(அக்கினி ஞானாஸ்ஞானம்)
முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்கி அழிக்கப்பட்டதன் கழிப்பு அடங்குவதற்கு முன்னரே கிளிநொச்சி இடம்பெயரவேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பீதி மக்களை ஆட்கொள்ளத்தொடங்கிவிட்டது. குண்டுச்சத்தங்களும் துப்பாக்கி வேட்டுகளும் உரத்து ஒலிக்கத் தொடங்கிவிட்டன. கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர்களால் நிரம்பிவழிந்து கொண்டிருந்தது. மாலை வேளைகளில் மக்கள் வெளியில் வரத்தயங்கினர். ஒருசில வியாபாரிகள் தங்கள் பொருட்கனை லொறிகளிலும் ரைக்டர்களிலும் ஏற்றிக்கொண்டு ஏ9 வீதிக்கு கிழக்காகவும் மேற்காகவும் கொண்டு சென்றனர்.
(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்……..(அத்தியாயம் 7)” தொடர்ந்து வாசிக்க…)