நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 9 மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மாகாண சபைகள் ஊடாக நிர்வகிக்கப்படும் 09 வைத்தியசாலைகளையே இவ்வாறு சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிபிட்டிய, அவிசாவளை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட பொது வைத்தியசாலைகளே சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை: கொரனா செய்திகள்
தோழர் றொபேட் என்ற சுபத்திரன்
மு.க.ஸ்டாலினுக்கு செல்வம் எம்.பி கடிதம்
முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும் திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை குறித்தும், கவனம் செலுத்துமாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பங்காளிகளின் தனிவழி சந்திப்பில் முக்கிய அமைச்சர்கள் இருவர் பங்கேற்பு
‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’
இலங்கையின் மாகாணசபைகளை மக்களுக்குப் பயனுடையவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா!(கடிதத் தொடர் – 10)
2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இவை முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ். நெற், சூத்திரம்.கொம், தேனி.கொம் ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்பு பட்டவர்களின் கவனத்துக்கும் கருத்துக்கும் பொருத்தமானவை என்று கருதுகிறேன் . எனவே இக்கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்கிறேன்.
எங்கள் ராசு சித்தப்பாவுக்கு எமது இதய அஞ்சலிகள்
(Puthumailolan Mahalingam)
எங்கள் ராசு சித்தப்பாவுக்கு எமது இதய அஞ்சலிகள்.துயரம் நிறைந்த நாட்கள் அவை.நாம் புலிகளின் துப்பாக்கிகளுக்கு எவ்வேளையும் இரையாக்கப்படலாம் என இருந்தவேளை எம்மில் ஒருவனை எங்கள் சகோதரன் தில்லைராஜனை கொலைசெய்து புதைத்தார்கள்.அவ்வேளை அடுத்து எம்மை கொலை செய்வதற்கு புலிகள் தேடிக்கொண்டிருந்தவேளை நாம் மிகவும் உயிராபத்துடன் ஊரைவிட்டு ஒருவாறு வெளியேறி நீர்கொழும்பு வந்துசேர்ந்தோம்.
கட்டாய சிறுவர் ஆட்சேர்ப்பு
துருக்கியிடம் காபூல் விமான நிலையம்?
வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) நட்புறவு நாடுகள் ஆதரவளித்தால், ஹமிட் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை ஏற்க துருக்கிப் படைகள் இணங்கியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் தெரிவித்துள்ளார். நேட்டோ நட்புறவு நாடுகளுடனான சந்திப்பொன்றிலேயே குறித்த கருத்தை அகர் வெளிப்படுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள இவ்விமான நிலையத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அங்குள்ள 500 துருக்கிப் படைகள் ஏற்குமென அகர் தெரிவித்துள்ளார். நிதி, உபகரண, அரசியல் ஆதரவானது நட்புறவு நாடுகளால் வழங்கப்பட்டாலேயே பொறுப்பை துருக்கி ஏற்குமென அகர் கூறியுள்ளார்.