யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு நோட்டீஸ்

யாழ்ப்பாணம் பலகலைக்கழத்தில் கடந்த இரு வராங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதலுக்கு காரணமாக இருந்தார்கள் என்று கூறப்படும் மாணவர்கள் 7 பேருக்கு, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறித்த மாணவர்கள் 7 பேரையும் எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்த நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்வரன் பிறப்பித்துள்ளார்.