இலங்கை: கொரனா செய்திகள்

கொழும்பு நகர் என்பது மிகவும் வேகமாக கொரோனா வைரஸ் பரவ கூடிய இடமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன், அவசியமற்ற இடங்களுக்கு செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு மரநடுகை

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருக்கோவில் பிரதேச கிளையின் ஏற்பாட்டில், சாகாமம் குளக்கரையில் மருத மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.

‘அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் தவறாக வழிநடத்த முயன்ற ரஷ்யா’

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நட்புறவாளர்கள், அவரது நிர்வாகத்தின் மூலம் கடந்தாண்டு ஐ. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது, அப்போது ஜனாதிபதி வேட்பாளராகவிருந்த ஜோ பைடனுக்கெதிராக, பிரசாரத்தின்போது தவறாக வழிநடத்தும் குற்றச்சாட்டுகளை, ரஷ்ய அரசாங்கம் விதைக்க முயன்றதாக, ஐ. அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைகீழ் நிலை!

(Maniam Shanmugam)

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களின் தேசிய உரிமைகளைப் பெறுவது சம்பந்தமாக கருத்துச் சொல்லும் தமிழ் தேசியர்கள் பலர், “தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால்தான் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற முடியாமல் இருப்பதாக” அடிக்கடி கூறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

எம் மனதில் சிம்மாசனமிட்டிருக்கும் தோழர் குமாரின் 36வது நினைவுதினம்……

தோழர் குமார் என எம்மால் அழைக்கப்பட்ட யாழப்பாணம் குருநகரை சேர்ந்த போல்டன் உதயகுமார் எம்மை விட்டுப்பிரிந்து 36 வருடங்கள் கடந்திருக்கிறது. இன்று அவர் தமிழ் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தன் உயிரை அர்ப்பணித்த தினமாகும்.தோழர் குமார் ஈபிஆர்எல்எவ் இன் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராவார்.

தீவிரவாதம் பற்றிய வர்த்தமானி எழுப்பும் கேள்விகள்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

பொது இடங்களில் பேசுவோரும் எழுத்தாளர்களும், இப்போது முன்னரை விட பன்மடங்கு கவனமாகப் பேசவும் எழுதவும் வேண்டியுள்ளது. ஏனெனில், கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வெளியிட்ட விசேட வர்த்தமானியின் கீழ், தீவிரவாதத்தையும் வன்முறையையும் இனங்களுக்கு இடையிலான கசப்புணர்வையும் பரப்புவோர் எனச் சந்தேகிக்கப்படுவோர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணையின்றி மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

தான்சானிய ஜனாதிபதி கொவிட் தொற்றால் பலி

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் ஜனாதிபதி ஜான் மகுபலி உயிரிழந்துள்ளார். 61 வயதுடைய அவர் உடல் நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதாகவும் அதனால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்து துணை ஜனாதிபதி சமியா சுலுஹ ஹாசன் அறிவித்துள்ளார்.

டக்ளஸை சந்திக்க விருப்பம் இல்லை

ஜனாதிபதியின் அறிவிப்புக்கமைவாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள நிலையில், அவரை ஒருபோதும் தாம் சந்திக்கப் போவதில்லையெனத் தெரிவித்த வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி, அவரை சந்திக்க விருப்பம் இல்லையெனவும் கூறினார்.

அம்பிகை

(Arun Ambalavanar)

அம்பிகை ஒரு களவாணிக் குடும்பத்தில் அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த மோசடிக்காரி. அம்பிகையின் அப்பன் நாகேந்திரம் சீவரட்ணம் 1987 க்கு முதல் பப்புவா நியூகினி நாட்டில் இருந்து புலிகளுக்கு பணம் சேர்த்தவர். ஒஸ்றேலியாவுக்கும் வந்து புலிகளுக்காக பணம் சேர்த்தவர். 1987ல் பப்புவா நியூகினி அரசு சீவரட்ணம் செய்த மோசடிக்காக அவரை அந்நாட்டிலிருந்து நாடு கடத்தியது. புலிகளுக்காக சேர்த்த பணத்தோடு சென்னைக்குப்போன சீவரட்ணம் புலிகளின் குறித்த பணத்தை பாவித்து லண்டனுக்கு முதலீட்டாளர் விசா எடுத்து வந்தார். உசாரான புலிகள் அவரின் சகோதரரான நாகேந்திரம் கருணாநிதியை 1990ல் திருகோணமலையில் கடத்திவைத்து தமக்குச்சேரவேண்டிய முழுப்பணத்தையும் மீட்டனர்.