இரணைமடு விவசாய சம்மேளனத்தினர் போராட்டம்

இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, இரணைமடு விவசாய சம்மேளனம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இன்றைய தினம் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு தெரிவித்த இரணைமடு விவசாய சம்மேளனத்தால் கவனயீர்ப்புப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.