பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேருக்குப் பிணை

களனி பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 8 பேருக்கு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். மாணவியொருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு 75 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மேல்நீதிமன்ற நீதிபதி பிரேமா ஸ்வர்ணாதிபதி, இந்த உத்தரவை, செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.