பற்குணம் ஏ.ஜி.எ (பகுதி47 )

அரச அதிபர் திஸ்ஸ தேவேந்திரா சமூக,பொருளாதார,அரசியல், பலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.இவர் 1977 இனக் கலவரம் தொடர்பான சன்சோனி கமிஷன் விசாரணைக் குழுவின் செயலாளராகவும் பணி புரிந்தவர். இவர் ஒரு நாள் எதேச்சையாக ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் திருகோணமலை வந்தார்.அந்த வகுப்பில் இரண்டு பொலிஸ்காரர்கள் பயணிகளுடன் தகராறு பண்ணிக் கொண்டிருந்தனர்.அதைக் கண்ட கோபமடைந்த திஸ்ஸ தேவேந்திரா கண்டித்தார்.அவரை யாரென்று அறியாத அந்த பொலிஸ்காரர்கள் இவரை அடித்துவிட்டனர்.இந்த சம்பவம் கபரணைக்கு முன்பாக நடந்தது.

(“பற்குணம் ஏ.ஜி.எ (பகுதி47 )” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனின் தத்துவ ஆசிரியர் பாலசிங்கத்தின் மூன்றாம் தர பேச்சு

ஆனால் இதுவரை சீரியஸ் ஆக வாசித்தோருக்கு ஒரு நகைச்சுவையுடன் ” தத்துவ வித்தகர்” (நன்றி : மூலம் ஹக்கீம் ) அன்டன் பாலசிங்கம் இலண்டனில் நடந்த மாவீரர் தின நிகழ்சியொன்றிலே கரகோசத்துக்கு மத்தியில் அவருக்கும் பிரபாகரனுக்கும் நடந்த தொலைபேசி உரையாடல் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டார்.

(“பிரபாகரனின் தத்துவ ஆசிரியர் பாலசிங்கத்தின் மூன்றாம் தர பேச்சு” தொடர்ந்து வாசிக்க…)

கடாபி முஸ்லிம் உலகின் செல்வாக்கு மிகு தலைவராக விளங்க வேண்டுமென விரும்பினார்

யாழ் மைய வாதிகளின் தமிழ் இனவாதிகளின் -தமிழ் தேசிய வாதிகளின்- எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கை இஸ்லாமிய சோசலிஸ முன்னணியின் யாழ் அங்குரார்ப்பன கூட்டத்தை நடத்த துணை புரிந்தவர்கள் சிறுபான்மை தமிழர்களும் இடதுசாரிகளுமாவார்கள். அவர்களில் பலர் கடாபியின் இலங்கை வருகையை மகிழ்ச்சியாக வரவேற்றனர். அன்று நிலவிய சிறுபாண்மை தமிழர்கள் குறுகிய தமிழ் இனவாதத்துக்கும தேசிய வாதத்துக்கும் அப்பால் மிக துணிகரமாக தேசிய சர்வதேச அரசியல் கருத்தாடல்களை ஊக்குவித்தவர்கள் அதன் மூலம் ஒரு முற்போக்கு அரசியல் களம் சமைத்தவர்கள். அவர்களில் எம்.சி சுப்பிரமணியம் பதியுதீனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவராவார். அது பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்.

(“கடாபி முஸ்லிம் உலகின் செல்வாக்கு மிகு தலைவராக விளங்க வேண்டுமென விரும்பினார்” தொடர்ந்து வாசிக்க…)

இதுவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பபு மற்றும் தமிழரசு கட்சியின் போராட்டத்தின் இன்னொரு வடிவமே !

 

துரையப்பா விளையாட்டரங்குத் திறப்புவிழாவிற்கு வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால TNA-MP, சிறிசேனாவுடன் சேர்ந்து உதயன் ஊடக நிறுவன உரிமையாளர் சரவணபவனின் மகளின் பிறந்ததின நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் கொள்கை விளக்கமளிக்க எமது தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் தவறி வருவதால் தமிழ் தேசிய தலைமையின் ஆதரவுத் தளம் தளம்பத் தொடங்கியுள்ளது. இந் நிலையில், தமிழ் மக்களின் ஒற்றுமையைக் கட்டிக்காக்கவும், ஒரே குடையின்கீழ் அவர்களைத் தொடர்ந்து அணிதிரட்டி வைத்திருக்கவும், அனைத்துக்கும் மேலாக, இச் சம்பவம் தொடர்பில் சர்வதேசத்திற்கு விளக்கமளிக்கவேண்டிய காலத்தின் தேவைகருதியும், இச்செய்தியை வெளியிடுகிறோம். தயவுசெய்து உங்களுடைய பத்திரிகையில் முக்கியத்துவம்கொடுத்துப் பிரசுரித்து எமது கட்சியின் இருப்பைக் காப்பாற்ற உதவவும்.

(“இதுவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பபு மற்றும் தமிழரசு கட்சியின் போராட்டத்தின் இன்னொரு வடிவமே !” தொடர்ந்து வாசிக்க…)

சுவிசில் உணர்வுபூர்வமாக தியாகிகள்தினம் நினைவுகூரப்பட்டது.

 

சுவிசில்  Aarau   மாநிலத்திலுள்ள Frick என்னுமிடத்தில்
19.06.2016 அன்று மாலை தியாகிகள் தினம் நினைவுகூரப்பட்டது. தோழர் நிமல்ராஜ் இன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது. போராட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் கட்சியுடன் இணைந்து பணியாற்றிய தோழர்கள் மற்றும் EPDP கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். தியாகிகளுக்கான அஞ்சலியாக யாழ்மாவட்டத்தில் மக்கள் விடுதலைப்படையில் முக்கியபங்காற்றி மரணமடைந்த தோழர் வோல்டன் குமார் அவர்களின் சகோதரர் மில்ரனும் அவரது துனைவியாரும் குத்துவிளக்கேற்றி அஞ்சலிதெரிவித்தனர். அவர்களை தொடர்ந்து தோழர் நிவாஸ் மற்றும் லலிதா ஆகியோர்குத்து விளக்கேற்றினர்.

(“சுவிசில் உணர்வுபூர்வமாக தியாகிகள்தினம் நினைவுகூரப்பட்டது.” தொடர்ந்து வாசிக்க…)

மனித நேயத்தை வென்ற மாமனிதரின் 26 ஆவது ஆண்டு சிரார்த்த தினம்!

 

மனித நேயத்தை வென்ற மாமனிதர் தோழர் பத்மநாபாவின் 26ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்றையதினம்(19) அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்க சமாசத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தோழர் பத்மநாபா EPRLF தொழில்சங்க அணியின் தலைவர் இராசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு அதிதிகளின் மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் ஈழமக்கள் ஜனநாயககட்சி சார்பாக கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் தோழர் பத்மநாபாவின் நினைவுகளை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.

(“மனித நேயத்தை வென்ற மாமனிதரின் 26 ஆவது ஆண்டு சிரார்த்த தினம்!” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என கூறியவர் ஜெயலலிதா’

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று கூறியவர் ஜெயலலிதா என்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அதிமுக உறுப்பினர் செம்மலை தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அப்போதுஇ திமுக தலைவர் கருணாநிதி என்று பலமுறை குறிப்பிட்டார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

(“பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என கூறியவர் ஜெயலலிதா’” தொடர்ந்து வாசிக்க…)

கும்பகோணத்தில் தோழர் ஸ்ராலின் அண்ணாவின் படத்திறப்பு நிகழ்வு

இன்று மறைந்த ஈழவிடுதலைப் போராட்டத்தின் தமிழ்நாட்டு மூலவர் தோழர் ஸ்ரானின் அண்ணாவின் படத்திறப்பு நிகழ்வு அவரின் பிறந்த ஊரான குடந்தையில் நடைபெறுகின்றது. இதில் சிறப்பு வருகையாளராக பத்மநாபா மக்கள் முன்னணியின் தோழர் சுகு கலந்து கொள்கின்றார்

சென்னையில் பத்மநாபா மக்கள் முன்னணியினரின் தியாகிகள் தினம்

பத்மநாபா மக்கள் முன்னணியும் ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து நடாத்திருந்த தியாகிகள் தினம் சென்னையில் நடைபெற்றது. தோழர் சங்கரின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  UCPI, CPI தோழர்களும் பத்மநாபா மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பத்மநாபா மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் சுகு சிறப்பு செயற்பாட்டளராக கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏராளமான தோழர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர் சென்னையை மையயப்படுத்தி தனது அரசியல் வேலைகளை முன்னெடுத்து வரும் பத்மநாபா மக்களின் முன்னணியின் தோழர் ஸ்ரனிஸ்  இன் ஒருங்கிணைப்புடன் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தோழர் பாஸ்கர் தோழர் சுந்தரமூர்த்தி போன்ற ஆரம்ப ஈபிஆர்எல்எவ் இன் செயற்பாடாளர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில்தமிழ் நாட்டில் அகதிகளாக இருக்கும் பொது மக்களும் கலந்து கொண்டனர். தோழர் சுகுவுடன் இணைந்து பலரும் சிறப்பு பேருரை ஆற்றினர்.