Is The Chief Minister Of The NPC Ethically & Morally Fit To Govern?

(By Muttukrishna Sarvananthan)

The Chief Minister of the Northern Province Mr. Canagasabapathy Viswalingam Wigneswaran made a “private visit” to India in November 2014. It was reported that he was invited to deliver a memorial lecture in Chennai to commemorate a civil liberties activist Mr. K.G. Kannapiran, who is a person from the legal fraternity. Later Mr. Wigneswaran also attended a World Congress of Buddhism and Hinduism in New Delhi which was graced by Dalai Lama, among others.

(“Is The Chief Minister Of The NPC Ethically & Morally Fit To Govern?” தொடர்ந்து வாசிக்க…)

ஈழத்தமிழர்களின் எதிர்கால இலட்சியங்கள் என்று பட்டியல்படுத்தப்பட்ட தொழில்களில் இன்று முதலிடத்திலிருப்பது அரசியல்வாதியாவதுதான்…..

ஈழத்தமிழர்களின் எதிர்கால இலட்சியங்கள் என்று பட்டியல்படுத்தப்பட்ட தொழில்களில் இன்று முதலிடத்திலிருப்பது அரசியல்வாதியாவதுதான். நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் அதற்கு மிகப்பெரிய சாட்சி. அதற்கு அடுத்த இடத்திலிருப்பது கவிஞராகுவது. அவசரப்பட்டு மேசையை குத்திக்கொண்டு எழும்பிவிடாதீர்கள். உட்காருங்கள். எனக்கும் அதே சந்தேகம்தான். கடந்த உள்ளுராட்சி தேர்தல் வரைக்கும் நானும்கூட கவித்தொழில்தான் முதலிடத்திலிருந்தது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், வேட்பாளர்கள் அனைவரும் இணைந்து புலவர்களை வென்றுவிட்டார்கள் என்பது தற்போதைய நிலைவரம்.

(“ஈழத்தமிழர்களின் எதிர்கால இலட்சியங்கள் என்று பட்டியல்படுத்தப்பட்ட தொழில்களில் இன்று முதலிடத்திலிருப்பது அரசியல்வாதியாவதுதான்…..” தொடர்ந்து வாசிக்க…)

2002 பேச்சுவார்த்தைக்குப் பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது.

2002 பேச்சுவார்த்தைக்குப் பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது.

ஆனையிறவின் மகத்தான வெற்றிக்குப் பின்னும் புலிகள் யுத்தத்தை தொடரவில்லை. காரணம் பற்றாக்குறை.

யாழ்ப்பாணத்தார் வசதியானவர்கள் என்பதால் புலிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு ஐரோப்பா , கனடா என தப்ப, புலிகளின் ஆள்திரட்டல் குறி வறுமையான கிழக்குப் பக்கம் பதிந்தது.

இந்நிலையில் நார்வே வேறு பேசிக்கொண்டிருந்தது, இம்முறை புலிகள் முடிவிற்கு வந்தே தீரவேண்டும் என கட்டளை இட்டன மேற்குலக நாடுகள்.

(“2002 பேச்சுவார்த்தைக்குப் பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது.” தொடர்ந்து வாசிக்க…)

“வெருகல் “

சகோதரர்களே ஒருவரை ஒருவர் கொன்று குதறி இரத்தத்தை குடித்து மகிழ்ந்த துயரம். வரலாற்றில் நினைவில் கொள்ளப்பட வேண்டிய கொலைக்களம். பிரபா-கருணா என இருவருமே வீழ்ச்சியை சந்தித்த நாள் April 10, 2004. @ On April 10th 2004, 175 Karuna cadres, including female cadres, were massacred in Verukal in an attack by the LTTE to prevent the separation. பி.கு: படம்-வடபகுதி தமிழர்களால் பெரிதாக கண்டுகொள்ளப்படாத வாகரையில் அமைந்துள்ள வெருகல் சம்பவத்தில் கொல்லப்பட்ட கிழக்கு புலிகளின் நினைவு தூபியும். பலியான தமது உரவுகளுக்காக இந்த நாளில் அஞ்சலி செலுத்துபவர்களும்.

கிளிநொச்சி மாவட்டம் அது பின்தங்கியே இருக்கின்றது

கிளிநொச்சி மாவட்டத்தின் அரசியல் தலைமைத்துவம் பிழைத்ததால் மாவட்டத்தின் கல்வி மிகப் பின்தங்கியிருக்கிறது.

கல்வி நிர்வாகத்தில்மோசமான முறையிலான அரசியல் தலையீடுகளைச் செய்தது –

கல்விக்கான பௌதீக வளத் தேவைகளை உரிய முறையில், உரிய காலத்தில் நிறைவேற்றத் தவறியது –

ஆசிரிய, அதிபர் இடமாற்றங்களில் அரசியல் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செய்தது –

போன்றவை இதற்குக் காரணங்கள்.

(“கிளிநொச்சி மாவட்டம் அது பின்தங்கியே இருக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவில் இடம்பெறுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த கோரி, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவுக்கு இன்று (10) விஜயம் செய்த வடமாகாண சபையின் உறுப்பினர்கள், அங்கு இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்கள், சட்டவிரோத விகாரை அமைக்கும் பணி, அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன், ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும் மாவட்டச் செயலரிடம் கையளித்துள்ளனர்.

‘இதய பூமி’; இன்று ‘இருள் நிறைந்த பூமி’

(காரை துர்க்கா)
சங்ககால குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நிலத்துக்கே உரித்தான சகல பண்புகளையும் தன்னகத்தே கொண்ட பெருமைகளையுடைய மாவட்டமாக, முல்லைத்தீவு மாவட்டம் விளங்குகின்றது. வடக்கு மாகாணத்துக்குட்பட்ட வவுனியா மாவட்டத்தின் பெரும் பகுதியையும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் சிறு பகுதிகளையும் கொண்டு, 1978ஆம் ஆண்டடில் உருவாக்கப்பட்டதே, இந்த முல்லைத்தீவு மாவட்டமாகும்.

(“‘இதய பூமி’; இன்று ‘இருள் நிறைந்த பூமி’” தொடர்ந்து வாசிக்க…)

வாகரை பிரதேச சபையின் தலைவராகத் தெரிவானவர் சற்று நேரத்தில் கைது

மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய சற்று நேரத்தில், அதன் தலைவரும் மற்றொரு உறுப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனரென, வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவமொன்று தொடர்பாகவே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வாகரைப் பிரதேச சபையின் தலைவர் சிவஞானம் கோணலிங்கமும் உறுப்பினரான தெய்வேந்திரன் சத்தியநாதன் என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

(“வாகரை பிரதேச சபையின் தலைவராகத் தெரிவானவர் சற்று நேரத்தில் கைது” தொடர்ந்து வாசிக்க…)

மொழிப் பிரச்சினையால் சபை அமர்வு ஒத்திவைப்பு

காலி மாநகர சபையில் ஏற்பட்ட மொழிப்பிரச்சினையால், சபையின் முதலாவது அமர்வு இன்று 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர மேயர் பிரியந்த சஹபந்து தலைமையில் இன்று சபை கூடிய போது, சபை நடவடிக்கைகள் சிங்கள மொழியில் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எம்.எப்.ரிஹான, சிங்கள மொழியை புரிந்தகொள்வதில் பிரச்சினை இருப்பதாகவும், தனக்கு மொழப் பெயர்ப்பாளர் ஒருவர் தேவை எனவும் வலியுறுத்திய நிலையில் சபையில் குழப்பம் ஏற்பட்டது.

(“மொழிப் பிரச்சினையால் சபை அமர்வு ஒத்திவைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு தீர்ப்பும் ஒரு போராட்டமும்

(எம். காசிநாதன்)

இந்தியாவில் மீண்டுமொரு சமூக நீதிப் புரட்சி போல், வட மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும், ‘தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு எதிரான வன்முறைத் தடுப்புச் சட்டம் 1989’ பற்றி, நாட்டின் தலைமை நீதிமன்றமான உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புத்தான் இந்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

(“ஒரு தீர்ப்பும் ஒரு போராட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)