்கள் 70 க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை எழுதியவர். மதரீதியாக இசுலாமியப் பெருந்தகையாக இருந்தும் தம் மக்களுக்கு இனிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டியவர், கலைக்களஞ்சியப் படைப்பாளர், எட்டு இலட்சத்துக்கு மேற்பட்ட அறிவியல் கலைச்சொற்களை தமிழுக்குத் தந்தவர்.ஐ.நா.வின் கூரியர் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக உலகத்துத் தொன்மைக் கலைகள் யாவையும் தமிழுக்குக் கொண்டுவந்தவர். போற்றப்பட வேண்டிய அரிய மனிதர். ஆழ்ந்த இரங்கல்கள்.
(“அஞ்சலிக்கிறோம்….: தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா” தொடர்ந்து வாசிக்க…)