குறிப்பால் உணர்த்தல்

(மொஹமட் பாதுஷா)
அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், இம்முறை வசந்த காலத்தில், நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்றோரின் தொகை மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. குறிப்பாக, முஸ்லிம்கள் வழமைபோல, நுவரெலியாவுக்குச் செல்லவில்லை என்பது வெள்ளிடைமலை. நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள், கூட்டிணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கை, வெற்றியளித்துள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகின்ற சமகாலத்தில், “இது ஒரு வேண்டத்தகாத நிலைப்பாடு” என்றும் சிலர், அபிப்பிராயம் வெளியிட்டு வருகின்றனர். அதாவது, நியூட்டனின் மூன்றாம் விதி வேலை செய்யத் தொடங்கி இருக்கின்றது.

(“குறிப்பால் உணர்த்தல்” தொடர்ந்து வாசிக்க…)

புலம்பெயர் தேசத்து பழைய மாணவர் சங்கங்கள்

கடந்த ஐந்தாறு வருடங்களுக்குள் புலம்பெயர்ந்த மண்ணில் மிகப்பிரபலமாக வளர்ச்சியடைந்திருக்கும் துறை, ஊரிலுள்ள பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்கள். அந்த பாடசாலைகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் திடீரென்று தங்கள் பாடசாலைகளின் மீது காதல் கொண்டு பூமியை பிளந்துகொண்டு எழுந்திருக்கும் அந்த காட்சி புல்லரிக்கவைப்பவை. சொல்லப்போனால், இந்த பழைய மாணவர் சங்கங்கள் அரசியல் கட்சிகளைவிட பலம்வாய்ந்த தரப்புக்களாக – ஆளணியும் – பணபலமும் பொருந்திய அமைப்புக்களாக – கடந்த சில வருடங்களில் வளர்ச்சியடைந்திருக்கின்றன. ஊரில் சில விடயங்களை செய்வதற்கு இந்த பழைய மாணவர் சங்கங்களை அணுகினால்தான் அது நடக்கும் என்கின்ற வரையிலான கட்டப்பஞ்சாயத்து ரேஞ்சுக்குக்கூட ஒரு சில அமைப்புக்கள் எழுச்சியடைந்திருப்பது வேறுகதை.

(“புலம்பெயர் தேசத்து பழைய மாணவர் சங்கங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்குக் கிழக்கு ஒரு பிறிமியர் லீக் சமுதாயமாக மாறுவது போருக்கு பிந்திய வரலாற்றில் மைல் கல்

என்.ஈ.பி.எல் என்று அழைக்கப்படும் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த பிறிமியர் லீக் உதைபந்தாட்டம் இலங்கையில் ஆரம்பிக்கிறது என்பது உலகம் முழதும் பரந்து வாழும் தமிழர்களுக்கும், உதைபந்தாட்ட ரசிகர்களுக்கும் இனிப்பான செய்தியாகும். போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதில் இருந்து மீண்டெழ நடத்தும் வாழ்க்கைப் போராட்டத்தின் இன்னொரு மைற்கல் இதுவாகும்.

(“வடக்குக் கிழக்கு ஒரு பிறிமியர் லீக் சமுதாயமாக மாறுவது போருக்கு பிந்திய வரலாற்றில் மைல் கல்” தொடர்ந்து வாசிக்க…)

நீதிபதி லோயா மரணம்:  லோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை

ஷொராபுதீன் ஷேக், அவரது உதவியாளர் துள்சிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்டரில் கொல்லப்படுகின்றனர். (2005 நவம்பர் 25). ஷொராபுதீனின் மனைவி கவ்சர் பீவியின் உடல் பின்னர் கண்டெடுக்கப் படுகிறது. ஷொராபுதீன் கொல்லப்பட்ட நான்கைந்து நாட்களுக்குப் பின் அவர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார் எனப் பின்னர் செய்திகள் வருகின்றன. இது போலி என்கவுன்டர் எனப் பின்னர் அறியவந்தபோது அதற்குக் காரணமாக இருந்தவர் அமித்ஷா எனக் குற்றச்சாட்டு எழுகிறது. அது குஜராத்தில் மோடி ஆட்சியில் பல போலி என்கவுன்டர் கொலைகள் நடந்து கொண்டிருந்த காலம். அந்தப் போலி என்கவுன்டர்களைச் செய்த IPS அதிகாரிகள் (வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் etc) பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அப்படியான வழக்குகளில் ஒன்றுதான் மோடியில் வலது கரமான அமித்ஷா மீதான இந்தக் கொலை வழக்கும்.

(“நீதிபதி லோயா மரணம்:  லோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை” தொடர்ந்து வாசிக்க…)

சிறுமி ஆசிபா குறித்துகள் பற்றி ஜானகி

Dharani Akil அவர்களின் பதிவிற்கு பதிலளிக்க முயன்றேன். நீண்டதானாலோ, வேறு காரணத்தினாலோ பதிவேற்ற முடியாததால் இங்கு பதிவு செய்கிறேன்.

நியாயமான கருத்துக்கள் அடியுண்டு போய்விடாமல் இருக்கவும், பிழையான விளக்கங்களைத் தவிர்ப்பதற்கும், Dharani உங்கள் பதிவிற்கு சில மாற்றுக் கருத்துக்களை பகிர வேண்டிய அவசியத்தை உணர்கிறேன்.

(“சிறுமி ஆசிபா குறித்துகள் பற்றி ஜானகி” தொடர்ந்து வாசிக்க…)

தவளை

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.

தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.

வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.

(“தவளை” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்றில் ஒரு பதிவு. ஈரோஸ் இன் துரோகம்

(Segar Chandramohan)

1986 ஆண்டு பகுதியில் யாழில் இருந்த பல முற்போக்கு அமைப்புக்கள் மாதமொருமுறை அல்லது இருமுறை ஒன்றுகூடல்கள் நடத்தின. இதிலே CP , LSSP , கிராமிய தொழிலாளர் சங்கம் (EPRLF ), கிராமிய உழைப்பாளர் சங்கம், சீவல் தொழிலாளர் நலன்புரி ஒன்றியம் (EPRLF ) , ஈழவர் முன்னணி ( ஈரோஸ்), தொழிழ்ச்சங்கங்கள் உட்பட பல அமைப்புகள் அடங்கும். இதை நான் சீவல் தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதியாக கலந்து கொள்வேன். விஜிதரனை கடத்திய நேரத்தில், இதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க நாம் முடிவு செய்தொம்.
இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான இறுதி கூட்டம் யாழ் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் நடைபெற்றது. இதற்கு, விஜயானந்தன் (CP ), அண்ணாமலை (LSSP ) , கி பி ( கி .தொ. ச ), பரா ( ஈரோஸ்), கி. உ. ச பிரதிநிதி, மற்றும் பல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், நானும், சீவல் தொழிலார அமைப்பின் பிரதிநியாக கலந்து கொண்டேன். கூட்டம் ஆரமித்து நேரம், கிட்டு மோட்டார் சைக்கிளில் வந்து, பாராவை வெளியில் அழைத்து பேசிவிட்டு சென்றார். மீண்டும் உள்ளே வந்த பரா, தவிர்க்க முடியாத காரணங்களினால் தாம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று எம்மிடம் மன்னிப்பு கேட்டு விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார். கூட்டத்தில் ஒரு சில நேரம் மௌனமாக நாம் வியப்பில் இருந்தோம். விஜிதரன் கடத்தலுக்கெதிரான ஊர்வலம் திட்டமிட்டபடியே நடைப்பெற்றது. யாழ் கச்சேரியில் ஊர்வலம் நிறைவு செய்யப்பட்டது.

கூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அணியை இந்தியா அனுமதிக்குமா?

(கே. சஞ்சயன்)

முக்கியமான தருணத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், புதியதோர் அரசியல் கட்சியின் ஊடாக அல்லது புதியதோர் அரசியல் கூட்டணியின் ஊடாக, போட்டியிடுவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தும், கேள்வி-பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டே, அவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இரண்டு வார‍ங்கள் இந்தியாவில் தங்கியிருந்து, ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வதாகக் கூறியிருந்தாலும், அதைப் பலரும் நம்பத் தயாராக இருக்கவில்லை என்பதே உண்மை.

(“கூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அணியை இந்தியா அனுமதிக்குமா?” தொடர்ந்து வாசிக்க…)

சாவகச்சேரி பிரதேசசபையின்

சாவகச்சேரி பிரதேசசபையின் கன்னியமர்வில் தமிழர்சமூகஜனநாயகக்கட்சியின்( SDPT) உறுப்பினர் வை.விக்னேஸ்வரன் ஆகிய என்னால் (கிருபா)முன்மொழியப்பட்டவைகளில் இதுவும் ஒன்று………….. (நன்றி:- உதயன்18.04.2018)

தமிழ் நாடு இந்துவத்துவா ஆதிக்கத்திற்குள் உள்ளாகுமா….?

(சாகரன்)
தமிழ் நாட்டில் அண்மைக்காலமாக நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் அதீத தலையீட்டில் ஒரு பொம்மை அரசு ஆட்சிசெய்கின்றதுல் என்பதை கட்டியம் காட்டி நிற்கின்றன.
மரணம் அடைந்த ஜெயலலிதாவின் மத்திய அரசுக்கு அடி பணியாத தன்னாட்சியைத் தொடர்ந்து இதற்கு பாடம் புகட்டல் என்பதில் இருந்து ஆரம்பமான இந்த ஆட்டம் அவரின் மர்ம மரணத்துடன் நின்று விடவில்லை. இந்த மர்ம மரணத்தின் முடிச்சுக்களும் சசிகலா போன்றவர்களின் கைதுகளும்.. தினகரனின் தனிவழியும்… பிரிந்து நின்று போர் கொடி தூக்கி தற்போது ஓபிஎஸ் ஈபிஎஸ் என்று இரட்டைக் குழல் வெற்றுத் துப்பாக்கி போல் பாஜகவின் விருப்ப அரசியலும் இதனை நிறுவியே நிற்கின்றன.

காவிரி நிதிப பங்கீடுபற்றிய உச்ச நீதி மன்றத் தீர்பை மதியாது காலக் கெடுவான 60 நாள்கள் வரை காத்திருந்து இறுதியில் நீதி மன்றத்திடமே மீண்டும் விளக்கம் கேட்டிருக்கின்றோம் என்ற மத்திய பாஜக அரசின் செயற்பாடும்; இதற்கு எதிர்பு தெரிவிப்பது போன்ற பாராளுமன்றத்தை முடக்கி நம்பிக்கையில்லா பிரேரணை தடை போட்ட ஜெயலலலிதா இல்லாத ஆனால் வரிக்கு வரி அம்மா ஆட்சி என்று ஆதி இருந்து அந்த தமிழ் நாடு ஆட்சி உறுப்பினர்களின் புராணம் பாடும் செயற்பாடுகள் அதிமுக தமது சுயத்தின இழந்து எவ்வளவோ காலங்கள் ஆகிவிட்டன என்பதையே கோடிட்டு காட்டுகின்றன.

தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் எப்பாடு பட்டாவது தனது ஆட்சி அதிகாரக் காலை நேரடியாகவோ அது முடியாவிட்டால் மறைமுகமாகவோ பதிக்கும் செயற்பாட்டின் ஒரு அங்கமாகவே இது பார்க்கப்பட வேண்டும். எச் ராஜாகளின் பெரியார் சலையை உடைப்போம் என்ற ஏதெச்சாகார பேச்சுகளும் ரத யதாத்திரை செயற்பாடுகளும் இதற்கு வழி வகுத்தும் நிற்கின்றன.
பெரியாரின் பகுத்திறவுக் கோட்பாடும் இதன் செயற்பாடுகளும் சுரண்டலில் ஈடுபட்ட ‘உயர்தட்டு’ சமூக அடுக்காக பார்பனியம் பார்க்கப்பட்டதும் இதன் தொடர்சியாக பார்பனியத்திற்கு எதிரான செயற்பாடும் மக்கள் எழுச்சியும் திராவிடர் கழகங்களாக பல கட்சியாக பிரிந்து நின்றாலும் இன்றும் சாமி கும்பிட்டாலும் பெரியாரிச சிந்தனையின் வெளிப்பாடுகளை தமிழ் நாட்டின் பல்வேறு அடிமட்ட மக்கள் பிரிவினரிடையே ஆழமாக இருப்பதுதான் ஆர்எஸ்எஸ் போன்ற இந்துவத்துவா அமைப்புகள் தமது வேலைகளை தமிழ் நாட்டில் இன்றும் காட்ட முடியாத சூழ்நிலையில் நிலவ காரணமாக இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

காவிகளின் சேட்டைகளிலும் ஏனைய வகுப்புவாத சாதி வெறிகளில் விழிப்படைந்த தமிழகம் ஏனைய இந்திய வடமாநிலங்கள் போலன்றி இவற்றில் ‘தெளிவாகவே’ இருக்கின்றது. இது தமிழகத்தின் பலமாக இருப்பது வரவேற்கத்தக்கதாக இருக்கின்றது. மறு புறத்து திராவிட பாரம்பரிய வேர்கள் தம்மை மக்கள் உட்பட யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றும் தமக்கான வாக்கு வங்கிகளை இதுவரை அசைக்க முடியவில்லை என்பதனினால் ஏற்பட்ட மமதை தத்தமது ஆட்சிக்காலத்தில் ஊழல் என்று தாராளமாக செய்தே வந்திருக்கின்றன. இன்னும் விசாரிகப்பட வேண்டிய ஊழல் பட்டியல் இருந்து கொண்டும்தான் இருக்கின்றன.

இந்த ஊழல் பட்டியலை தனது கைகளில் வைத்த வண்ணமே மத்திய பாஜக தமிழ் நாட்டின் ஆளும் கட்சி எதிர் கட்சி இரண்டையும் ஒரு எல்லை மீறி தனக்கு எதிராக செயற்படவிடாமல் கடிவாளம் போட்டிருக்கின்றன. இதுவே ஜெயலலிதா போன் ஆளுமை திகிலென மறைந்த பின்பும் அதிமுக பல கூறுகளாக பிரிந்த பின்பும் தன்வசம் 90 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சட்டசபையில் வைத்திருந்தும் ஸ்டாலின் போன்றவர்களால் கூட தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

தேசியக் கட்சியான காங்கிரஸ் மூப்பனார் காலத்திற்கு பின்னராக தமிழக ஆதரவு வீழ்ச்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தளம்பல்களும் இதற்கு ஏதுவாக அமைந்துவிட்டன. கருணாநிதி என்ற ஆளுமையின் முதுமையும் இதற்கு முந்திய குடும்ப உறுப்பினர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்ப முடியாத கழுத்து இறுக்கல்களும் இவரகளுடன் இணைந்து பயணித்து தமிழ் நாட்டு அரசியலில் வெளிக்கரமான பாஜக வை முழமையாக அம்பலப்படுத்தி வெற்றி கொள்ள முடியவில்லை. ஆனாலும் இந்திய நாடு முழுவதும் தனது எதேச்சாகார இந்துவத்துவா கொள்கை மூலம் ஆட்சியை நகர்த்த முற்படும் காவிகளை கட்டிற்குள் கொண்டுவர எதிரணிகளை தற்காலிகமாகவேனும் இணைய வைத்திருக்கின்றன. இவற்றையும் மீறி திரிபுரா உட்பட கோவா வரை ஆட்சியை கைப்பற்றி இன்னும் சில மாநிலங்கள்தான் பாக்கி என்று மமதையுடன் பயணப்படும் பாஜக ஆட்சியின் கரங்களை தமிழ் நாட்டிலிருந்து தவிர்க்க பிரயதனப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்திய நாட்டின் மதச்சார்பற்ற ஆட்சியை நிறுவுதல் என்பதற்காக காங்கிரஸ் இடதுசாரிகள் ஏனைய பிராந்திய கட்சிகள் தமக்கிடையே ஒருமைப்பாட்டுடைய விடயங்களின் அடிப்படையில் இணைந்து செயற்படுதல் பிராந்திய நலன்களில் மட்டும் தமது அரசியை நிறுத்திக்கொள்ளாது செயற்படும் பரந்துபட்ட போக்குமே தமிழ் நாட்டில் காவிகளின் வலிந்த ஆதிகத்தை நிறுத்தி பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை தொடர்ந்தும் பேணிப்பாதுகாக்க உதவும்.

(Apr 19, 2018)