புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் ஆதவன் மாஸ்டர் விமான நிலையத்தில் கைது

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் மாஸ்டர் என்ற அய்யாத்துரை மோகன்தாஸ் என்பவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்ல தயாரான நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி வீடொன்றில் தற்கொலை அங்கி உட்பட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இவர் எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய அணியை இவரே வழி நடத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர்.

(“புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் ஆதவன் மாஸ்டர் விமான நிலையத்தில் கைது” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 38 )

1971 ஏப்ரல் கிளர்ச்சி தோல்விகண்டது. நாடு வழமைக்குத் திரும்பியது.இதன் பின் குச்சவெளியில் பொலிஸ் நிலையம் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இதன் பொறுப்புகள் பற்குணத்திடம் டி.ஆர் ஓ என்றவகையில் ஒப்படைக்கப்பட்டது .இதனை திறந்துவைக்க அன்றைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் திரு லஷ்மன் ஜெயக்கொடி வருகை தந்தார்.அன்று பாதுகாப்பு அமைச்சு பிரதமர் சிறிமா கையில் இருந்தது.இவரோடு கூடவே மூதூர் மஜீத் அவர்களும் வருகை தந்தார்.

(“பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 38 )” தொடர்ந்து வாசிக்க…)

‘புலிக்கொடி’யை முன்னிறுத்திய சண்டைகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், ‘புலிக்கொடி’ ஏற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தும் அந்தக் கோரிக்கையைப் புறந்தள்ளியும், பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்கிடையில் தொடர்ச்சியாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அது, கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஏழாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், சண்டை சச்சரவுக் காட்சிகளை அரங்கேற்றும் அளவுக்கு சென்றிருக்கின்றது.

(“‘புலிக்கொடி’யை முன்னிறுத்திய சண்டைகள்” தொடர்ந்து வாசிக்க…)

மியான்மார்: ஜனநாயக சர்வாதிகாரம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஜனநாயகம், ஒரு வசதியான போர்வை. எதையும் எவ்வாறும் அப்போர்வையால் மூடி மறைக்க முடியும் என்பதோடு, மறைத்ததை அங்கிகரிக்கும் அதிகாரத்தையும் பெறலாம். இன்று, ஜனநாயகம் ஜனநாயகமாகச் செயற்படுவதில்லை என யாவரும் அறிவர். ஆனால், ஜனநாயகத்தின் பெயரால் நடப்பவை அச்சந் தருகின்றன. ஒரு படையெடுப்பையோ, ஆக்கிரமிப்பையோ, தாக்குதலையோ, அடக்குமுறையையோ, வேறெதையுமோ, ஜனநாயகத்தின் பெயரால் நடத்தக்கூடிய சூழலில் நாம் வாழ்கின்றோம். ஜனநாயகம், அதன் பெயரால் அனைத்தையும் செய்யக்கூடியவாறு ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மட்டும் உறுதியாகக் கூற இயலும்.

(“மியான்மார்: ஜனநாயக சர்வாதிகாரம்” தொடர்ந்து வாசிக்க…)

பேச்சுவார்த்தையை இழுத்தடித்துச் செல்வதே பிரபாகரனின் விருப்பமாக இருந்தது!!!

அரசுக்கும் புலிகளுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டவுடன் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாகின. புலிகளும் அரசும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய தளபதிகளில் ஒருவரும், கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவரும் அனைவராலும் கேணல் கருணா என அழைக்கப்பட்டவருமான விநாயகமூர்த்தி முரளிதரனும் பேச்சுவார்த்தைக் குழுவில் கலந்துகொண்டிருந்தார். கருணா அம்மான் புலிகள் இயக்கத்திலிருந்து ஏன் பிரிந்தார். எதற்காக பிரிந்து சென்றார். இந்தப் பிரிவுக்கு பலரும் உரிமைகோருகிறார்கள். இதன் உண்மை நிலை என்ன என்பதை அவரிடமே கேட்டோம்.

(“பேச்சுவார்த்தையை இழுத்தடித்துச் செல்வதே பிரபாகரனின் விருப்பமாக இருந்தது!!!” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 37 )

பற்குணத்தின் திருமணம் உறுதிசெய்யப்பட்டது .இது எங்கள் பெரிய அண்ணனுக்கு ஏமாற்றமாக இருந்தது.அவர் சீதனம் வாங்கி செய்துவைக்கவே விரும்பினார்.பற்குணம் சீதனத்தை அறவே நிராகரித்தார் . நாங்கள் இவ்வளவு காலமும் மண்குடிசையில் இருந்ததால் வீடு ஒன்றை கட்டும் முயற்சி எடுக்கப்பட்டது.அதே நேரம் பற்குணம் தன் படிப்புக்காக வாங்கப்பட்ட கடன்களை திருமணத்தின் முன்பாக அடைக்க விரும்பினார்.இதில் பெரிய கடன்களாகும் ருபா 2000,2000 ஆக இருவரது கடன்கள் இருந்தன. ஒன்று உறவினர்கள் எங்கள் காணியை அடமானமாகப் பெற்றுத்தந்த பணம்.அவரகளிடம் இதுபற்றிக் கேட்டபோது வட்டியும் முதலுமாக 4800 தரும்படி கூறினார்கள்.இது காணியின் பெறுமதியைவிட கூடியதுதான்.

(“பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 37 )” தொடர்ந்து வாசிக்க…)

பொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன்

உண்மை பேசினால் உயர முடியாது என்று உணர்ந்த பின்பும் பொய்யை விலைபேசி விற்பவருக்குத் தான் பதவியும் அதிகாரமும் வந்து சேரும் என்பதை அறிந்த பின்பும் நேர்மையாக நடப்பதன் மூலம் எந்த மேலான மாற்றத்தையும் பொதுவாழ்வில் கொண்டு சேர்க்க முடியாது என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் அரசியல் உலகத்தில் நீடிப்பது அர்த்தமற்றது என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

(“பொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ(பகுதி 36)

பற்குணம் பதவியேற்றபோது அவருக்கு சாரதியாக அப்புஹாமி என்பவர் இருந்தார்.இவர் பிறப்பால் இஸ்லாமியர். சிங்கள குடும்பம் ஒன்று வளர்த்ததால் பௌத்தரானார்.அவரை சாம்பசிவ ஐயர் விரும்பியதால் கருணதாஸ என்கிற பெரியவர் சாரதியாக வந்தார்.அவர் சில காலங்களில் ஓய்வு பெற விமலசேன என்பவர் வந்தார்.இவர் கொஞ்சம் முரட்டு சுபாவம் உடையவர்.இதனால் எந்த அதிகாரிகளுக்கும் பிடிப்பதில்லை.பலர் இவருக்குப் பயந்தனர்.ஆனால் பற்குணத்துடன் மிகவும் மரியாதையாகவே நடந்தார்.

(“பற்குணம் டி.ஆர்.ஓ(பகுதி 36)” தொடர்ந்து வாசிக்க…)

தலிபான்களின் புதிய தலைவர் நியமனம்

தலிபான் ஆயுதக்குழுவின் தலைவரான முல்லா அக்தர் மன்சூர், அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்டமையை முதன்முறையாக உறுதிப்படுத்ததும் விதமாக, தங்களது புதிய தலைவரைப் பெயரிட்டுள்ளது. பாகிஸ்தானில் வைத்துக் கடந்த வெள்ளிக்கிழமை இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக, கடந்த சனிக்கிழமை மாலை நேரத்தில் செய்தி வெளியாகியிருந்த போதிலும், தலிபான்களாலும் பாகிஸ்தானாலும், இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டங்களில் அக்குழு பங்குபற்றுவதாகச் செய்தி வெளியாகியிருந்தது.

(“தலிபான்களின் புதிய தலைவர் நியமனம்” தொடர்ந்து வாசிக்க…)