‘2.0’ வேண்டாம்; விஜய் படம்தான் வேண்டும்: கேரள பழங்குடி குழந்தைகளுடன் ‘சர்கார்’ படம் பார்த்த வயநாடு துணை கலெக்டரின் நெகிழ்ச்சிப் பதிவு

கேரளாவில் வயநாடு மாவட்டத்தின் துணை ஆட்சியராக இருப்பவர் உமேஷ் கேசவன். இவர் தனது முகநூல் பக்கத்தில் மனந்தாவாடியில் உள்ள பழங்குடி குழந்தைகளுடன் ‘சர்கார்’ திரைப்படத்துக்குச் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

(“‘2.0’ வேண்டாம்; விஜய் படம்தான் வேண்டும்: கேரள பழங்குடி குழந்தைகளுடன் ‘சர்கார்’ படம் பார்த்த வயநாடு துணை கலெக்டரின் நெகிழ்ச்சிப் பதிவு” தொடர்ந்து வாசிக்க…)

மைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்

(முகம்மது தம்பி மரைக்கார்)

கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். “உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று, ரணில் தரப்பிடம் ஜனாதிபதி கூற, மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை, நாடாளுமன்றில் ரணில் தரப்பு நிரூபிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. கேட்டால், ‘அதுதான் இது’ என்கிற மாதிரி – பதில் வந்து கொண்டிருக்கிறது.

(“மைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 17)

(Thiruchchelvam Kathiravelippillai)
தம்பலகமத்திலிருந்து மக்கள் அச்சம் காரணமாக கிண்ணியாவிற்கு இடம்பெயர்ந்த போது அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று தமது ஆதரவை முஸ்லிம் மக்கள் வழங்கினர்.
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் கிண்ணியாவில் சுரங்கல், கச்சக்கொடித்தீவு, அரைஏக்கர், காக்காமுனை, குறிஞ்சாக்கேணி, முனைச்சேனை ஆகிய ஊர்களில் அதிகளவிலும் மஹாமம்மாதிரிக்கிராமம், சின்னக்கிண்ணியா, பெரிய கிண்ணியா போன்ற ஊர்களிலும் அடைக்கலம் புகுந்தார்கள். இதற்கான காரணம் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே அக்காலத்தில் மிக நெருங்கிய தொடர்புகள் , உறவுகள் இருந்தமையாகும்.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 17)” தொடர்ந்து வாசிக்க…)

மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை?

(ஜெரா)

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது, மருதோடை – நாவலடி எனும் கிராமம். அதாவது, வடமாகாணத்தின் எல்லைக் கிராமம். அதன் மறுகரையில், அநுராதபுரம் ஆரம்பிக்கிறது. தமிழ், சிங்களம் என்ற இரு இனங்களையும் நிலவியல்பு அடிப்படையில் இயற்கையாகவே பிரித்து வைத்திருக்கும் இந்த எல்லைக்கோட்டை சிதைத்தமையால் உண்டானதே, 2009 வரைக்கும் நீடித்த இனப்போர். இப்போது போர் முடிந்து 10 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது இலங்கை. இந்நிலையில், இனப்போருக்குத் தூபமிட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான மருதோடை எப்படியிருக்கிறது?

(“மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை?” தொடர்ந்து வாசிக்க…)

நவதாராளவாதத்துக்கு எதிரான இறையாண்மையைப் பரப்புதல்

(அகிலன் கதிர்காமர்)

மூன்று வாரங்கள் நீடித்த பரிகாசமான அரசாங்கமும் நாடாளுமன்றத்துக்குள் காணப்பட்ட மூர்க்கத்தனமான செயற்பாடுகளும், பாரதூரமான அரசியல் நெருக்கடிக்குள் நாட்டைத் தள்ளியுள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகம், அரசமைப்புச் சட்டபூர்வத்தன்மை ஆகியன தொடர்பான கேள்விகளிலேயே, ஊடகங்களின் கவனமும் பொதுமக்களின் கலந்துரையாடலும் கவனஞ்செலுத்துகின்ற போதிலும், இந்த நெருக்கடியின் அடிப்படையான காரணங்களாக, பல தசாப்தங்களாகத் தொடர்ந்த நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் மூலமாக உருவாக்கப்பட்ட ஸ்திரமற்ற நிலைமையும் உடைமையழிப்பும் காணப்படுகின்றன.

(“நவதாராளவாதத்துக்கு எதிரான இறையாண்மையைப் பரப்புதல்” தொடர்ந்து வாசிக்க…)

மோடி, ராகுல் தலைமைக்கு, சவால் விடும் ஐந்து மாநிலத் தேர்தல்கள்

(எம். காசிநாதன்)

‘குட்டித் தேர்தல்’ போல், ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்டங்களாக, ​டிசெம்பர் மாதம் வரை நடைபெறும் இந்தத் தேர்தல்களில், 669 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். மத்திய பிரதேசம், இராஜஸ்தான், தெலுங்கானா, சட்டிஷ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடக்கும் தேர்தல்கள், பாரதிய ஜனதாக் கட்சிக்கும், (பா.ஜ.க) காங்கிரஸ் கட்சிக்கும், ஏழாம் பொருத்தமான போட்டியை உருவாக்கியுள்ளன.

(“மோடி, ராகுல் தலைமைக்கு, சவால் விடும் ஐந்து மாநிலத் தேர்தல்கள்” தொடர்ந்து வாசிக்க…)

நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு

நான்காவது நாளாக இன்று 1 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்தார். கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானித்தமைக்கு அமையவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

தோழர் நாபாவின் மெருகூட்டப்பட்ட சிலை திறப்பு விழா

திருகோணமலை 19/11/2018 அன்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி நடத்திய தோழமை தினத்தில் கடல்முக வீதி மாவட்ட காரியாலயத்தில் தோழர் பத்மநாபா அவர்களின் உருவச்சிலை திறக்கப்பட்டு மாலை அணிவித்ததுடன் குளக்கோட்டன் மண்டபத்தில் தோழமை தின நிகழ்வு நடத்தப்பட்டு மக்களுக்கு கண் பரிசோதனை செய்து இலவச மூக்குக்கணடியும் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

19 நவம்பர்

நாபா என்ற மானிடன்
அந்த மனிதர் மிக மிக எளிமையானவர். மனித குலத்தின் மகத்தான லட்சியங்களை கனவுகளில் நிறைத்தவர்.
அந்த கனவுகள் நபாவை மானிடவிடிவு என்னும் மகத்தான தேடலுடன் ஒன்றுரை தசாப்தங்கள் அலைய வைத்தது.
எளிமையும் ,சமூக மாற்றம் கருதிய பேரார்வமும்- சர்வதேச சகோதரத்துவமும் நபாவின் நெஞ்சில் நிரம்பி வழிந்தன.
மாபெரும் தலைவர் மாத்திரமல்ல . மனிதர்களின் சின்ன சின்ன விடயங்களையும் புரிந்து கொண்ட மானிடன்.
(“19 நவம்பர்” தொடர்ந்து வாசிக்க…)