தமிழர்கள் இருவரே கருத்துக் கூறியுள்ளனர்

புதிய அரசியலமைப்புக்கு, மக்களின் கருத்துகளை அறிவதற்காகக் கொழும்பில் இடம்பெற்ற முதற்கட்ட அமர்வில், தமிழர்கள் இருவர் மாத்திரமே கருத்துரைத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு, பெரும்பான்மையின மக்களே அதிக ஆர்வத்துடன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்றும், கொழும்பில் இடம்பெற்ற அமர்வில், தமிழ்மொழி பேசுவோர், ஆர்வம் காட்டவில்லை என்றும் அத்தகவல்கள் தெரிவித்தன. வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய இருவருமே கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.

தமிழிலும் தேசிய கீதம் – மைத்திரி, ரணிலே முடிவு

பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள பிரதான சுதந்திரதின வைபவத்தில், தமிழிலும் சிங்களத்திலும் தேசிய கீதத்தைப் பாடுவது குறித்த முடிவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எடுப்பர் என, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, தெரிவித்தார். தேசியக் கீதத்தை தமிழிலும் இசைக்க வேண்டும் என நானும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயகாரவும் மஹிந்தவின் ஆட்சிகாலத்திலிலேயே வலியுறுத்தி வந்தோம். இந்த ஆட்சியின் போதும் நான், வலியுறுத்தினேன்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய கீதம், விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பல ஆலோசனைகளை முன்வைத்தோம். அதில் முதலாவதாக, இலங்கையின் 68ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, தேசிய கீதத்தை தமிழிலும் சிங்களத்திலும் இசைக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம்.

இதனை, ஜனாதிபதியும் பிரதமரும் பரிசீலித்து அதற்கான அனுமதியை வழங்கினர். அதற்கு அமைச்சரவையும் அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றார். முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயகாரவும் மஹிந்தவின் ஆட்சிகாலத்திலிலேயே வலியுறுத்தி வந்தோம். இந்த ஆட்சியின் போதும் நான், வலியுறுத்தினேன்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர், தேசிய கீத விவகாரம் தொடர்பில், நாடாளுமன்றத்தில் பல ஆலோசனைகளை முன்வைத்தோம். அதில் முதலாவதாக, இலங்கையின் 68ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, தேசிய கீதத்தைத் தமிழிலும் சிங்களத்திலும் இசைக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம்.

இதனை, ஜனாதிபதியும் பிரதமரும் பரிசீலித்து அதற்கான அனுமதியை வழங்கவுள்ளனர். இது தொடர்பில், அமைச்சரவையில், கருத்தொற்றுமை கிடைத்திருக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

தனிநபர், பிரதேச, மத, இன வாதம் எழுப்பும் – சங்கொலி!

வடமாகாண முதல்வரை வாராதுவந்த மாமணி, எங்கள் பிரம்மா என்றெல்லாம் எழுதி அவரை பேரவைக்கு இணைத்தலைவராக்கி, தமக்கு பெருமை சேர்த்தவர் தரும் வஞ்சக புகழ்ச்சியால் ஏற்பட்ட மயக்கமா? இல்லை சங்கூதுபவர் சொல்வது கீதை என்ற தடுமாற்றமா? என எண்ணும் அளவிற்கு அண்மையில் வரும் ஆசிரியர் தலையங்கங்கள், சமூகங்களிடையே ஏற்படுத்த கூடிய வேண்டத்தகாத நிகழ்வுகளை தவிர்க்கும்படி, புருசொத்தமனுக்கு புத்திசொல்ல முதல்வர் காட்டும் “அருவருக்கத்தக்க மௌனம்” என்னை விசனப்பட வைக்கிறது. முதலில் தனி நபர்களை தாக்க தொடங்கியவர், தன் பிரதேச வாதத்தை கொழும்பில் ஆரம்பித்தார். விலை போன கொழும்பு தலைமை என சுமந்திரனை சாடினார். பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உட்பட ஜனாதிபதியுடன் சந்திப்பை நடத்தினால், விருந்துகளில் கலந்து கொண்டால் அவர்களை விலை போனவர்கள் என்று வரையறுத்தால், இன்று இருக்கும் எந்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, உறுப்பினர்களும் விலை போனவர்கள் என்று தான் தலையங்கம் எழுதவேண்டும். ஏனென்றால் புலிகள் காலத்தில் அனைவரும் இருந்தது தெற்கில், அரச வசதி மற்றும் பாதுகாப்பில்.

(“தனிநபர், பிரதேச, மத, இன வாதம் எழுப்பும் – சங்கொலி!” தொடர்ந்து வாசிக்க…)

சகல தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணையுமாறு த.வி.கூ அழைக்கிறது

முழு நாடும் ஒரு குழப்பநிலையில் உள்ளது. இல்லாவிடின் சகல இனக்குழுக்களும் அவ்வாறே. ஆண் பெண் ஆகிய நாமனைவரும் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்N;றாம். குழப்ப நிலையில் உள்ள எமது பிள்ளைகள் தமது எதிர்காலத்தைப் பற்றி ஏதும் அறியாமல் கிரிக்கெட்டும், உதைப்பந்தாட்டமும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எம்முள் உள்ள தேசப்பற்று படிப்படியாக குறைந்து செல்கின்றது. அனைவரும் இன்று பதவியை தேடியே அலைகின்றனர் எனக் கூறுவதற்கு என்னை மன்னிக்கவும். சிலருக்கு நாட்டின் மீதான அக்கறை கடைசியாகவும் அதிகாரத்தை கைப்பற்றுவது முன்னிலையிலும் காணப்படுகிறது.

(“சகல தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணையுமாறு த.வி.கூ அழைக்கிறது” தொடர்ந்து வாசிக்க…)

மியான்மார் அதிகார மாற்றத்தைப் புகழ்கிறார் ஜனாதிபதி

மியான்மாரின் ஆட்சி அதிகாரத்தை மாற்றும் செயற்பாட்டை, வெற்றிகரமானது என, ஜனாதிபதி தெய்ன் செய்ன் புகழ்ந்துள்ளார். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை, ஆங் சாங் சூகி தலைமையிலான கட்சியிடம் வழங்குவதற்கு முன்னர், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதி உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இராணுவ ஆட்சியின் கீழ், பல தசாப்தங்களாகக் காணப்பட்ட மியான்மார், ஆங் சாங் சூகியின் வெற்றியைத் தொடர்ந்து, மாபெரும் ஜனநாயக மாற்றமொன்றை நோக்கிப் பயணிக்கவுள்ளது.

(“மியான்மார் அதிகார மாற்றத்தைப் புகழ்கிறார் ஜனாதிபதி” தொடர்ந்து வாசிக்க…)

உலக நடப்பும் ஊரவன் விருப்பும்!!!

உலக நடப்பு:

எரித்திரிய நாட்டில் ஒருஆண் குறைந்தது இரண்டு பெண்களையாவது திருமணம் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என அரசு கடும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாட்டில் ஆண்கள் குறைவாகவும் பெண்கள் அதிகமாகவும் இருப்பதால்தான் இந்த உத்தரவு. எரித்திரிய நாட்டின் மொத்த சனத்தொகை நான்கு மில்லியனாகும்.1998 – 2000ம் ஆண்டுவரை நடைபெற்ற யுத்தத்தில் ஒருலட்சத்து ஐம்பதுஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்தால் ஆண்களின் தொகை குறைந்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பை செய்த அரசு இரண்டு பெண்களையாவது திருமணம் செய்யும் ஆண்களுக்கு பண உதவி மற்றும் வீட்டுவசதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

(“உலக நடப்பும் ஊரவன் விருப்பும்!!!” தொடர்ந்து வாசிக்க…)

யேமனில் சிவிலியன்களைத் தாக்கியது சவூதி

சவூதி தலைமையிலான கூட்டணி, யேமனிலுள்ள பொதுமக்கள் மீது இலக்கு வைத்ததாகத் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை, அக்கூட்டணியின் சில தாக்குதல்கள், மனிதத்துக்கு எதிரான குற்றமாக அமையக்கூடுமெனத் தெரிவித்துள்ளது. பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கையிலேயே, இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சவூதி தொடர்பான அறிக்கையில், கூட்டணியின் 119 தாக்குதல்கள் ஆவணப்படுத்தப்பட்டு, அவை, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மீறல் தொடர்பிலானவை எனக் குறிப்பிடத்தப்பட்டுள்ளது. பல தாக்குதல்கள், பொதுமக்கள் இலக்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட பல் விமானத்தாக்குதல்களாக அமைந்தன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(“யேமனில் சிவிலியன்களைத் தாக்கியது சவூதி” தொடர்ந்து வாசிக்க…)

றொக்கெட் ஏவுதலுக்குத் தயாராகிறதா வடகொரியா?

றொக்கெட்டொன்றை ஏவுவதற்கு, வடகொரியா தயாராகி வருகிறதாவென்ற சந்தேகத்தை, அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். செய்மதிப் படங்களின் உதவியுடனேயே, இந்தச் சந்தேகத்தை அவர்கள் விடுத்துள்ளனர். வடகொரியாவின் செய்மதி ஏவும் இடமென வடகொரியா விவரிக்கின்ற இடமொன்றில், காணப்படும் அதிகளவிலான போக்குவரத்துக் காணப்படுவதாலேயே, இந்த அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள், ஏவுகணை தொடர்பாக உபகரணங்களும், எரிபொருட்களும், அதிகளவிலான போக்குவரத்தும் காணப்படுவதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நிலவெடிப்பு ஏற்பட்ட பிரதேசத்தில் ஆராய்ச்சி ஆரம்பம்

அச்சுவேலி, நவக்கிரி பகுதியில் கடந்த 23ஆம் திகதி முதல் ஏற்பட்டு வரும் நிலவெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழுள்ள தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் நேற்று புதன்கிழமை (27) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

(“நிலவெடிப்பு ஏற்பட்ட பிரதேசத்தில் ஆராய்ச்சி ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

புலிச் சந்தேகநபர்கள் 3 பேர் விடுதலை

பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்கள் மூவரை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், நேற்று புதன்கிழமை(27) விடுவிக்கப்பட்டனர்.

(“புலிச் சந்தேகநபர்கள் 3 பேர் விடுதலை” தொடர்ந்து வாசிக்க…)