மட்டுநகர் கல்லடி ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை, பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டித்து, மட்டக்களப்பு கல்லடிசுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக ஊழியர்கள், இன்று செவ்வாய்க்கிழமை 22.08.2017 கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள்நிறுவகத்துக்கு முன்னால் ஒன்று திரண்ட கல்விசார் மற்றும் கல்விசாராஊழியர்கள், கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதி மாணவர்கள்சிலரால் ஆக்கிரத்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும்நீதிமன்றம் விடுத்துள்ள கட்டளையை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும்போராட்டம் எனும் போர்வையில் எமது கலாசார விழுமியங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் உடனடியாக அம்மாணவர்கள், நிர்வாக கட்டடத்தொகுதியிலிருந்து வெளியேற வேண்டுமெனவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

தமிழ் ​மொழிச் சமூகங்களைப் பலி எடுக்கும் பிரித்தாளும் தந்திரம்

(எஸ்.கருணாகரன்)
‘பிரித்தாளும் தந்திரத்தில் பிரித்தானியர்களுக்கு நிகரில்லை’ என்று சொல்வார்கள். ஆனால், அவர்களையும் விடச் சிங்கள அரசியல் தலைமைகள் நிபுணத்துவம் மிக்கவை என்பது இலங்கையின் அண்மைய வரலாறு. இதற்கு மிக எளிய உதாரணம், 1970 கள் வரையில் இணக்கமாக, ஒருமுகப்பட்டிருந்த இலங்கையின் சிறுபான்மையினங்கள், இப்போது மிக ஆழமாகப் பிளவு படுத்தப்பட்டுள்ளன. அகரீதியாகவும் புறரீதியாகவும் இந்தப் பிளவு மிக ஆழமாகச் செய்யப்பட்டுள்ளது.

(“தமிழ் ​மொழிச் சமூகங்களைப் பலி எடுக்கும் பிரித்தாளும் தந்திரம்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழர்களுக்கென்றே தமிழர் ஆட்சி!

ராஜிவ் ஆட்சிக்கு வந்த புதிதில் கொஞ்சம் வேடிக்கையாகவும் கொஞ்சம் அதிர்ச்சியாகவும்தான் இருந்தது. இடதுசாரிகளை ஒரு சிறுபிள்ளை மனோபாவத்தில் அவர் விமரிசித்ததும் – கூடவே கைகோர்த்து அலையும் நண்பர்கள்தாம் அவரையும் ஆட்சியையும் இயக்குகிறார்கள் என்ற செய்திகளும்….
‘என்ன நடக்கிறது இங்கே!?’
அருண் நேரு, அருண் சிங், இன்னும் நான் பெயர் மறந்துபோன சிலரும்…ராஜீவுடனேயே வலம் வந்தார்கள்.
காங்கிரஸ் கட்சியில் குறிப்பாக மூத்தத் தலைவர்களிடம் இது விசனத்தை உண்டுபண்ணியது.
ஆனால் நிகழ்ந்ததென்னவோ, ஓராண்டுக்குள் ராஜிவிடம் மாறுதல்கள்….!

(“வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழர்களுக்கென்றே தமிழர் ஆட்சி!” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம் காங்கிரஸை அழிக்கின்றார் ஹக்கீம்!

(ரி. தர்மேந்திரன்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அழித்து வருவதை பொறுக்க முடியாமலேயே இக்கட்சியில் இருந்து சுய விருப்பத்தின் பெயரில் வெளியேறி உள்ளார் என்று ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான தொழிலதிபர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார்.

(“முஸ்லிம் காங்கிரஸை அழிக்கின்றார் ஹக்கீம்!” தொடர்ந்து வாசிக்க…)

தலைகளை தேடும் தமிழர் நிலை?!

ஈழமக்களின் அரசியல் வரலாற்றை சற்று நோக்கினால் அங்கு தலைகளை நோக்கிய பார்வை மட்டுமே தென்படும். மாறாக நல்ல தலைவர்களை நோக்கியதாக அல்ல. இதனை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் காலத்துக்கு பிந்திய தொடர் நிகழ்வாகவே நாம் பார்க்கவேண்டியுள்ளது. காரணம் அன்று டொனமூர் அரசியல் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை வடக்கில் பகிஸ்கரித்தும் அடுத்த தேர்தலில் பொன்னம்பலம் தலைமையிலான அணி பங்குபற்றியது. இருந்து அவர்கள் தேர்தலில் வென்றும் தனி சிங்கள மந்திரிசபை அமைந்தது.

(“தலைகளை தேடும் தமிழர் நிலை?!” தொடர்ந்து வாசிக்க…)

உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில் அமைச்சர் சத்தியலிங்கத்தின் மோசடிகள் அம்பலம்! (ஆதாரங்கள் இணைப்பு)

வடமாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சின் 2013ம் வருடத்துக்கான உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில், அமைச்சர் ப.சத்தியலிங்கம் பல கோடி ரூபாய்கள் மோசடி செய்துள்ளமைக்கான உறுதியான ஆதாரங்களை முறைப்பாட்டாளர்களில் ஒருவரான கணபதிப்பிள்ளை கந்தசாமி வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

(“உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில் அமைச்சர் சத்தியலிங்கத்தின் மோசடிகள் அம்பலம்! (ஆதாரங்கள் இணைப்பு)” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய இராணுவத்துக்கு கல்வியங்காட்டில் அஞ்சலி.

அது சரி வரதராஜப்பெருமாளைத்தானே இந்திய அரசின் கை கூலி என்றார்கள் அவரைக் காயோம் ஏனையவர்கள்தான் இருக்கின்றார்கள்

பொதுவுடைமைப் ப‌ண்ணைக‌ள்

இது “டிஸ்னி லேன்ட்” அல்ல‌, க‌ம்யூனிச‌ சொர்க்க‌புரி! ர‌ஷ்யாவில் இன்றைக்கும் சிற‌ப்பாக‌ இய‌ங்கும் க‌ம்யூனிச‌ ந‌க‌ர‌ம். இது அங்கு வாழும் ம‌க்க‌ளின் தெரிவு. யாரும் அவ‌ர்க‌ளை க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌வில்லை. (இன்றைய‌ ர‌ஷ்யாவில் க‌ம்யூனிச‌த்தை வெறுக்கும் முத‌லாளித்துவ‌ அர‌சு ஆட்சியில் இருப்ப‌தையும் குறிப்பிட‌ வேண்டும்.)
ஸ்டாலின் கால‌த்தில், சோவிய‌த் யூனிய‌னில் கூட்டுழைப்பு ப‌ண்ணை (Collective farm) முறை கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌து. நாட்டுப்புற‌ங்க‌ளில், அனைவ‌ரும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டி இருந்த‌து. அர‌ச‌ ப‌ண்ணைக‌ள் த‌னியாக‌வும், ம‌க்க‌ளின் கூட்டுற‌வுப் ப‌ண்ணைக‌ள் த‌னியாக‌வும் இருந்த‌ன‌.

(“பொதுவுடைமைப் ப‌ண்ணைக‌ள்” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சர் விக்கிக்கு வந்துள்ள சோதனை

(கே. சஞ்சயன் )
வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் ஒப்புதலைப் பெற்று விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன், பெரியதொரு சிக்கலாக மாறியிருக்கிறார். மன்னார் மாவட்டத்தில் இருந்து டெலோ சார்பில் வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட டெனிஸ்வரன், அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு ஏதுவாக, தமது அமைச்சர் பதவியை விட்டு விலகுவதற்கு தயாரில்லை. ஏனென்றால், அவ்வாறு பதவி விலகினாலும், டெனிஸ்வரனுக்கு அந்தப் பதவி மீண்டும் கிடைக்கப் போவதில்லை. விந்தன் கனகரட்ணத்தையோ, சிவாஜிலிங்கத்தையோ அல்லது மருத்துவர் கலாநிதி குணசீலனையோ தான், டெலோ அமைச்சர் பதவிக்குப் பரிந்துரைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(“முதலமைச்சர் விக்கிக்கு வந்துள்ள சோதனை” தொடர்ந்து வாசிக்க…)

வசை பாடி வாங்கிக்கட்டிய வடக்கு முதல்வர்!?

நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு அண்மைய நேரடி உதாரணம் வடக்கு மாகாண சபை முதல்வர் சாட்சாத் விக்னேஸ்வரன் என்பதை காணொளியில் கண்டேன். கடந்த காலங்களில் வடக்கு மாகாண சபையில் நடந்த நிர்வாக சீர்கேடுகளை பட்டியலிட்டு எதிர்கட்சி தலைவர் சபையில் கேள்வி எழுப்பி இருந்தார். அவர் குறிப்பிட்ட இருபது விடயங்கள் பற்றி பதில் சொல்லும் கடமை முதல்வருக்கு உரியது. (“வசை பாடி வாங்கிக்கட்டிய வடக்கு முதல்வர்!?” தொடர்ந்து வாசிக்க…)