மஹிந்தவை இணைக்க மைத்திரி இணக்கம்

சு.கவின் உடைவைத் தடுக்க பகிரதப் பிரயத்தனம்

சந்திரிகா தொடர்ந்தும் எதிர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முகம் கொடுக்க சுதந்திரக் கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சுதந்திரக் கட்சியில் உள்ள சிலரும் ஐ. ம சு. மு. கூட்டுக் கட்சியிலுள்ள சிலரும் இணைந்து தனியாக கட்சியமைத்து தேர்தலுக்கு முகம் கொடுக்க முயலும் நிலையில் கட்சி உடைவதை தடுப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறு உடன்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

(“மஹிந்தவை இணைக்க மைத்திரி இணக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

நிலாவரை கிணறு !

 

நிலாவரையை அறியாதவர்கள் நம்மில் யாராவது இருப்பார்களா? பெரும்பாலானவர்கள் அதை நேரில் பார்த்துக்கூட இருப்பார்கள். ஆனால் அதன் சிறப்பையும், வரலாற்று பெருமையையும் எத்தனைபேர் அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது பொக்கிசங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா? நிலாவரையின் வரலாற்றை அறிய தொடர்ந்து படியுங்கள். புத்தூர் – சுன்னாகம் இணைப்பு வீதியும் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் இராசவீதியும் சந்திக்கும் இடத்தில் சிவன் கோவில் ஒன்றும் அதன் அருகில் ஆழக் கிணறொன்றும் உள்ளன. இந்தச் சிவன் கோவில்தான் தட்சிண கைலாய புராணத்தில் சொல்லப் பட்ட நவசைலேஸ்வரம் எனப்பலர் நம்புகின்றனர். அந்தக் கிணறுதான் நிலாவரைக்கிணறு.

ஈழத்தில் சிவ வழிபாட்டின் தொன்மையைப் பறைசாற்றக் கூடிய தலங்கள் பல உள்ளன. போர்த்துக்கேயரது படையெடுப்பின்போது சிவத்தலங்கள் எல்லாம் முற்றாக அழிக்கப்பட்டன. நவசைலேஸ்வரம் என்ற சிவத்தலத்திற்கும் இக்கதி நேர்ந்தது. ஆயினும் தட்சண கைலாய புராணத்தில் குறிப்பிடப்படும் நவசைலேஸ்வரம் புத்தூர் சிறீ சோமாசுகந்தக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள சிவன் கோவில்தான் என அக்கோவில் சார்ந்தவர்கள் குரல் எழுப்புகின்றனர். அக்கோவிலுக்கும் நிலாவரை நீர்நிலையே தீர்த்தக் கேணியாக விளங்கியிருக்கிறது. (பின்னர் புத்தூர் மழவராயர் காலத்தில் ஆலயத்தில் தீர்த்தத் தடாகம் அமைக்கப்பட்டது).

நிலாவரைக் கிணற்றுக்கு பக்கத்தில் உள்ள சிறிய சிவன் கோவிலுக்கு அருகிலும் புராதன நவசைலேஸ்வரம் இருந்தமைக்கான சில எச்சங்கள் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் புராதனச் சிறப்புக்கள் இந்த ஆலயத்திற்கு இருந்தாலும் ஆலயம் பற்றிய போதிய விழிப்புணர்வை இப்பிரதேச மக்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள் எனக் கருத முடியாதுள்ளது. தற்போதும் மடாலயமாகவே விளங்கும் இக்கோவிலில் 1948 இல் தான் சிவலிங்கத் தாபனம் இடம்பெற்றது. எதிர்பாராத விதமாக ஆலயத்தின் உள் கிணற்றில் இருந்து சிவலிங்கம் ஒன்றைப் பெற்றனர். இது பண்டைக்கால நவசைலேஸ்வரத்துக்குரிய சிவலிங்கமென நம்பப்படுகின்றது. போர்த்துக்கேயர் நவசைலேஸ்வரத்தை அழித்தபோது, அங்கிருந்த விக்கிரகங்களை சிலர் பாதுகாப்பாக இந்தக்கிணற்றில் போட்டதாக கர்ணபரம்பரையாக கதைகள் உள்ளன. கிணற்றில் இருந்து பெற்ற சிவலிங்கத்தை அக்காலத்தில் ஆலயப் பூசகராக விளங்கிய வேலுப்பிள்ளை சுப்பையா ஆலயத்தில் நிறுவிப் பூசை வழிபாடுகளை ஆற்றத் தொடங்கினார்.

இன்று அர்ச்சகர் ஒருவரால் நித்திய பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆலயத்தின் நேர்முன்னாகத் தீர்த்தமாடுவதற்கு வசதியாக நிலாவரைக் கிணற்றில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டும் உள்ளன. நிலாவரையின் மேற்குப் புறமாக உள்ளது நவக்கிரிக் கிராமம். நிலவரை என்பதே நிலாவரை ஆகியிருக்கலாம். (வரை – மலை). நவக்கிரி என்பதும் ஒன்பது மலைகள் என்ற பொருளைத் தருகின்றது. நவசைலேஸ்வரம் என்ற பெயரின் பொருளும் அதுவே. (சைலம் – மலை) இப்பகுதி நிலங்களின் கீழ்க் கடுமையான கற்பாறைகள் உள்ளன. இதனால் இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர். இல்லையேல் கீரிமலை என்ற பெயர்க் காரணத்திற்குக் கூறப்படும் விளக்கம் போல என்றோ ஒரு நாள் இப்பகுதியில் குன்றுகள் இருந்திருக்கலாம்.

நிலாவரை தொடர்பாக நிலவும் கர்ண பரம்பரைக் கதையும் சுவையானது. இராமாயணக் கதைத் தலைவனான இராமபிரான் இராவணனுடன் போர் புரிவதற்காக இலங்கை வந்தபோது தனது வானரப் படையினரின் நன்னீர்த் தாகத்தைப் போக்குவதற்காக அம்பை ஊன்றி நீர் எடுத்த இடமே நிலாவரை என்கின்றனர். நிலாவரை மாத்திரமன்றி இன்னும் இதுபோன்ற வற்றாத கிணறுகள் பல குடாநாட்டில் காணப்படுகின்றன. ஊரெழுவில் பொக்கணைக் கிணறு, மானிப்பாயில் இடிகுண்டுக் கிணறு, கரவெட்டியில் அத்துளுக் கிணறு, குரும்பசிட்டியில் பேய்க்கிணறு என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறான கிணறுகள் பற்றிப் புவியியலாளர்கள் சொல்லும் விளக்கமும் சுவாரசியமானது. யாழ்க் குடாநாடு மயோசீன் காலச் சுண்ணக் கற்களாலானது. நீரைக் கசியவிடும் தன்மை இக்கற்களுக்கு உண்டு. மழைநீர் உட்கசிந்து வன்மையான பாறைகளில் தரைக்கீழ் நீராக இருக்கின்றது. மழைநீர் வளியூடாகப் பெய்யும்போது வளியில் உள்ள காபனீரொட்சைட்டுடன் கலக்கின்றது. அதனால் அம்மழைநீர் காபோனிக்கமிலமாக மாறுகின்றது. சுண்ணக் கற்களில் உள்ள கல்சியம் காபனேற்றும் காபோனிக்கமிலமும் சேர்ந்துகொள்வதால் கல் கரையும் வாய்ப்பைப் பெறுகின்றது. இதன் காரணமாகச் சுண்ணக் கற்பாறைகளைக் கரைத்து நீர் உட்செல்கின்றது. பாறைகள் கரையும் போது பெரிய பள்ளங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் பெருமளவு நீர் தேங்கி நிற்க அவையே வற்றாக் கிணறுகள் ஆகின்றன.

தற்போதுள்ள நிலாவரைக் கிணறு 52 அடி நீளம், 37 அடி அகலம் கொண்டு நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது. நிலமட்டத்தில் இருந்து 14 அடி ஆழத்தில் நீர் காணப்படுகின்றது. இந்நீர்நிலை தொடர்பாக பல்வேறு நாட்டு ஆய்வாளர்கள் இங்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். பிரித்தானியா, யேர்மனி, செக் குடியரசு இப்படியான நாடுகளில் இருந்து வந்தவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இதன் ஆழம் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன் ஆழம் 382 அடியைவிட அதிகமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இங்குள்ள நீர் 31 அடிவரையான ஆழத்திற்கு நன்னீராக உள்ளது. அதன்கீழ் 81 அடிவரையும் உவர் தன்மையானதாகவுள்ளது. அதன்கீழ் நிலத்தடி நீரோட்டத்துடன் நீர் தொடர்புபட்டுள்ளது. இந்த நீர்நிலை தற்போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் பராமரிக்கப்படுகின்றது.

இவ்வாறு நீரோட்டத் தொடர்பு இருப்பதால் மழை காலங்களில் நீர் அதிகரிப்பதுமில்லை. கோடைகாலங்களில் நீர்வற்றுவதுமில்லை. என்றும் சம நிலை தளம்பாத அருங்குணத்துடன் நிலாவரைக் கிணறு காணப்படுகின்றது. நிலாவரை நன்னீர் வளத்தை குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்காகவும் விவசாயத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தும் முயற்சிகள் காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டன. கிணற்றின் தெற்குப் புறமாக உள்ள சிறுப்பிட்டி மற்றும் மேற்குப் புறமாக உள்ள அச்செழு, ஈவினைக் கிராம விவசாயிகள் இக்கிணற்றில் இருந்து நன்னீர் வளத்தைப் பெற்று விவசாய முயற்சியில் ஈடுபட்டனர். இப்பிரதேசங்களில் இந்நீரை ஆதாரமாகக் கொண்டு வாழை, நெற் பயிர்ச் செய்கைகள் சிறப்பாக இடம்பெற்றன. 1990 கள் வரை இவ்வாறான நீர்ப்பாசனங்கள் இடம்பெற்றுள்ளன. 1950 களின் பின் டீசல் இயந்திரங்கள் மூலமும் மின்சாரம் மூலமும் நீரை இறைத்தனர். இங்கு நீர் விநியோகம் இடம்பெற்றமைக்கான சுவடுகள் இன்றும் உள்ளன. முறையான நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நிலாவரைக் கிணற்றில் இருந்து இதனை அண்டிய பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனத்தைச் சீராக மேற்கொள்ள முடியும்.

வைரமுத்துவுக்கு ஒரு கவிதை!

பேரரசின் காவியம்!!!

வெடி முழக்கில் நடுங்கிப் பயந்தது
யாழ்க் காற்று.
நின்
தமிழ் முழக்கில்
தைரியம் தந்தாய்.

(“வைரமுத்துவுக்கு ஒரு கவிதை!” தொடர்ந்து வாசிக்க…)

“சின்ன மாமியே” புகழ் கமலநாதன் மாஸ்டர்!

சின்ன மாமியே பாடலுக்குச் சொந்தக் காரரான கமலநாதன் மாஸ்டர் காலமான செய்தியை அறிந்தேன். அன்னாருக்கு மனமார்ந்த அஞ்சலிகள். ஒரு காலத்தில் இன்னாரின் பிள்ளை இவர் என்று சொல்லப்படும் பிள்ளை பிரபலமானதும் அப் பிள்ளையின் தாய் தான் இவர், தந்தை தான் இவர் என்று மாறுவது இன்றைய உலக வழமை. ஊடகத்துறையில் ஒலிபரப்புத்துறையில் என்னுடன் பணியாற்றிய இளம் ஒலிபரப்பாளர் ஒருவரின் குடும்பத்தில் நான் கண்ட சமூக அனுபவம் இது. எமக்குத் தெரிந்த விளையாட்டுத்துறையில் பிரபலமான கமலநாதன் மாஸ்டரை பொப் பாடல் சின்ன மாமியே புகழ் கமலநாதன் மாஸ்டர் என்று சொல்லவேண்டிய நிலைக்கு ஊடக ஜனரஞ்சகம் நம்மை மாற்றியுள்ளது. அவர் பிறந்த வதிரிக் கிராமத்திற்கு அயல் கிராமமான கரவெட்டியில் பிறந்து வளர்ந்து அக் கிராமத்துடனும் இணைந்து வாழ்ந்தவன் என்ற வகையில் அவருடைய பிரிவில் சில குறிப்புக்களை இங்கு பகிர விரும்புகிறேன்.

(““சின்ன மாமியே” புகழ் கமலநாதன் மாஸ்டர்!” தொடர்ந்து வாசிக்க…)

கிராமம்!…..

‘உலகமயமாக்கல்’ – இது இன்று அனைவர் வாயிலும் அதிகமாய்ப் புரளும் தொடராகிவிட்டது. எரிமலை வெடிப்பு, சுனாமி, ஒலிம்பிக் என, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் அனைத்துச் சம்பவங்களையும், இன்று அறையில் இருந்தபடி எம்மாற் பார்க்க முடிகிறது. விரிந்து கிடந்த உலகம் நம் கைக்குள் வந்துவிட்டாற்போல் தெரிகிறது. விஞ்ஞானத்தின் விரிவால், உலகம் ஒரு கிராமமாய் ஆகிவிட்டதாய்ச் சொல்கிறார்கள். ஆனால், அந்தக் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. கிராமம் என்ற சொற்பிரயோகம், சிறிய இடப்பரப்பு எனும் அர்த்தத்தை மட்டும் கொண்டதல்ல. கூடிவாழ்தல், அக்கறை, நேசிப்பு, என பல விடயங்களையும், அச்சொல் உட்கொண்டு நிற்கிறது. இன்று உலகத்தைக் கிராமம் என்கிறவர்கள் பாவிக்கும், கிராமம் எனும் சொற்றொடருக்குள், மேற்பொருள்கள் அடங்கியிருப்பதில்லை.

(“கிராமம்!…..” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியலமைப்புக்கு ஆலோசனை வழங்க விசேட குழு நியமனம் – வடமாகாண சபை

இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டத்துக்கு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கான வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவசர பிரேரணையாக இந்த விடயத்தை சபைக்கு கொண்டு வந்தார்.

(“புதிய அரசியலமைப்புக்கு ஆலோசனை வழங்க விசேட குழு நியமனம் – வடமாகாண சபை” தொடர்ந்து வாசிக்க…)

அரசாங்கத்தின் ஆக்கத்துக்கு முட்டுக்கட்டை இடமாட்டோம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

புதிய அரசியலமைப்பின் ஊடாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், இது ஆரம்பம் என்பதால், முக்கியமானதாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த விவகாரத்தையிட்டு, முன்வைத்த காலை அரசாங்கம் பின்வைக்கக்கூடாது. அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரிசனையை, பிற்போக்குவாதிகள் தங்களுக்குச் சாதகமாக்குவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கோரியுள்ளது.

(“அரசாங்கத்தின் ஆக்கத்துக்கு முட்டுக்கட்டை இடமாட்டோம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

வெலிக்கடைச் சிறையில் ஞானசார தேரர்

பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம், நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகம் அல்லோல கல்லோலப்பட்டது. நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிடிக்கப்பட்டிருந்த நிலையில், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்ததையடுத்து, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

(“வெலிக்கடைச் சிறையில் ஞானசார தேரர்” தொடர்ந்து வாசிக்க…)

அரசு எப்படி மதிக்கும்?

எங்களையும் எங்களுடைய கோரிக்கைகளையும் நீங்களே மதிக்கவில்லையென்றால் அரசு எப்படி மதிக்கும்?

கிளிநொச்சியில்(21.01.2016) அன்று கவலையளிக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடந்தது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்க முற்பட்ட வேளை ஏற்பட்டது இது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கிளிநொச்சி நகரத்தில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவிருந்த வேளை, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு அணியாகத் திரண்டு வந்தனர். பெண்கள், முதியவர்கள், நடுத்தர வயதுடையவர்கள் என ஏறக்குறைய 50 க்கு மேற்பட்டவர்கள். வந்தவர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை ஏந்தியிருந்தனர். இதன் நோக்கம் தமது பிரச்சினை மீதான கவன ஈர்ப்பாகவே இருந்தது. இப்படி வந்தவர்களை அப்பொழுது அங்கே குழுமியிருந்த பொறுப்பானவர்கள் சந்தித்திருக்க வேண்டும். குறிப்பாக சம்மந்தன் சந்தித்திருப்பது அவசியம். அப்படிச் சம்மந்தனோ அல்லது பொறுப்பான வேறு முக்கியஸ்தர்களோ சந்தித்திருந்தால் அது, குறைந்த பட்சம் அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்திருக்கும். அத்துடன், அவர்களை மரியாதை செய்வதாகவும் அமைந்திருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை.

(“அரசு எப்படி மதிக்கும்?” தொடர்ந்து வாசிக்க…)