முள்ளிவாய்காலில் அரசியல் பேசுவதை தடைபோடும் அக்கா

நேற்று ஆர்ப்பாட்டம் போட்ட அக்கா ஆற்ற ஆள் என்று பாருங்கள்…. அங்க அனந்திய அரசியல் பேசவிட்டுட்டு இங்குவந்து சொல்லுறா யாரும் அரசியல் பேசக்கூடாதாம். இவர்கள்தான் மக்களாம்…முள்ளிவாய்க்காலில் மக்கள் சம்மந்தன் ஐயாவை திட்டித் தீர்தார்களாம்…இது ஊடகங்களின் செய்தி…நீங்களே தீர்மாணியுங்கள் மக்களா அல்லது இந்த மாணம்கெட்ட பிழைப்புகளா என்று….ஜனநாயகம் பற்றி அறிந்திராத அனந்தி போன்றவர்கள் ஜனநாயகத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி ஜனநாயக துஸ்பிரயோகம் செய்வது மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கே வழிவகுக்கும்…இதை மக்கள் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல…

முள்ளிவாய்காலில் பல நிகழ்வுகள்

“போர்க்காலத்திலும் தாங்கள் கைவிடப்பட்டிருந்தோம். இப்போதும் அப்படியான ஒரு நிலைதான் உருவாகியிருக்கு. ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தப்பார்க்கினம். கொல்லப்பட்டவைக்கு உண்மையில அஞ்சலி செலுத்திறதெண்டால், எல்லாருமாகக் கூடி, ஒண்டா நிண்டு அதைச் செய்யலாமே! அப்பிடிச் செய்யாமல், ஏனிப்பிடி ஆளுக்கு ஒரு இடமாக நிண்டு கொண்டாடுகினம்? இது எனக்குச் சரியாகப் படேல்ல. எல்லாரும் எங்களுடைய கண்ணீரையும் கவலைகளையும் இழப்புகளையும் தங்கடை அரசியலுக்குப் பயன்படுத்த முயற்சிக்கினம். இதுதான் நடக்குது”. என்று சொல்லிக் கவலைப்பட்டார் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009 மே 17 இல் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் பலி கொடுத்த தந்தையொருவர்.

(“முள்ளிவாய்காலில் பல நிகழ்வுகள்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளி வாய்க்காலின் நினைவலைகள்

என் இனம் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட இன்றைய நாள் மே பதினெட்டு …! இலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இயக்கங்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டன. 2007 வரை ஈழப்போரில் குறைந்தது 70,000 பேர் உயிரிழந்தனர். 2008 இன் இறுதிப் பகுதியிலும், 2009 ஆரம்பத்திலும், ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படைத்துத்துறையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது. இரு தரப்புக்குமிடையே ஏறத்தாழ 300,000 பொதுமக்கள் அகப்பட்டனர். 2009 மே 18 விடுதலைப் புலிகளின் தலைவரைத் தாம் கொன்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. போரின் இறுதிக் கட்டத்தில் ஏறத்தாழ 40,000 பொதுமக்கள் வரை இறந்தனர் என ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவித்தது. இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாடற்ற ஏவுகணைத் தாக்குதல்களில் அகப்பட்டு இறந்தனர் என அவ்வறிக்கை தெரிவித்தது. இரு தரப்பினரும் போர்க்குற்றங்கள் இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்..இதைய அஞ்சலி ,.முள்ளி வாய்க்கால் ஒரு முடிவல்ல ….!!!!

(Kulam Peter)

புகழ்பெற்ற இரு “சிங்கள” தலைவர்களின் பூர்வீகம்

1.
17 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து குடியேறிய “நீலபெருமாள்” என்ற தமிழன் தன்னை “நீலபெருமாள்கே ” என்று சிங்கள பெயர் பெற்றார். நீலபெருமாளின் மகன் வழி வாரிசான “டயஸ் வியசதுங்க பண்டாரநாயக்கா ” [ 1770 இல் பிறந்தார் ] .இவர் கோரலை முதலியாராக இருந்தார்.இவரது மகன் “டானியல் பண்டாரநாயக்கா”, இவர் ஞானஸ்தானம் பெற்றது 1748 இல் .
“டானியல் பண்டாரநாயக்கா” வின் மகன் “தொன் சொலொமன் பண்டாரநாயக்கா”.இவர் பிரிட்டிசாருக்கு உளவாளியாக செயல் பட்டவர். இவரது மகன் தொன் கிறிஸ்டோபர் பண்டாரநாயக்கா. இவரது மகன் தொன் சொலொமன் டயஸ் பண்டாரநாயக்கா. இவரது புத்திரர் தான் S.W.R.D. பண்டாரநாயக்கா.
இவர்கள் கிறிஸ்தவ தமிழர்கள்.
2.
சிறு வயதில் தந்தையை இழந்த தம்பி முதலியார் என்ற தமிழன் கொழும்பில் குடியேறினான்.ஒல்லாந்துக்கு உளவு பார்த்தல் அவன் செய்த தொழில். தன்னை” ஏட்ரியன் ஜெயவர்த்தன ” என்று பெயர் மாற்றி கொண்டான் தம்பி முதலியார். இவரது மகன் தொன் ஏப்ரஹாம் ஜெயவர்த்தன. இவரது மகன் ஜேம்ஸ் அல்பிரட் ஜெயவர்த்தன. இவரது மகன் யுஜின் வில்பிரட் ஜெயவர்த்தன.இவரது மகனே J.R.ஜெயவர்த்தன.
ஜெயவர்த்தனாவின் மகன் ரவி திருமணம் முடித்ததும் ஒரு தமிழ் பெண்ணையே !
இவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களே.

(TSounthar Sounthar)

மே 18 (பகுதி 1)

(அருண் நடேசன்)

எங்கள் தேசத்தில் எம் இனத்தை கொலைகளத்தில் பலி கொடுக்கப்பட்ட நாள் , இறந்த அனைவருக்கும் எனது அஞ்சலிகள். ஆனால் இது யாரால் ஏற்பட்டது ? போரின் இறுதி நாட்கள் எவ்வாறு இருந்தன?வன்னியில் என்ன நடந்தது? பிரபாகரன் இறுதியாக The Three Hundred என்ற ஆங்கில படத்தை
பார்த்த பின்னர் எடுத்த முடிவு என்ன?
கொஞ்சம் நீளமான பதிவு ஆனால் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு பதிவு, ஒரு 20 நிமிடங்கள் ஒதுக்கி இதனை முழுவதும் படிக்கவும்.
களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு.

(“மே 18 (பகுதி 1)” தொடர்ந்து வாசிக்க…)

ஈழப்போரின் இறுதி நாட்கள்

காலச்சுவடு 1994இல் மீண்டும் துவங்கப்பட்ட காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் இதழியல் அறங்களில் ஒன்று, எந்தப் படைப்பையும் மறைவான பெயரில் வெளியிடுவதில்லை என்பது. இது தமிழக எழுத்துக்களுக்கு உறுதியாகக் கடைபிடிக்கப்பட்டாலும் இலங்கை அரசியல் சூழலைக் கருதி அன்றிலிருந்தே விதிவிலக்காகப் பல ஈழத்துப் பதிவுகளை மாற்றுப் பெயர்களில் வெளியிட்டு வருகிறோம். எனினும் அவர்கள் அடையாளம் எங்களுக்குத் தெரிந்திருக்கும். எழுதியவர் அடையாளம் தெரியாமல் ‘காலச்சுவடில்’ வெளிவந்த முதல் எழுத்து ‘அநாமதேயன் குறிப்புகள்’. மீண்டும் இலங்கை அரசியல் சூழலைக் கணக்கில்கொண்டு எடுக்கப்பட்ட முடிவு அது.

(“ஈழப்போரின் இறுதி நாட்கள்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளி வாய்க்கால்

1984 காலப்பகுதியில் புலிகள் அடிக்கடி கண்ணி வெடி தாக்குதல்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள்.இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை மட்டுமே செய்திகளாக வரும்.இந்த தாக்குதல்களின் பின் விளைவுகள் ஒரு பொழுதும் செய்திகளாக வந்ததில்லை. இதே காலப்பகுதியில் யாழ்பாணத்தில் பொதுவாக தமிழர்கள் புலிகள் அடிக்கிறார்கள்.மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே கேள்வி. போதாக்குறைக்கு வெளிநாட்டில் புகலிடம் கோரிய தமிழர்களும் இதே கேள்விதான்.

(“முள்ளி வாய்க்கால்” தொடர்ந்து வாசிக்க…)

என் மனவலையிலிருந்து……!

(சாகரன்)

கம்யூட்டர் வைரஸ்: மனிதனை  தோற்கடிக்குமா…? மனிதனால் உருவான மெ(வ)ன் மூளை…!

வழமையாக வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதற்கு ரஷ்யா தான் காரணம் எனக் குற்றம் சாட்டப்படுவது வழக்கம். இதில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை. இந்த தடவை ரஷ்ய நிறுவனங்களின் கணனிகள் பெருமளவில் இந்த வைரஸ் என்ற மென்பொருள் ஆயுதத்தால்  பாதிக்கப்பட்டுள்ளன. அதனாலும் இதற்கான கிரிமினல்கள் அமெரிக்காவில் இருந்தே இயங்கலாம் என்று நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அனைத்தும் இணையவலைப் பின்னலுக்குள் அடங்குகின்றன. இது கிரிமினல்களுக்கும் வாய்ப்பாகிவிடுகிறது.

(“என் மனவலையிலிருந்து……!” தொடர்ந்து வாசிக்க…)

மென்பொருள் ஆயுதம்: அமெரிக்க இலத்திரனியல் ஓட்டையூடு குழப்பம் விளைவிக்கும்

இன்று உல‌க‌ம் முழுவ‌தும் ப‌ர‌வி வ‌ரும் க‌ண‌னிக‌ளை செய‌லிழ‌க்க‌ வைக்கும் வைர‌ஸ் அமெரிக்காவில் இருந்து ப‌ர‌வி இருக்க‌லாம் என‌ ந‌ம்ப‌ப் ப‌டுகின்ற‌து. அத‌ற்குக் கார‌ண‌ம் அமெரிக்க‌ உள‌வு நிறுவ‌ன‌ம் NSA ஹேக்க‌ர்ஸ் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ பாதையின் ஊடாக‌த் தான் இந்த‌ வைர‌ஸ் ப‌ர‌வுகின்ற‌து. அதாவ‌து வின்டோஸ் மென்பொருளில் ஒரு பாதுகாப்பு ஓட்டை உள்ள‌து. அத‌ன் மூல‌மாக‌த் தான் கிரிமின‌ல்க‌ள் வைர‌ஸ் அனுப்புகிறார்க‌ள். இந்த‌ பாதுகாப்பு ஓட்டை NSA உள‌வறிவ‌த‌ற்காக‌ உண்டாக்க‌ப் ப‌ட்ட‌து.

(“மென்பொருள் ஆயுதம்: அமெரிக்க இலத்திரனியல் ஓட்டையூடு குழப்பம் விளைவிக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

திறந்த வெளிப்படையான கடிதம்!!

(பூரணமாகவும், கச்சிதமாகவும், மற்றும் உண்மையாய் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன்)

பெறுனர்:
திரு. நீரஜ் டேவிட் மற்றும் திரு. ரவி அருணாச்சலம்,
IBC Tamil,
London, UK

திரு நீரஜ் டேவிட் மற்றும் திரு ரவி அருணாச்சலம் அவர்களுக்கு,

எனது பெயர் யோகீசன். 1980 களின் தொடக்கத்திலிருந்து எழுத்தாளரகவும், சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் பங்களிப்பாளனாகவும் இன்று வரை நான் எழுத்துப் பணியில் இருக்கிறேன். மற்றும் பல்வேறு தலைப்புகளின் கீழ் சமூக ஊடகத்தில் பல கட்டுரைகள் கொடுத்துள்ள “புலோலியூரான்” என்ற ஒரு நன்கு அறியப்பட்ட நபர். IBC, TRT போன்ற தமிழ் ஊடகத்திலும் நன்கு பிரசித்தமானவன். எழுத்து மற்றும் கருத்துப் பதிவுகள் இதுவே என் பேரார்வம், மற்றும் அறியப்பட்ட மட்டத்தில் பொது ஊடகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளுடனும் என்னை நான் இணைத்துள்ளேன்.

(“திறந்த வெளிப்படையான கடிதம்!!” தொடர்ந்து வாசிக்க…)