வடக்கு கிழக்கு இணைப்புக்கான தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயங்களும்; முஸ்லிம் மக்களின் பொறுப்பும். – அ.அஸ்மின் (வ.மா.ச. உறுப்பினர்)

வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் அ. அஸ்மினால் கடந்த ஆண்டு இதே தினத்தில் எழுதப்பட்ட கட்டுரை.

“வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முஸ்லிம் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்ற அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தொடர்தேர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற அதே சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்கள் சார்பாக இதுவரை தீர்க்கமான எவ்வித பதில்களும் முன்வைக்கப்படவில்லை. முஸ்லிம் மக்கள் வடக்குக் கிழக்கு இணைப்பு விடயத்தில் பூரண உடன்பாட்டினை இதுவரை வெளியிடவில்லை. இதனை அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான மக்கள் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் குழுவிற்கு முன்னதாக குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருப்பதன் மூலம் எம்மால் அறிந்துகொள்ள முடியுமாக இருக்கின்றது.
எனினும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வடக்குக் கிழக்கு இணைவு விடயத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்மறையாக நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடிகின்றது, அத்தோடு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைவுக்கு உடன்பட்டு விடுவார்கள் என்ற அச்சமும் சமூகவலைத்தளங்களில் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. எது எவ்வாறாயினும் மேற்படி விடயத்தை மிகவும் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்திக்கவும் கருத்தாடவும் தமிழ் முஸ்லிம் சமூகத் தலைவர்கள் முன்வரவேண்டும்.

(“வடக்கு கிழக்கு இணைப்புக்கான தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயங்களும்; முஸ்லிம் மக்களின் பொறுப்பும். – அ.அஸ்மின் (வ.மா.ச. உறுப்பினர்)” தொடர்ந்து வாசிக்க…)

ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்

இறந்தவர்களைப் புதைப்பது  ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்:
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது.

(“ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்” தொடர்ந்து வாசிக்க…)

கொங்கோ: அலைபேசியில் வழியும் குருதி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இயற்கை வளங்கள் வரமா, சாபமா? என்கிற கேள்வி ஒருவகையில் அபத்தமானது.  ஏனெனில், இன்று உலகளாவிய நிலையில் வளர்ந்துள்ள நாடுகளின் அடிப்படையாக, இயற்கை வளங்களே இருந்தன; இன்னமும் இருக்கின்றன. அந்த வளங்கள் சொந்த நாட்டில் இருந்த வளங்களாகட்டும் அல்லது சுரண்டிய வளங்களாகட்டும் அவையே அந்நாடுகளை வளர்ச்சியின் உச்சிக்குக் கொண்டு சென்றன. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராட்சியமாக, பிரித்தானியா திகழ்வதற்கு, அவற்றின் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளின் இயற்கை வளங்கள் முக்கிய காரணியாகின. இவை, ஏனைய காலனியாதிக்கவாதிகளுக்கும் பொருந்தும். காலங்கள் மாறிவிட்டன. ஆனால், களங்கள் மாறவில்லை. மாறாத களத்தின் நிகழ்காலக் கதைதான் இது.

(“கொங்கோ: அலைபேசியில் வழியும் குருதி” தொடர்ந்து வாசிக்க…)

ஜி-20 மாநாடு: குழப்பத்தில் கதைபேசல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
குழுக்கள் ஒற்றுமையாலும் பொதுமைப்பட்ட பண்புகளினாலும் கட்டியெழுப்பப்படுபவை. அவற்றின் அடிப்படையே குழு உறுப்பினர்களுக்கிடையிலான பொதுநோக்கு, இணங்கிப் போகும் தன்மை, விட்டுக்கொடுப்பு ஆகியன. அவை சாத்தியமாகாதபோது, அக்குழுக்கள் நெருக்கடியை எதிர்நோக்கும். ஒன்றுக்கொன்று வேறுபட்ட, ஒருவரை ஒருவர் விஞ்ச விளைகின்ற நிலையில் குழுவுக்குள் குழப்பம் விளைவது தவிர்க்கவியலாதது. ஆனாலும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வது போல், எதையாவது செய்யலாம் என்ற நோக்கில், குழப்பத்தில் உள்ள குழு கூடுவதுண்டு; கதைப்பதுவுமுண்டு. ஆனால், இறுதியில் விளைவதேதும் இல்லை.

(“ஜி-20 மாநாடு: குழப்பத்தில் கதைபேசல்” தொடர்ந்து வாசிக்க…)

சம்மந்தனின் அரசியல் நேர்மை…?

மலையக மக்களை இழிவு படுத்தும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறியமைக்கு எதிராகத் தமது கண்டனத்தைத் நேற்று முன்தினம் (12.07.2017) வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியப் பிரதிநிதிகள் கண்ணியமான முறையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனிடம் நேரில் தெரிவித்தனர். இதன்போது மேற்படி விடயம் குறித்த தமது கண்டன அறிக்கையையும் சம்மந்தனிடம் பிரதிநிதிகள் கொடுத்திருந்தனர்.

(“சம்மந்தனின் அரசியல் நேர்மை…?” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அமைச்சர்கள் பழைய எதிர்பார்க்கைகள்!?

வடக்கு மாகாண சபை நீயா நானா நிகழ்ச்சி முடிவுக்கு வந்தபின் இரண்டு அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களை முதல் அமைச்சர் வசம் கையளித்து அமைதி காக்கின்றனர். இடையில் யாரை புதிய அமைச்சர்களாக நியமிப்பது என்ற கலந்துரையாடல் தமிழ் அரசு கட்சி காரியாலயத்தில் இடம் பெற்றதாகவும் அதில் திரு ஆணல்ட் அவர்களை கல்வி அமைச்சராக நியமிக்க பெரும் ஆதரவும்   அதே வேளை எதிரணியில் திருமதி அனந்தி  அவர்களையும் அமைச்சராக்கும் அழுத்தமும் வந்ததாம்.

(“புதிய அமைச்சர்கள் பழைய எதிர்பார்க்கைகள்!?” தொடர்ந்து வாசிக்க…)

FASCISM, SOVEREIGNTY AND THE TRUTH ABOUT THE TAMIL STRUGGLE

(Dr. Dayan Jayatilleka)

Let’s have a little context, shall we, comrades? When the vast multitude of Sri Lankan citizens was hoping and praying for emancipation from decades of terrorism and was determined to finish off the Tigers, Ajit Surendra Rupesinghe (ASR) was striving pathetically to mobilise opposition to that goal, by creating an organisation termed the Anti-War Front. An Anti-War Front, precisely during the last war! Relatively recent exposures in the media reveal that the Anti-War Front received quite considerable funding from a Western source.

(“FASCISM, SOVEREIGNTY AND THE TRUTH ABOUT THE TAMIL STRUGGLE” தொடர்ந்து வாசிக்க…)

புகலிட இலக்கிய சந்திப்பின் 47 வது தொடர் இம்முறை இலங்கையின் மலையகத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் 30ஆம் திகதிகளில்இடம்பெறவுள்ள இந்நிகழ்வு கொட்டகலை யில் நடக்க ஏற்பாடாகியுள்ளது.சுமார் முப்பது வருடகாலமாக புகலிட நாடுகளில் இடம்பெற்று வந்த இந்த சந்திப்பு தொடரானது யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையிலும் நடத்தப்பட்டு வருகின்றது.
47 வது இலக்கியச் சந்திப்பு இடம் – கொட்டகலை

(“புகலிட இலக்கிய சந்திப்பின் 47 வது தொடர் இம்முறை இலங்கையின் மலையகத்தில் இடம்பெறவுள்ளது.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்நாட்டில் 27 வது தியாகிகள் தினம்

தமிழ்நாட்டில் தியாகிகள் தினம் நினைவுகூரப்பட்டது. தமிழ்நாட்டின் புளல் அகதிமுகாமில் வாழும் தோழர்கள் மற்றும் தமிழ் நாட்டின் முற்போக்கு ஜனநாயக சக்திகள் தமது அஞசலிகளை செலுத்தினார்கள்.

கனடாவில் 27 வது தியாகிகள் தினம்

இம்முறையும் வருடம் தோறும் நடைபெறும் தியாகிகள் தின நிகழ்வு கனடாவில் ஜுன் 24 ம் திகதி பிப 6 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10:30 மணி வரைக்கும் நடைபெற்றது. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)யினருடன் இணைந்து ஈபிடிபி, ரெலோ, புளட், ஈரோஸ், ஈபிஆர்எல்எவ்., சம உரிமை இயக்கம், இலங்கையின் பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன், பொது மக்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(“கனடாவில் 27 வது தியாகிகள் தினம்” தொடர்ந்து வாசிக்க…)