ஆண்களாகப் பிறந்து பெண்களாக வாழ்ந்தோர் சவூதிச் சிறையில் அடித்துக் கொலை!

(எஸ். ஹமீத்.)

பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் அம்னா ,வயது 35 . மீனோ, வயது 26 . இவ்விருவரும் சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் பார்த்திருக்க, கோணிச் சாக்குகளில் கட்டப்பட்டு, தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு, இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

(“ஆண்களாகப் பிறந்து பெண்களாக வாழ்ந்தோர் சவூதிச் சிறையில் அடித்துக் கொலை!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி சிறீதரன்

தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி சிறீதரனுக்கு இப்ப ஒரு நோய் பிடித்திருக்கு. எந்த விழாவிலும் தானே முன்னுக்கு நிற்க வேண்டும் என்று. இதனால் தமிழ் மக்களுக்கு எதும் தீங்கு நடக்குமா என்று அவர் யோசிப்பதில்லை. கவலைப்படுவதும் இல்லை. மாவீரர் நிகழ்வு என்றால் தானே தீபம் ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிப்பார். கோயில் விழா என்றால் தனக்கு பரிவட்டம் கட்ட வேண்டும் என்பார்.
ஆமி தளபதிக்கு விழா எடுத்தாலும் அதைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. தளபதிக்கு பரிவட்டம் கட்டி கௌரவித்தாலும் அதையிட்டு அவருக்கு கவலை இல்லை.

(“தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி சிறீதரன்” தொடர்ந்து வாசிக்க…)

வாழும் கியூபா தலைவர் பிடல் காஸ்ரோ

உலகின் இயற்கை விவசாயத்தில் முக்கிய இடம் வகிக்கும் நாடு கியூபா மட்டுமே, இரசாயன உணவுகளையும் தனது வாழ்நாளில் வாழ்ந்த காலத்தைவிட அதிக காலம் குளிர்சாதன பெட்டிக்குள் இருக்கும் உணவு பதார்த்தங்களை உண்ணும் இந்த நவீன உலகில் அதிக இயற்கை உற்பத்திகள் உள்ள ஒரு நாடு என்ற ஒரு பெருமையை கியூபா கொண்டுள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதத்துடன்  ஆட்சி செய்த புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா வின் ஆட்சியில் (1959) அதிக ரசாயன உரங்கள் காரணமாக அழிந்து வந்த விவசாய நிலத்தை இயற்கையின் உர வகைகளை பயன்படுத்தி உலகின் இயற்கை உணவு உற்பத்தி செய்யும் நாடுகளில் முதல் நாடாக ஆக்கி விட்டு போயிருக்கிறார்.

(“வாழும் கியூபா தலைவர் பிடல் காஸ்ரோ” தொடர்ந்து வாசிக்க…)

சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக அரசியல் அரங்கில் கலகக்காரர்களுக்கு தனியான இடமுண்டு. கலகக்காரர்கள் எல்லோரும் ஓரே இயல்புடையவர்கள் அல்லர். அவர்கள் வாழ்ந்த காலம், இடம், உலகச் சூழல் என்பனவும் அவர்களின் நடத்தையுமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. கலகக்காரர்களே உலக அரசியல் அரங்கை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதைத் துணிந்து சொல்லவியலும். அவர்கள் இல்லாவிடின் ஒற்றைப் பரிமாண உலக அரசியலை சத்தமின்றி ஏற்று நடக்கும் இயல்புடனேயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால், உலகம் இப்போது அவ்வாறு இயங்குவதில்லை. அவ்வாறு இயங்குவதையே அதிகார மையங்கள் விரும்புகின்ற போதும் அது சாத்தியமாவதில்லை.

(“சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன்” தொடர்ந்து வாசிக்க…)

வெளிவந்துவிட்டது வானவில் 74….: புதிய அரசியலமைப்பு ஜே.ஆரினதை விட மோசமாக இருக்கப் போகிறது!

மாகாண சபைகளை கலைக்க அல்லது அவற்றின் அதிகாரங்களை மீளப்பெற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில்
அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இணக்கம் தெரிவித்திருக்கிறது என அரசியலமைப்புச் சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விக்கிரமரத்ன, நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும்
நாட்டின் சுதந்திரம் என்பனவற்றுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு
மாகாண சபையையும் கலைப்பதற்கோ அல்லது அதனது அதிகாரங்களை மீளப் பெறுவதற்கோ மத்திய அரசுக்கு அதிகாரம்
அளிக்கும் யோசனையொன்றை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். (தொடர்ந்து வாசிக்க….)

தொழில்சாலைகளை திருப்பி அனுப்பி வடமாகாண சபையின் சாதனை!

வடமாகாண சபை இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.எந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளையும் என்ன காரணங்களை காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை. என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.

(“தொழில்சாலைகளை திருப்பி அனுப்பி வடமாகாண சபையின் சாதனை!” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கிலும் கிழக்கிலும் கூட திராவிட மொழிகள்..

இன்றைய The Hindu நாளிதழில் ஒரு செய்தி. மே.வங்க மாநிலத்தின் வட புலத்தில் (Dooars) வசிக்கும் ‘ஓரோய்ன்’ (Oraon) எனும் பழங்குடியினர் பேசுகிற ‘குருக்’ (Kurukh) எனும் மொழியை திருனாமுல் காங்கிரஸ் அரசு மாநில ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. அப்பகுதியில் வாழும் 17 இலட்சம் பழங்குடியினர் அம்மொழியைப் பேசுபவர்களாம். மம்தா அரசு மேற்கொண்டுள்ள இந் நடவடிக்கை அம் மொழியை அழிவின் விளிம்பிலிருந்து காப்பற்றியுள்ளது. பாராட்டுக்கள்.

(“வடக்கிலும் கிழக்கிலும் கூட திராவிட மொழிகள்..” தொடர்ந்து வாசிக்க…)

ஆர்மியோடு சிறியரை சரியாசனம் வைத்த ……நல்லிணக்கம்!!!

கோவிலில பரிவட்டம் கட்டுறதுக்கு ஆர்மியை கூப்பிட்ட அந்த கோயில் நிர்வாகம் திருந்தணும். இல்ல அவங்களுக்குத்தான் அறிவில்ல எண்டு பார்த்தால் , மேடைவழிய ,நேர்சரி விளையாட்டுப்போட்டிகூட மிச்சம்வைக்காமல் கிடைக்கிற மேடையெல்லாம் வாய்கிழிய தேசியம் கதைக்கிற ( கவனிக்க “கதைக்கிர ” மட்டும்) சிறியருக்காவது புத்திவேண்டாம்??
ஆர்மியை கூப்பிட விடாமல் செய்திருக்கணும், இல்ல ஆர்மிக்கு பரிவட்டம் கட்டினால் தான் வரமாட்டன் எண்டு சொல்லி வெளியில நிண்டிருக்கணும். அப்ப்டி வெளியில நிண்டிருந்தால் சனத்துக்கும் ஒரு பாடமாக அமைஞ்சிருக்கும். இனிமேல் இப்படி செய்யாமல் விட்டிருப்பினம். ஆனால் , முன்னுக்கு நிண்டு விலாசம் காட்டணும் எண்டு துடிக்கிற சிறியர் , தான் வெளியில போனால், இன்னொருத்தன் வந்திடுவான் எண்ட பயத்தில ஆர்மியெண்டால் என்ன் எண்டு எங்கட வன்னி மண்ணிலயே அவனோடு சேர்ந்து பரிவட்டம் கட்டி இனத்தை கேவலப்படுத்துறார்.
ஜமீன் டிசைன் அப்படி

11ஆயிரம் புலிகள் இணைந்து இலங்கையில் புதிய தமிழர் கட்சி!

விடுதலைபுலிகள் அமைப்பின் பழைய உறுப்பினர்கள் இணைந்து திரிகோணமலையின் சாம்பூரில் “மறுவாழ்வளிக்கப்பட்ட ஐக்கிய புலிகள் முன்னணி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். தமிழர்கள் பெயரில் இயங்கும் பிரதான கட்சிகள் தமிழர்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாததால் மக்கள் விரக்தியடைந்துள்ளதாக புதிய அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அவர்களுக்கு மாற்று சக்தியாக இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதில் தற்போது வரை புலிகள் அமைப்பில் இருந்து விலகிய 11 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இந்த அமைப்பின் உதயத்தால் மீண்டும் புலிகள் அமைப்பு உருவாகிவிடுமோ என்ற அச்சத்தில் இலங்கை அரசு உள்ளதாக தி இந்து ஆங்கில இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என் தலைக்கு ரூ. 1 கோடி பரிசா? : மிரட்டலுக்கு பயப்படமட்டேன் என்கிறார் பினராயி

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1கோடி பரிசளிக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரிகளின் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.-வுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார். இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் குந்தன் சந்திரவாத் என்பவர், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்படும் என்றார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து குந்தன் சந்திரவாத் கூறுகையில், நான் தெரிவித்தது என்னுடைய சொந்த கருத்து என்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “சங்பரிவார் அமைப்புகள் ஏற்கனவே பலரது தலைகளை எடுத்துள்ளது. அவர்கள் மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை” என்றார்.