கண்டியில் இதுதான் நடந்த சம்பவம்.

திகன, தெல்தெனிய, மெதமஹநுவர சம்பவத்தில அடித்துக் கொல்லப்பட்ட சிங்கள இளைஞனின்,
தந்தை சீனி நோயால் காலை இழந்தவர்.
தாய் பாரிசவாதத்தால் முடக்கப்பட்டவர்.
தங்கை குடும்ப சூழலால் மனநோயாளியானவர்.
பொதுப் போக்குவரத்து குறைந்த பிரதேசமாகையால் சில நேரங்களில் பள்ளி ஜமாத்தாரை தனது லொறியில் பிரதான பாதைக்கு இலவசமாக ஏற்றிச் செல்வான்.
வறுமையான குடும்பம்.

(“கண்டியில் இதுதான் நடந்த சம்பவம்.” தொடர்ந்து வாசிக்க…)

சிரித்துச் சிரித்தே செத்தொழிகிறது சிறுபான்மை இனம்

கண்டிக்கலவரத்தின் தொடர்ச்சியாய்
உயிரோடு ஒரு முஸ்லிம் வாலிபன் சிங்களக்காடையர்களால் எரித்துக்கொல்லப்பட்டிருக்கிறான் இதைக்கண்டு சில தமிழர்கள் சந்தோசமடைந்து பதிவுபோடுகின்றனர். முஸ்லிம்களின் கடைகள் சூறையாடப்பட்டு எரியூட்டப்படுவதைக்கண்டு சிலர் கைகொட்டி ரசிக்கின்றனர். சபாஷ் இப்பிடித்தான் செய்யோனும் சோனிக்கு என்று சிங்களவனுக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.

(“சிரித்துச் சிரித்தே செத்தொழிகிறது சிறுபான்மை இனம்” தொடர்ந்து வாசிக்க…)

திரு பத்மனாதன் மறைவு!

இலங்கையின் நிர்வாகத்துறையில் பல்வேறு துறைகளில் பணியாற்றியவரும் 1983 வெலிகடை சிறை படுகொலையின் பின்னர் மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சிறை தகர்ப்பில் தப்பியவர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு வெலிகடையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் எம்முடன் சக கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவருமான திரு பத்மனாதன் மறைவு. 1987 இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் விடுதலையான திரு பத்மனாதன் வடக்கு கிழக்கு மாகாண அரசாங்கத்தின் புனர்வாழ்வு புனர் நிர்மாண அமைச்சின் செயலாளராகவும் சந்திரிகா அவர்களின் ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சின் உதவி செயலராகவும் பணியாற்றியவர். அன்னாருக்கு எம் அஞ்சலிகள். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறோம்!

கொஞ்சம்தான் நீளம். படித்துவிடுங்கள்…

புரட்சி முடிந்து

ரஷ்யாவில் போல்ஷிவிக்குகளின் அரசாங்கம்.

பக்கோமோவ் ஒரு விவசாயி.

புரட்சித்தலைவர் லெனினைப் பார்த்தே ஆகவேணுமென்று
மாஸ்க்கோவிலிருந்த அவரது ஸ்மோல்னி அலுவலகத்துக்கு
வந்தேவிட்டார்.

(“கொஞ்சம்தான் நீளம். படித்துவிடுங்கள்…” தொடர்ந்து வாசிக்க…)

கண்டியில் நடப்பது அரசியல் கலவரம்!

புதிய ஆட்சி வந்த பின்னர், உள்ளூராட்சி தேர்தல் வரை, இப்படியான ஒரு குமுறலும் நாட்டில் இருக்கவில்லை. உள்ளூராட்சி தேர்தல் முடிவின் பின் வென்றவர்கள் , இருக்கும் ஆட்சியை எறிந்து தமது ஆட்சியை கொண்டு வர முடியும் எனும் நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டார்கள். தேர்தல் கால மேடைகளில் “புதிய அரசை மாற்றுவதற்கான வாக்கெடுப்பு” என்று பேசியே மக்கள் மனதில் விசத்தை விதைத்தார்கள். அதன் பிரதிபலனே இந்த கலவரங்களுக்கான பின்னணி.

(“கண்டியில் நடப்பது அரசியல் கலவரம்!” தொடர்ந்து வாசிக்க…)

கர்ப்ப நிலத்தில் சிந்திய சர்ப்ப விடம்

பிரான்ஸில் நடைபெற்ற குணா கவியழகனின் ‘கர்ப்பநிலம்” நூல் வெளியீட்டு நிகழ்வில் அவர் ஆற்றிய சில அற்புதமான கருத்துக்களை முகநூலில் காணக்கிடைத்தது. (நன்றி: யோகு) சிலிர்த்துப்போய் கணனியின் மீது சில்லறையை விட்டெறியாததுதான் குறை. பேசுகிறார், பேசுகிறார், பேசிக்கொண்டே போகிறார். அடுத்த அன்டன் பாலசிங்கம் கணக்கில் பேசுகிறார். நடு நிசியில் கனவு காலைந்து எழுந்திருந்து பிதற்றுவதைப்போல, ஒரு பெரும் விடுதலைப்போராட்ட அமைப்பின் முக்கியமான முடிவுகள் குறித்தெல்லாம் சகட்டுமேனிக்கு பேசிதள்ளுகிறார். இப்போதுதான் விடுதலைப்புலிகள் அமைப்பை யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்களே, குணா கவியழகன் எல்லாம் ஒரு பொருட்டா என்ன? இருந்துவிட்டு போகட்டும். முன்னுக்கு இருந்து கேட்பவர்கள் எல்லோரும் கதிரை நுனியில்தான் கிடக்கிறார்கள்.

(“கர்ப்ப நிலத்தில் சிந்திய சர்ப்ப விடம்” தொடர்ந்து வாசிக்க…)

திரிபுரா தோல்வி சொல்லும் பாடம்: எதிர்க்கட்சிகளுக்கு அச்சுதானந்தன் எச்சரிக்கை

நாடு பல்வேறு ஆபத்தான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஆதலால், சங் பரிவார் அமைப்புகளை தோற்கடிக்க மதச் சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒரே அணியாக இணைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

(“திரிபுரா தோல்வி சொல்லும் பாடம்: எதிர்க்கட்சிகளுக்கு அச்சுதானந்தன் எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

விடை பெறுகிறார் ‘எளிமையான முதல்வர்’ மாணிக் சர்க்கார்

 

திரிபுராவில் இடதுசாரி கூட்டணி அரசு 25 ஆண்டுகளுக்கு பிறகு பதவியில் இருந்து இறங்குகிறது. அங்கு 20 ஆண்டுகாலம் முதல்வர் பதவி வகித்த எளிமையான முதல்வர் மாணிக் சர்க்கார் விடை பெறுகிறார். நாடுமுழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரிபுரா மாநில சட்டப்பேரவை முடிவுகள் வெளியாகி வருகின்றன. அம்மாநிலத்தி்ல் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் வேட்பாளர் மறைவால் ஒரிடத்தில் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

(“விடை பெறுகிறார் ‘எளிமையான முதல்வர்’ மாணிக் சர்க்கார்” தொடர்ந்து வாசிக்க…)

உடைகிறது தமிழ் மக்கள் பேரவை… போய் வாருங்கள் என ஒரு வரியில் வழியனுப்பிய விக்னேஸ்வரன்!

தமிழ் மக்கள் பேரவையில் பெரும் உடைவு ஏற்படுமென தெரிகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி விரைவில் வெளியேறலாமென தெரிகிறது. அவர்களை வெளியேற்றும் இரகசிய முயற்சியொன்றையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ளார். நேற்றைய தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை.

(“உடைகிறது தமிழ் மக்கள் பேரவை… போய் வாருங்கள் என ஒரு வரியில் வழியனுப்பிய விக்னேஸ்வரன்!” தொடர்ந்து வாசிக்க…)