புதிய நாடாளுமன்றம்: பா.ஜ.க – காங்கிரஸ் இணைந்து செய‌ற்படுமா?

(எம். காசிநாதன்)
இன்று திங்கட்கிழமை (17), 17 ஆவது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, இந்திய நாடாளுமன்றம் கூடுகிறது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு, கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவரின் உரை என்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சி தொடங்குகிறது.

சிறுபான்மை வாக்குவங்கிதான் வெற்றியை தீர்மானிக்கிறதா?

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கையின் வாக்கு வங்கி அரசியல் கட்டமைப்பு என்பது, நாம் விரும்பியோ, விரும்பாமலோ இன-மத தேசியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு விட்டது. கொள்கைகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வாறு அமைந்தாலும், வாக்கு வங்கியின் அத்திவாரம் என்பது, இன்றும் இன, மத தேசிய அடிப்படைகளில்தான் இருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் இலங்கையின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட முக்கிய மாற்றமாக, நாம் அவதானிக்கக்கூடியதொரு விடயம், கட்சி சார்ந்த வாக்குவங்கியின் வீழ்ச்சியாகும்.

இந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே

அந்நியத் தலையீடு பற்றிய நம்பிக்கைகள், ஈழத்தமிழர் அரசியலில் தவிர்க்கவியலாத பங்கு எனுமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தி வருகிறது. எந்த அந்நிய நாடுகள் மீது நம்பிக்கை விதைக்கப்பட்டதோ, அவையே போருக்கான ஆயுதங்களையும் வழங்கின என்ற உண்மை மறைக்கப்படுகிறது; மறக்கப்படுகிறது. ஞாபகமறதி நிறைந்த சமூகம் தொடர்ந்தும் இன்னலுறுவதற்கு விதிக்கப்பட்டது.

அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 4

( யஹியா வாஸித் )

யார்இந்த பௌசி ஹாஜியார் – நம்மாக்கள் ஏன் அவரது காலில் போய் விழுந்தார்கள்.

1987 டூ 2009 வரை உள்ள காலம்தான் மொத்த முஸ்லிம்களையும் கண்
தொறக்க வச்ச காலம்.எல்லாமே அதிசயமாவும், ரொம்ப ஆச்சரியமாவும்
இருந்தது எங்களுக்கு, எத நம்புறது, எத கையுடுவது என்டு தெரியாமல்
இருந்தது,தாயும், பிள்ளையும், வாயும் வயிறுமாக இருந்த தமிழ் நண்பர்கள்,
வாடிக்கையாளர்கள், ஆசிரியர்கள்,போடிமார், தமிழ் சண்டியர்கள்,
எல்லோருமே, எல்லாமுமே, தமிழ் சாமான்ய மக்களை தவிர மற்ற
எல்லோருமே எங்களை ரெண்டாம் கண் கொண்டு பார்த்தார்கள்.

நரேந்திர மோடி மாலைதீவுக்குச் சென்று கொழும்பு வந்ததன் பின்னணி


தெற்காசியக் கடற்பரப்பில் அமெரிக்காவின் பொலிஸ்காரனாக மாறியுள்ள மோடியின் இந்தியா- ஏற்க விரும்பாத இலங்கை

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் நான்கு மணி நேரப் பயணமாகக் கொழும்புக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமியவாதிகளின் பயங்கரத் தாக்குதல்களை தடுப்பதற்கு இலங்கைக்கு இந்தியா உதவியளிக்கும் என்று பகிரங்கமாகவே உறுதியளித்துள்ளர். பூகோள அரசியலில் சிக்குண்டுள்ள இலங்கையில் இஸ்லாமிய இயக்கம் ஒன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளமை அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கே அச்சுறுத்தல் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் நரேந்திர மோடியின் கொழும்புக்கான பயணம் அமைந்துள்ளது. இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மாலைதீவுக்குச் சென்ற நரேந்திர மோடி, மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராகிம் முகமதுவோடு பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்கைளச் செய்துமுள்ளார்.

தி.மு.கவுக்கு எதிராக ரஜினியைக் களமிறக்க பா.ஜ.க வியூகம்

(எம். காசிநாதன்)
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர், மான்ய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக ஆரம்பிக்கும் நேரத்தில், அ.தி.மு.கவுக்குள் பூகம்பம் உருவாகி இருக்கிறது. மத்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், பா.ஜ.க இந்தமுறை இல்லை. ஆனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற காரணத்தால், ‘அடையாள நிமித்தமாக’க் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுக்கும், ஓர் அமைச்சர் பதவியை, மத்திய அமைச்சரவையில் வழங்க பா.ஜ.க முன் வந்தது.

பிணங்களுடன் கிடந்து மீண்டேன்

1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை”

இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய இரவு 1987 மார்ச் 30ம் திகதிய யாழ்ப்பாணத்து இரவு அப்படி இருக்கவில்லை. அது ஒரு கோர இரவு அது படு கோரமாகத் தமக்கு அமையப் போகின்றது என்பதை உணராமல், நாளாந்தம் கடந்து போகும் சாதாரண இரவு போலக்கருதி மறுநாளைத் தரிசிக்கத் துயில்வதற்காகத் தமது இரவு உணவைப் புசித்து கொண்டிருந்தார்கள்… அவர்கள் புலிகள் இயக்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள்.

அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 3

(யஹியா வாஸித் )

மொத்த ஸ்ரீலங்கா சோனவர்களினதும் டேர்ணிங் பாயிண்ட் இது.

1983 ஜூலை கலவரம் முடிந்த பின்னும், 2009 புலிகளை அடக்கி, ஒடுக்கி ஊமை களாக்கிய
போதும் சிறிலங்காவில் உள்ள மொத்த சிறு பான்மையினருக்கும், ஒரு செய்தி
ரொம்ப தெளிவாகவும், கூர்மையாகவும் சொல்லாமல் சொல்லப் பட்டது.

தோழர் இராஜனின் 34வது ஆண்டு நினைவில்;………..

தோழர் இராஜன் (இரவீந்திரன்) யாழ் மாவட்டத்தில் கோப்பாயை பிறப்பிடமாகக் கொண்டவர். 1980ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் உயர்கல்வியைக் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் பொதுவாழ்க்கையில் தன்னை அற்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்டவர். ஈழமாணவர் பொதுமன்றதின் (GUES) நிர்வாகக்குழு உறுப்பினராக செயற்பட்டவர். போராடுவதிற்காக கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்வதிற்காக போராடவும் மாணவர்களை அணிதிரட்டினார். அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதில் பிரதான செயற்பாட்டாளராக விளங்கியவர். 1980களில் ஈழமாணவர் பொதுமன்றதினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்துவகையான போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகளிலும் களச்செயற்பாட்டாளராக இயங்கியவர்.