சஜித்துக்கு ம.மு. கூ ஆதரவு

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க தமது கட்சி தீமானித்துக்கதாகத் தெரிவித்துள்ள மக்கள் முன்னேற்ற கூட்டணியின் செயலாள நாயகம் கணேஷ் வேலாயுதம், தமது ஆதரவின் ஊடாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். யாழ். ஊடக அமையத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்!(பகுதி 6)


(அந்தோணி!)

எங்களுடன் வந்த ஏனைய இரண்டு லொறிகளும் எங்கு சென்றன என்பது தெரியாது. நாங்கள் முப்பத்தைந்து பேரும் இரண்டு அறைகளிலும் பிரிக்கப்பட்டு உறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டோம். நாளைக் காலை டொமினிக் அண்ணன் வருவார் என்று கூறினர் அங்கிருந்தவர்கள். முதலில் ஏன்தான் விடிந்ததோ என்று நினைத்தநான், இப்போது இன்னும் ஏன் விடியவில்லை என்று சிந்திக்கலானேன்! விடிந்தது. கிணத்தடிக்குச் சென்று முகம் கழுவும்படி கூறினர். அங்கே சவற்காரம் இருந்தது. ஒன்றுக்கு நான்கு தடவை முகத்துக்கு சோப் போட்டு உரஞ்சிக் கழுவினேன். ஏனையோரும் அப்படித்தான் செய்தனர். காலை உணவாக இடியாப்பமும் சொதியும், சாம்பாரும் கொடுத்தார்கள். உண்டுவிட்டு டொமினிக் அண்ணன் வருகைக்காகக் காத்திருந்தோம்.

காந்தி: 150 ஆண்டுகள்

காந்தியார் கோவில்களுக்குச் சென்று
இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டவரில்லை.

இருக்கும் இடத்தில் தொண்டர்களுடன்
அமர்ந்து பிரார்த்தனை செய்வதே வழக்கம்.

அவர் ஒரு கோவிலுக்குச் செல்ல
முடிவெடுத்தார்.

கோட்டாவுக்கு பிரசாரத்துக்கும் யாழுக்கு வர முடியாது

யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு பாதுகாப்பு இல்லை என நீதிமன்றத்துக்கு கட்டளை அனுப்பும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசார காலத்திலும் யாழ்ப்பாணத்துக்கு வரமுடியாது என, முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்ண தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்;ப்புக்கு மாறாக முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் அ. வரதராஜப்பெருமாள்.

(காணொளியை காண….)

விவசாயத்தின் வீழ்ச்சியும் ஏற்றுமதி தேக்க நிலையும்

(அனுதினன் சுதந்திரநாதன்)

அண்மைய காலத்தில் இலங்கையின் விவசாயத்துறையில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியானது, இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டின் ஏற்றுமதி வருமானம், சென்மதி நிலுவை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் நேர்மறைத் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

சகல அரசு ஊழியர்களின் மாத சம்பளம் 3 ஆயிரம் ரூபாய் முதல் 24 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் ஏகமனதாக தெரிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பிரேரித்தார். அவரது யோசனையை செயற்குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்!(பகுதி 5)

(அந்தோணி!)
மருத்துவ மனைக்குச் சென்றவர்கள் வழக்குகளைச் சந்தித்தனர். இரண்டு பகுதியினரும் சட்டத்தரனிகளை ஏற்பாடு செய்தனர். ஊரில் இரண்டு வசதியானவர்கள் சண்டையிட்டால், இரண்டு சட்டத்தரணிகள் பணக்காரர் ஆவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே! இவர்கள் மருத்துவரையும் பணக்காரர்களாக்கிக் கொண்டிருந்தனர்.

பெய்ஜிங்கில் புதிய விமானநிலையம் திறப்பு

உலகின் மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய விமானநிலையமொன்றாக வரும் என எதிர்பார்க்கப்படும் மிகவும் நவீன வடிவமைப்புகளைக் கொண்ட புதிய விமானநிலையமொன்றை சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இன்று (25) திறந்து வைத்துள்ளார். நட்சத்திர மீன் வடிவிலான இந்த பெய்ஜிங் டக்ஸிங் சர்வதேச விமானநிலையமானது 2040ஆம் ஆண்டில் எட்டு ஓடுபாதைகளுடனும், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை பெறுமளவுக்கு தனது முழுக் கொள்ளவுடன் 2040ஆம் ஆண்டில் இயங்கவுள்ளது.