இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்

கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர் தங்கும் விடுதிகளை குறிவைத்தும் இஸ்லாம் மதவெறியர்களால் பாரியளவிலான மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழர்,சிங்களவர், வெளிநாட்டவர் என நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மேதினம்- அண்ணலின் அடிச்சுவட்டில்.

1800 களில் ஐரோப்பிய தொழிலாளர்கள் தங்களின் வேலை நேரத்தை குறைக்கவேண்டுமென்று போராடிக்கொண்டு இருந்தனர். ஆஸ்திரேலிய, ஆசியத்தொழிலாளர்களிடமும் இது பரவியது. தொழிலாளர்கள் உற்பத்திக்கான கருவிகள் எனவே அவர்களுக்கு ஓய்வு முக்கியமல்ல என்பதையே கருத்தாய்க்கொண்டிருந்தது முதாலாளிச்சமூகம். சுமார் 18 மணி நேரம் கூட தொழிலாளர்கள் தொழிச்சாலைகளில் உழைக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால், தொழிலாளர்கள் வேலை நேரத்தைக்குறைத்தே ஆக வேண்டும் என்று கடுமையாகப் போராடினார்கள். சிக்காக்கோவில் பெரும் போராட்டம் வெடித்தது. முக்கிய தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். மார்க்ஸ் இறந்த ஆறு ஆண்டுகள் கழித்து 1889, ஜூலை 14 அன்று பாரீஸ் நகரில் சர்வதேசியத் தொழிலாளர்களின் சர்வதேசிய தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது.இதில் 18 நாடுகளிலிலிருந்து 400 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஏங்கெல்ஸ் அதில் முக்கியமானவர். இக்கூட்டத்தில் தொழிலாளர்களின் வேலைநேரம் எட்டுமணிநேரமாக ஆக்கவேண்டுமென்ற முழக்கத்தை1890 மே 1 அன்று அனைத்துலக தொழிலாளர்கள் இயக்கமாக முன்னெடுக்கவேண்டுமென்று அறைக்கூவல் விடப்பட்டது.அதுவே சர்வதேசிய தொழிலாளர்தினம் எனப்பட்டது.

பிபிஸியின் செய்தியாளர் கீத்தா பாண்டே சொல்கிறார்……….

தனது 12 வயது மகனோடு 
கிட்டத்தட்ட 125 கிலோமீட்டர் பயணித்து, 
ராகுல் காந்தியை காணவந்த 
முஸ்தாக்விம் அகமது 
“நரேந்திர மோதியின் நாட்கள் எண்ணப்படுகின்றன,” 
என்று தெரிவித்தார்.

ஸஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புடையவர் இந்தியாவில் கைது

இந்தியா – கேரளா மாநிலத்தில் தற்கொலை தாக்குதல்தாரியொருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர், இலங்கையில் கடந்த நாளில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவரான, ஸஹ்ரான் ஷமீம் உடன் நெருங்கிய தொடர்புடையவரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ரியாஸ் அபூபக்கர் எனப்படும் 29 வயதுடையவராவார். அத்துடன் கேரளாவில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுமா, என்பது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பின

இலங்கையில் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் செயற்பாடு வழமைக்குத் திரும்பியுள்ளன. கடந்த 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களையடுத்து, சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவுக்கு இன்று காலை ஆலோசனை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 நாடுகள் இலங்கைக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை

கடந்த வாரம் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னர், ஐரோப்பிய ஒன்றியமும், 16 நாடுகளும் இலங்கைக்குச் சுற்றுலா செல்வது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளன.

புலனாய்வுக் கட்டமைப்பும் ஐ.எஸ் தாக்குதலும்

(க. அகரன்)

உலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும் ஓர் அழகிய தீவு என்றால் அது இலங்கையாகத்தான் இருக்கமுடியும். நீண்ட யுத்தத்தைக் கண்டு, அதன் ஓய்வுக்குப் பின்னர், மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் சந்தர்ப்பத்தில், ஏற்றுக்கொள்ள முடியாததும் நம்பமுடியாததுமான தாக்கத்துக்கு மீண்டும் சென்றுள்ளது நாடு.

உலகக் கிண்ணம்: குழாம்களில் தவறவிடப்பட்டவர்கள்

(Shanmugan Murugavel)

இங்கிலாந்தில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடருக்கான அனைத்து அணிகளின் குழாம்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் அனுமதி இல்லாமலே அடுத்த மாதம் 22ஆம் திகதி வரை குழாம்களில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற நிலையில், இப்பத்தியானது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குழாம்களில் தவறவிடப்பட்ட வீரர்களை நோக்குகிறது.

மாலி: பயங்கரவாதத்துக்கு எதிரான முடிவுறாத யுத்தம்

(ஜனகன் முத்துக்குமார்)

கடந்த ஏப்ரல் 10ம் திகதி பிரான்ஸ் மற்றும் மாலி அரசாங்கம் இணைந்து நாடாத்திய பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட போதிலும், மாலி அரசாங்கம் எதிர்கொள்ளும் பயங்கரவாதம் இலகுவில் தோற்கடிக்க கூடிய ஒன்றல்ல என்பதே வரலாற்று ரீதியில் நாம் கற்கும் பாடமாகும். பிரதானமாக நாட்டின் பயங்கரவாத குழுக்கள் மற்றும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளை களைதல் மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான உதவிகளை பெறுதல் தொடர்பில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மாலி முன்வைக்கும் அதேவேளை உள்நாட்டு பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்ச்சியாக பிராந்தியத்துக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியவண்ணமே உள்ளன.